Thursday, February 11, 2010

Live Experiences Of The Tarkhad Family With Sai Baba--Meeting With Lord Vithoba Of Pandharpur.


அன்பானவர்களே, நான் எழுதுவது கோர்வையாக இல்லாமல் இருபதற்கு மன்னிக்கவும். ஏன் எனில் என்னுடைய தந்தை எனக்குக் கூறியவற்றை நினைவுக்கு வர வர அவற்றை எழுதி உள்ளேன் .

நான் முன்னரே கூறியது போல தக்கர் குடும்பத்தினர் சாயிபாபாவை வழிபடத் துவங்கினார்கள் . என்னுடைய பாட்டியின் தலைவலி முற்றிலும் குணமாகி விட்டது. அவள் மேலும் மேலும் ஆன்மீக நாட்டம் கொண்டவளாக மாறிக் கொண்டு இருந்தாள் . நிறைய புத்தகங்களைப் படித்தாள் . ஒருமுறை அவள் என்னுடைய தந்தையிடம் தனக்கு பண்டாரிபூருக்கு புனித யாத்திரை செய்து வித்தோபாவைக் காண வேண்டும் என்ற ஆசையைத் தெரிவித்தாள் . ஆகவே அவளை பாபாவிடம் அனுமதி கேட்டுக்கொண்டு வருமாறு அவர் கூறினார் .
அடுத்த முறை அவர்கள் சீரடிக்கு சென்ற போது பாபாவிடம் அவள் அனுமதி கேட்க அவர் கூறினாராம் ‘ அம்மா எங்களுக்கு சீரடிதான் எல்லாமே , ஆகவே மற்றவை பற்றி நாங்கள் நினைப்பது இல்லை ’. என் பாட்டிக்கு அந்த பதிலில் திருப்தி இல்லை .
அவள் பாபாவிடம் கூறினாள் ‘பாபா ஒரு முறையாவது தான் பண்டார்பூருக்கு சென்று விட்டோபாவை வணங்கினால் தனக்கு மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிகை எனவும் தன்னுடைய வாழ்நாளில் ஒரு முறையாவது அங்கு சென்று அவருக்கு பூஜை செய்ய விரும்புவதாகவும் அதற்கு அனுமதி தேவை எனவும் கூற , பாபா அனுமதி அளித்து விட்டார் . நல்ல நாளில் என் தந்தையும் பாட்டியை அழைத்துக் கொண்டு பண்டார்பூருக்கு கிளம்பினார் . முஸ்லிம்களுக்கு , மெக்கா போல , கிருஸ்துவர்களுக்கு , பத்தேலம் போல மகாராஷ்ரியர்களுக்கு பண்டாரிபூர் புனித இடமாக இருந்தது .
அங்கு சென்றதும் என்னுடைய தந்தை வழிபாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டார் . குளித்துவிட்டு வித்தோபா ஆலயத்திற்கு பூக்கூடையுடன் கிளம்பினர் . அங்கு சென்று பூசாரியிடம் தாம் பூஜை செய்ய விரும்புவதாகக் கூறினார். பின்னர் என்னுடைய பாட்டி எப்போதும் போல பூஜைகளை செய்து முடித்தாள். பூஜை முடிந்தது . வித்தோபாவுக்கு மாலையை சாத்த வேண்டியதுதான் பாக்கி இருந்தது . தன்னுடைய கைகளினால் அதை வித்தோபாவுக்கு போட பாட்டி ஆசைப்பட்டாலும் கருவறையில் அவர்கள் செல்லக்கூடாது எனக் கூறி பண்டிதர் அதற்கு அனுமதி அளிக்க மறுத்து விட்டார் .
தன்னுடைய பூஜா விதிப்படி தன்னுடைய கைகளினால் அந்த மாலையை அவருக்கு அணிவிக்காவிடில் பூஜை நிறைவு பெறாதே என பாட்டி வருத்தப்பட்டபடி கண்களை மூடிக்கொண்டு பிரார்த்தனை செய்தாள் . என்ன அதிசயம் . வித்தோபா தன்னுடைய இடத்தில் இருந்து இறங்கி நடந்து வந்தார் . வந்தவர் என் பாட்டிக்கு முன் நிற்க என்னுடைய தந்தை விக்கித்து நின்றார் . செய்வதறியாது நின்றிருந்த பாட்டியை கீழே விழாமல் கெட்டியாக பிடித்துக் கொள்ள வித்தோபா கூறினார் ’ அம்மா ,உன் கண்களை திறந்து பார் . நான் இங்குதான் இருக்கின்றேன் . உன் கைகளால் மாலையைப் எனக்குப் போடு ’ அவள் வித்தோபா கழுத்தில் மாலையை அணிவித்துடன் அவர் திரும்பிச் சென்று தன் இடத்தில் அமர்ந்து கொள்ள என் பாட்டியும் தந்தையும் அவருக்கு முன் சாஷ்டங்கமாக விழுந்து வணங்கினர் .

அதைக் கண்ட பண்டிதர் வாயடைத்து நின்றார் . அவர் கருவறையில் இருந்து வெளியே ஓடி வந்து என்னுடைய தந்தை மற்றும் பாட்டியின் கால்களை பிடித்துக் கொண்டு அவர்களே வித்தோபா மற்றும் ருக்குமாய் எனவும் அவர்களை வெளியில் செல்ல விட மாட்டேன் எனவும் கதறினார் . அவரை தேற்றிய தந்தை தாங்கள் சீரடி சாயி பாபாவின் பக்தர்கள் எனவும் அவருடைய அனுமதியுடன்தான் அங்கு வந்ததாகவும் கூறி வித்தோபாவை மனதார துதிக்குமாறும் , அவர் கல்லாக அங்கு அமர்ந்திருக்கவில்லை , முறையாக தூய பக்தியுடன் துதித்தால் அவரைக் காண முடியும் எனவும் அறிவுரை தந்தார் . அவர்கள் அந்த பண்டிதரிடம் இருந்த வித்தோபா-ருக்குமாய் இருவரும் உள்ள ஒரு வெண்கல சிலையை வாங்கிக்கொண்டு தங்கள் வீட்டில் இருந்த சந்தன மர ஆலயத்தில் வைத்து வழிபடலாயினர் .

அடுத்த முறை அவர்கள் சீரடிக்கு சென்ற போது பாபா கேட்டாராம் ‘ என்ன வித்தலாவை தரிசனம் செய்தீர்களா ’? . பாட்டி நடந்ததைக் கூறி அந்த மாயையை பாபாதான் செய்து உள்ளார் எனக் கூறி , தன்னுடைய வாழ்நாளின் உச்சத்தை தான் அடைந்து விட்டதாகவும் , இனி எப்போது வேண்டுமானாலும் மரணம் அடையத் தயாராக உள்ளதாகக் கூறி அவருக்கு உளமார்ந்த நன்றியைத் தெரிவித்தாளாம் .
அன்பானவர்களே , என்னுடைய தந்தை கூறுவது உண்டு , ‘’நீ வணங்கும் சிலை வெறும் கல் அல்ல . அதற்குள் நிச்சயமாக கடவுள் குடி இருக்கின்றார் . எந்த ஒருவரும் தனக்கு கிடைத்த தெய்வ அருளை தான் செய்த பூர்வ ஜென்ம புண்ணியத்தினால் கிடைத்தது என நினைப்பது தவறு , அவர்களுக்கு அதை தருபவர் சாயி நாதரே .’’

These experiences are already posted in Shirdisaibabakipa website and are in random order .Devotees who wish to read them in English can click Here.Posted


Click On Link Below To Read .

1. Live Experiences Of The Tarkhad Family-Chapter 1.

2. Live Experiences Of Tarkhad Family Chapter 2.

3.Live Experiences of Tarkhad Family Chapter 3.

4.Live Experience of Tarkhad Family Chapter 4.

5. Live Experience of Tarkhad Family Chapter 5.


( Translated into Tamil by Santhipriya )
Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.