Monday, February 15, 2010

Live Experiences Of The Tarkhad Family With Sai Baba-Frightful Sight Of Goddess MariAai.


நாம் இப்போது இருப்பது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு . சாயி சரித்திரத்தில் நாட்டில் காலரா வியாதி ஏற்பட்டு பலர் மரணம் அடைந்த சம்பவம் பற்றி படித்து இருப்பீர்கள் . ஜோதிந்திராவுக்கு ஏற்பட்ட சொந்த அனுபவம் இதோ . காலரா நோய் பரவி இருந்த நேரத்தில் மாறி ஆயி என்ற தெய்வத்தை வணங்கினால்தான் மரணத்தை குறைக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தது . அப்போது இந்த காலத்தில் கிடைக்கும் மருத்துவ வசதிகள் போல எதுவும் கிடையாது . மேலும் தூரத்தில் உள்ளவர்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வதும் கடினம் . என்னுடைய தந்தை சீரடிக்கு சென்று இருந்த போது சீரடியில் காலரா நோய் பரவி உள்ளது என்பது எங்களுக்குத் தெரியாது . அது தெரிந்த போது எங்களுக்கு பாபா அவரைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை கொண்டோம். அப்படி எதுவும் இருந்தால் உடனே அவரை மும்பைக்கு திரும்பிச் சென்று விடுமாறு பாபா கூறி விடுவார் என்றும் நம்பினோம் . சீரடியில் காலரா வெகு வேகமாகப் பரவிக்கொண்டு இருந்தது . என் தந்தைக்கு உள்ளூர பயம் இருந்தாலும் பாபா மீது நம்பிக்கை இருந்தது. ஒருநாள் இரவு என் தந்தை துவாரகாமாயியில் பெட்ரோமாஸ் விளக்கை ஏற்றிக் கொண்டு இருந்தார் . சாதாரணமாக எப்போதும் எரிந்து கொண்டு இருக்கும் துனி நெருப்புக்கு முன்னால் பாபா அமர்ந்து இருப்பார் . என் தந்தை அங்கு சென்ற போது தேவை இல்லாமல் பாபா என் தந்தை மீது கோபம் கொண்டு கத்தினார் . அவரை எழு துண்டுகளாக வெட்டி அந்த தீயிலே போட்டு விடுவேன் என கத்தத் துவங்க என்னுடைய தந்தைக்கு பயமாகி விட்டது . உடனே பாபாவின் கால்களில் விழுந்து தான் அறியாமையினால் ஏதாவது தவறு செய்து இருந்தால் மன்னித்து விடுமாறு கெஞ்சினார். ஆனாலும் பாபாவின் கோபம் அடங்கவில்லை . அவரை அங்கேயே அமர்ந்துகொண்டு தன்னுடைய கால்களை பிடித்து விடுமாறுக் கூறினார் .
அவரும் பாபா கூறியவாறே அங்கு அமர்ந்து இருந்திருந்தபடி அவருடைய கால்களை பிடித்து விட்டபடி இருந்தார் . பாபா கோபமாக எதோ முனகிக் கொண்டே இருந்தார் . என் தந்தைக்கு வேர்கத் துவங்கியது . பாபாவைப் பார்த்துக் கொண்டே இருந்தவர் திடீரென அவர் பக்கத்தில் பயங்கர முகத்துடன் ரத்தம் சொட்டும் நாக்கை வெளியே நீட்டியபடி இருந்த காளி போன்ற மாறி ஆயி நிற்பதைக் கண்டார் . அந்த கோலத்தைக் கண்டவர் பாபாவின் கால்களை பயந்து போய் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் . பாபாவிடம் எதோ கூற முயன்றார், முடியவில்லை . பாபாவையும் காளியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு இருந்தவர் மயக்கம் அடைந்து விழுந்து விட்டார்.

வேர்வையினால் குளித்தது போல நனைந்து இருந்தார் என் தந்தை . அவரை பாபா தட்டி எழுப்பினார் . என் கால்களைப் பிடித்து விடு என்றால் ஏன் அப்படி என் கால்களை பிடித்துக் கொண்டு இருக்கின்றாய் . உன் கை நகங்கள் என் கால்களைக் கீறி கயப்படுத்துகின்றது என்றார் . தனக்கு தாகமாக இருக்கின்றது எனக் கூறிய என் தந்தையிடம் ஒரு குடத்தில் இருந்து தண்ணீர் எடுத்துத் தந்தார் . அதைக் குடித்த பிறகே அவர் சாதாரண நிலைக்கு வந்தார் . அதன் பிறகு அவர் பாபாவிடம் தனக்கு அப்படிப்பட்ட பயங்கரக் காட்சிகளை இனி காட்ட வேண்டாம் என்றும் , தான் கண்ட காளி போன்ற மாறி ஆயியின் பயங்கரக் காட்சியினால் தன்னால் அடுத்த நான்கு நாட்கள் சாப்பிடக் கூட முடியாது எனவும் , அப்படி எல்லாம் நடந்தால் தான் சீரடிக்கு இனி வரவே மாட்டேன் என்றும் கூறினார் .அவரிடம் பாபா கேட்டார் , ‘ பாபு என்ன நடந்தது , நீ என்ன பார்த்தாய்? ’ அதற்கு என்னுடைய தந்தை ‘ என்ன நடந்தது எனத் தெரியவில்லை , எனக் கூறிய பின் தான் கண்ட பயங்கரக் காலி பற்றி விவரிக்க பாபா கூறினார் ‘ பாபு அவள்தான் மாறி ஆயி .

அவள் உன்னைக் தருமாறுக் கேட்டாள் . நான் உன்னை தரமாட்டேன் எனவும் உனக்கு பதிலாக வேறு ஏதாவது ஐந்து உயிர்களை எடுத்து போ என்று அவளுடன் சண்டை போட்டுக் கொண்டு இருந்தேன் . முடிவாக அவள் வேறு வழி என்றி துவாரகாமயியை விட்டுச் சென்று விட்டாள் ’ என்றார் . மேலும் தொடர்ந்தார் , ‘ உன்னை நான் சீரடிக்கு மரணத்தைத் தழுவ வரவழிக்கவில்லை . என் கால்களை நீ பிடித்துக் கொண்டு இருக்கும்போது , உன்னை நான் மரணத்தைத் தழுவ வைப்பேனா ”
என்னுடைய தந்தைக்கு அது புனர் ஜென்மம் எடுத்தது போல இருந்தது . அவர் மீண்டும் பாபாவின் கால்களில் விழுத்து என்ன இருந்தாலும் மீண்டும் அப்படிபட்ட காட்சிகளை தமக்குக் காட்டவேண்டாம் என வேண்டிக் கொண்டார் . அதை பற்றி கூறுகையில் அந்த காட்சியை இப்போது நினைத்தாலும் தனக்கு தூக்கம் வராது என்பார் என் தந்தை.

இதில் இருந்து என்ன தெரிகின்றது ? பாபா கடவுளேதான் . இல்லை எனில் அப்படி ஒரு கடவுளுடன் அவரால் சண்டை போட்டு என்னுடைய தந்தையைக் காப்பாற்றி இருக்க முடியுமா ? அப்போது பாபா கூறினாராம் ’ நான் துவாரகாமாயியில் இருந்து கொண்டு பொய் கூறமாட்டேன் . என் உடல் மறைந்து விட்டாலும் இங்கு எறும்புகள் போல மக்கள் வருவார்கள் ’ .

These experiences are already posted in Shirdisaibabakipa website and are in random order .Devotees who wish to read them in English can click Here.
Posted
Click On Link Below To Read .

1. Live Experiences Of The Tarkhad Family-Chapter 1.

2. Live Experiences Of Tarkhad Family Chapter 2.

3.Live Experiences Of Tarkhad Family Chapter 3.

4.Live Experience Of Tarkhad Family Chapter 4.

5. Live Experience Of Tarkhad Family Chapter 5.

6. Live Experience Of Tarkhad Family Chapter 6.

( Translated into Tamil by Santhipriya )

Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.