Monday, February 22, 2010

B.V Narsimha Swami ji-Swami Ji's Mahasamadhi.


நரசிம்ம ஸ்வாமிகளின் மகாசமாதி


1956 ஆம் ஆண்டுவரை சாயி பிரச்சாரத்தை மிகத் தீவீரமாக நடத்திய நரசிம்ம ஸ்வாமியின் ,முயற்சியினால் சீரடி மட்டுமே அறிந்திருந்த சாயி பாபாவின் பெருமை அனைத்து இடங்களிலும் பரவியது. அகில இந்திய சாயி சமாஜம் அதற்குள் நானூறுக்கும் மேற்பட்ட உபசமாஜங்களை தன்னுள் அடக்கிக் கொண்டது. இந்தியாவின் பல இடங்களில் சாயி ஆலயங்கள் தோன்றியவண்ணமே இருந்தன.ஒவொருநாளும் சாயி பக்தர்கள் பெருகிக்கொண்டே இருந்தனர். ஆயிரக்கணக்கான சாயி தொண்டர்களையும் நரசிம்ம ஸ்வாமி நிறுவி இருந்தார். அவருடைய வாரிசாக ராதாக்ருஷ்ண ஸ்வாமிகள் உரு எடுத்தார்.

1956 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பன்னிரண்டாம் தேதியன்று ஸ்வாமிகளின் எண்பத்தி மூன்றாவது பிறந்தநாள் அவருக்கு உடல் நலம் சரியாக இல்லை என்பதினால் சாதாரணமாகவே கொண்டாடப்பட்டது. அவருடைய உடல் நிலை மோசமாகி அக்டோபர் மாதம் எட்டாம் தேதியன்று ஜுரம் வந்துவிட்டது. கைகளை அசைக்கக் கூட முடியவில்லை. படுத்த படுக்கையில் விழுந்தார். ஆனாலும் படுக்கையில் இருந்தபடியே சாயி சுத்த பத்திரிகை விவகாரங்களை கவனித்தார். தனக்கு வந்த கடிதங்களுக்கு பதில் எழுதினர்.
அடுத்த ஏழு நாட்களில் வயிற்று உபாதை ஏற்பட்டு மலம் கழிக்கவே சிரமப்பட்டார். அக்டோபர் மாதம் பத்தொன்பதாம் தேதி விடியற்காலை 3.45 மணிக்கு --அஷ்வைஜா பூர்ணிமா தினத்தன்று --தமது பூத உடலைத் துறந்து சமாதி அடைந்தார்.

தான் மரணம் அடைவதற்கு முன் தன்னுடைய அனைத்து ஆன்மீக சக்திகளையும் தன்னுடைய சீடரான ராதாகிருஷ்ண சுவாமிஜிக்கு கொடுத்துவிட்டார். அவர் மறைந்த பொழுது ராதாகிருஷ்ண சுவாமிஜி பெங்களூரில் இருந்தார். 1956 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பதினெட்டாம் தேதியன்று மாலையிலேயே ராதாகிருஷ்ண ஸ்வாமிஜிக்கு நரசிம்ம ஸ்வாமியின் உடல் நிலை மோசமாகிவிட்டது எனத் தெரிந்தது. ஆகவே இரவு முழுவதும் அவர் தியானத்தில் அமர்ந்துவிட்டார். விடியற்காலை நான்கு மணிக்கு வெளியில் வந்தவர் தன்னுடைய சீடர்களிடம் '' நம்முடைய குருதேவர் தன்னுடைய சக்திகள் அனைத்தையும் என்னிடம் தந்துவிட்டு சற்றுமுன் மறைந்து விட்டார். '' அதைக் கூறிய பின் உடனே சென்னை செல்ல ஏற்பாடுகள் செய்யுமாறு கூறினார்.

1936 ஆம் ஆண்டு ஆகஸ்ட் இருபத்தி ஒன்பதாம் தேதியன்று சாயிபாபா தன்னுடைய சக்தியை நரசிம்ம ஸ்வாமிக்கு தந்தார். இன்று, அதாவது 1956 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பத்தொன்பதாம் தேதியன்று அது போலவே நரசிம்ம ஸ்வாமியும் தன்னுடைய சக்தியை தன்னுடைய சீடரான ராதாகிருஷ்ண சுவாமிஜிக்கு தந்துவிட்டார். காலையில் அவர்கள் இறுதி யாத்திரையில் கலந்து கொள்ள சென்னை சென்றனர்.

நரசிம்ம ஸ்வாமி மறைந்த செய்தி அனைத்து இடங்களிலும் பரவியது. ராய்டர் என்ற செய்தி நிறுவனம் அந்த செய்தியை அனைத்து உலகிற்கும் பரப்பியது. சாயி சமாஜங்களிலும், உபசமாஜங்களிலும் விசேஷ பிரார்த்தனைகள் நடைபெற்றன. சாயியை உலகிற்கு தெரிய வைத்த மகான் மறைந்தது அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியது.

1956 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முப்பத்தி ஒன்றாம் தேதியன்று அகில இந்தியா சாயி சமாஜத்தில் நரசிம்ம ஸ்வாமி இரங்கல் கூட்டம் நடந்தது। அதற்கு சுத்தானந்த பாரதி ஸ்வாமிகள் தலைமை வகித்தார். அவரை தவிர ராதாகிருஷ்ண சுவாமிஜி, ரிகே மகராஜ், தாஸ் குண மகராஜ், கே.எஸ். ராமஸ்வாமி சாஸ்தரி, டி. எம். கிருஷ்ணஸ்வாமி ஐயர் போன்றோர் கலந்து கொண்டு நரசிம்ம ஸ்வாமிக்கு புகழாஞ்சலி செய்தனர்.
..தொடரும்

Posted so Far :

B. V Narsimha Swamiji-Introduction .
Chapter 1-B.V Narsimha Swami ji-Birth and Childhood.
Chapter 2.-B.V Narsimha Swami ji -Life in Salem.
Chapter 3-B.V Narsimha Swami ji-Public Life.
Chapter 4-B.V Narsimha Swami ji- Turning Point .
Chapter 5.B.V Narsimha Swami ji-In Search of God.
Chapter 6. B.V Narsimha Swami ji -Life in Ramana Maharshi Ashram.
Chapter 7. B.V Narsimha Swamiji-Towards Pandharpur.
Chapter 8. B.V Narsimha Swami ji -From 1932-1934 part 1.
Chapter 9.B.V Narsimha Swami ji-From 1932-1934 continued.
Chapter 10.B.V Narsimha Swami ji-Life in Sakori.
Chapter 11. B.V Narsimha Swami ji-Face to face with Master .
Chapter 12. B.V Narsimha Swami ji-Sai Prachar.
Chapter 13.B.V Narsimha Swamiji-Baba Himself Favors the Movement.
Chapter 14. B.V Narsimha Swami ji-Early Days of His mission .
Chapter 15. B.V Narsimha Swami Ji-Only Aim.
Chapter 16.B.V Narsimha Swami ji-Early Days of His Mission
Chapter 17.B.V Narsimha Swami ji -Lockets and Calenders.
Chapter 18. B.V Narsimha Swami ji-Lectures and Discourses.
Chapter 19.B .V Narsimha Swami ji-Meeting The Disciple.
Chapter 20. B.V Narsimha Swami ji-Efficient System For Sai Prachar-Part 1.
Chapter 21.B.V Narsimha Swami ji-Efficient System For Sai Prachar-Part 2.


Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.