Wednesday, February 3, 2010

B.V Narsimha Swami ji-Efficient System For Sai Prachar-Part 1.


அகில இந்திய சாய் சமாஜம் -பாகம்-1

சாயி பாபாவின் பெயரை பரப்ப 1940 ஆம் ஆண்டு நரசிம்மஸ்வாமி அகில இந்திய சாய் சமாஜம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார் . அவர் பயணம் செய்த இடங்களில் இருந்த சாயி பக்தர்கள் அங்காங்கே சாயி சமாஜங்களை துவக்கினர் . அவை உபசமாஜம் என்ற பெயர் கொண்டு அகில இந்திய சாயி சமாஜத்தின் கிளைகளாக செயல்பட்டன .

முதலில் அகில இந்திய சாய் சமாஜமாஜத்திற்கு சொந்த இடம் இல்லாமல் இருந்ததினால் , சென்னை , திருவிளக்கேணியில் இருந்த வெங்கடாசல முதலி தெருவில் இருந்த வாடகை இடத்தில் அது துவக்கப்பட்டு , அதன் பின் மயிலாப்பூரில் டி .எஸ் .வீ .கோவில் தெரு என்ற இடத்தில் மாற்றப்பட்டது . அது பேய் குடி இருந்த வீடு என்ற செய்தி பரவி இருந்ததினால் அந்த இடம் சுலபமாகக் கிடைத்தது . அவர்கள் அங்கு சென்ற பின் அந்த பேய் ஓடிவிட்டதாம் .
ஸ்வாமிஜியின் அறிவுரைப்படி இரண்டு பஜன் மண்டலிகள் அங்கு துவங்கின .
1) நரசிம்ம ஸ்வாமிஜி துவாரகாமாயி பிரதம சிஷ்ய கோஷ்டி என்பது ரெயில்வேயில் இருந்த சுந்தரேச்வர ஐயர் என்பவர் தலைமையில் அமைந்தது
2) சி .ஆர். நரசிம்ம ராகவன் என்பவர் தலைமையில் திருவிளக்கேணி சாய் பஜன் மண்டலி .
3) 1943 ஆம் ஆண்டில் அகில இந்திய சாய் சமாஜம் 126, பிராடிஸ் ரோடு என்ற இடத்துக்கு மாறியது . அங்கிருந்துதான் படங்கள் , லாகட்டுகள் , மோதிரங்கள் , பிரசாரப் புத்தகங்கள் போன்றவை அனைத்து இடங்களுக்கும் விற்பனை ஆயின .
1953 ஆம் ஆண்டு சாயி சமாஜத்திற்கு சொந்த இடம் அமையும் முன் ஒவொரு வாரமும் ஒவ்வொரு சாயி பக்தர் வீட்டில் அனைத்து சாயி பக்தர்களும் கூடுவார்கள் . அந்த வீட்டுக்காரருக்கு ஒரு சாயிபாபா படத்தை நரசிம்மசுவாமி தருவார் . நாம சங்கீர்த்தனைகளும் , பஜனைகளும் அங்கு நடக்கும் . முடிவில் சாயி மகிமாவை குறித்து நரசிம்மசுவாமி சொற்பொழிவு ஆற்றுவார் . இப்படியாக சாயி பாபாவின் பெருமையைப் பரப்பும் பிரசார யுக்தியை அவர் அமைத்து இருந்தார் .
இடமிடமாகப் பயணம் செய்துவரும் வாழ்கை அலுத்துப் போனதினால் , எங்காவது ஒரு இடத்தில் சாயினாதருடைய சமாஜம் அமைக்க வேண்டும் என நரசிம்மசுவாமி விரும்பினார் . அப்போது மயிலாப்பூர் என்ற இடத்தில் ஒரு வீடு காலியாகக் கிடப்பதாகக் கேள்விப்பட்டவர் அதை சற்றும் தாமதிக்காமல் எடுத்துக் கொண்டு விட்டார் . அந்த வீடும் வியாழக் கிழமைகளில் வரும் பஜனை மண்டல பக்தர்களுக்கு பற்றாமல் போய்விட தற்போது ராமகிருஷ்ணா மடம் என அழைக்கப்படும் சாலையில் இருந்த டாக்டர் நஞ்சுண்ட ராவ் என்பவர் வீட்டிற்கு மாற்றினார் . ஆனால் நஞ்சுண்டராவின் மகன் தான் வேலையில் இருந்து ஒய்வு பெற்றதும் அந்த வீட்டை காலி பண்ணச் சொல்ல , அப்போது வக்கீலாக இருந்த தியாகராஜன் என்பவர் வெங்கடேச அக்ரஹாரம் என்ற இடத்தில் இருந்த தன் வீடு முன் இருந்த திறந்த இடத்தை உபயோகித்துக் கொள்ளுமாறு கூற அங்கு பந்தல் போடப்பட்டு 1949 ஆம் ஆண்டில் சாயி பிரசார வேலைகள் அங்கு நடக்கத் துவங்கின .

ஆனால் நரசிம்மச்வாமிஜி முடிவு செய்தார் , இனி சமாஜத்திற்கு சொந்த இடம் வேண்டும் . பக்தர்கள் கொடுத்த நன்கொடையைக் கொண்டு இப்போது சாயி ஆலயம் உள்ள இடத்தில் இருந்த நிலத்தை இருபத்தி ஒன்பதாயிரத்து எழுநூற்றி எழுபது ரூபாய்க்கு 1949 ஆம் ஆண்டில் வாங்கினார் . 1952 ஆம் ஆண்டு குரு பூர்ணிமா தினத்தன்று சுவாமிஜி சாயி சமாஜத்தை அந்த இடத்துக்கு மாற்றினார் . 1953 ஆம் ஆண்டு மூல ஆலயத்தின் கர்பக்ரஹமும் தயார் ஆயிற்று . சுவாமிகளின் விருப்பப்படி அந்த ஆலயத்தின் கும்பாபிஷேகமும் 17.10.1953 அன்று நடந்தேறியது . அங்கு வழிபாடு பூஜைகள் துவங்கின . ஆலயத்தின் முன்புறம் இருந்த வெற்றிடத்தின் மீது பக்தர்களுக்கு வசதியாக இருக்க பெரிய கூரை போடப்பட்டது.
1954 ஆம் ஆண்டு கோர்ட் உத்தரவின் ஆணைப்படி அந்த ஆலயத்தின் கிழக்குப் பகுதியில் இருந்த பத்து ஏக்கர் நிலம் விற்பனைக்கு வர பல நன்மைகளை மனதில் கொண்டு நரசிம்மசுவாமி அந்த இடத்தை மிகவும் சிரமப்பட்டு வாங்கினார் .
……………தொடரும்
Posted so Far :

B. V Narsimha Swamiji-Introduction .
Chapter 1-B.V Narsimha Swami ji-Birth and Childhood.
Chapter 2.-B.V Narsimha Swami ji -Life in Salem.
Chapter 3-B.V Narsimha Swami ji-Public Life.
Chapter 4-B.V Narsimha Swami ji- Turning Point .
Chapter 5.B.V Narsimha Swami ji-In Search of God.
Chapter 6. B.V Narsimha Swami ji -Life in Ramana Maharshi Ashram.
Chapter 7. B.V Narsimha Swamiji-Towards Pandharpur.
Chapter 8. B.V Narsimha Swami ji -From 1932-1934 part 1.
Chapter 9.B.V Narsimha Swami ji-From 1932-1934 continued.
Chapter 10.B.V Narsimha Swami ji-Life in Sakori.
Chapter 11. B.V Narsimha Swami ji-Face to face with Master .
Chapter 12. B.V Narsimha Swami ji-Sai Prachar.
Chapter 13.B.V Narsimha Swamiji-Baba Himself Favors the Movement.
Chapter 14. B.V Narsimha Swami ji-Early Days of His mission .
Chapter 15. B.V Narsimha Swami Ji-Only Aim.
Chapter 16.B.V Narsimha Swami ji-Early Days of His Mission
Chapter 17.B.V Narsimha Swami ji -Lockets and Calenders.
Chapter 18. B.V Narsimha Swami ji-Lectures and Discourses.
Chapter 19.B .V Narsimha Swami ji-Meeting The Disciple.


Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.