Friday, February 19, 2010

Live Experiences of the Tarkhad Family With Sai Baba-Facing Death in a Cloudburst in Shirdi.



அன்பானவர்களே, நீங்கள் ஒரு முறையாவது சீரடிக்கு விஜயம் செய்யுங்கள். அது உங்கள் வாழ்வில் பெரும் மாற்றத்தைத் தரும். நாங்கள் இருந்த இடத்தில் இருந்து கோபெர்கோன் என்ற இடத்தில் உள்ள நதியைக் கடந்தால் சீரடியை அடையலாம். மழை காலத்தை தவிர மற்ற நாட்களில் அந்த நதி வற்றியே இருக்கும். அதன் மீது தற்போது ஒரு பாலம் கட்டப்பட்டு உள்ளது. அந்த காலங்களில் விடியற்காலை வேளையில் கிராமத்தினர் நதிக் கரைக்குச் சென்றுதான் தம்முடைய காலைக் கடன்களை முடித்துக் கொண்டு திரும்புவார்கள்.

என்னுடைய தந்தை சீரடிக்கு சென்ற போது நல்ல மழைக் காலம். அவர் காலையில் எழுந்து காலைக் கடன்களை அங்கு சென்று முடித்துக் கொண்டு வந்து குளித்தப் பின் காகட் ஆர்த்திக்கு செல்வார். ஒருநாள் மழை பெய்து கொண்டு இருந்தது. அதிகாலை வேளை . காலைக் கடனை முடிக்க கையில் ஒரு குடையை எடுத்துக் கொண்டு நதிக் கரைக்கு அவர் கிளம்பிச் சென்றார். இருட்டாக இருந்தது. நதிக் கரைக்கு அருகில் சென்ற போது கரையின் அந்த பக்கத்தில் இருந்து எவரோ அனைவரையும் நோக்கி கத்தியபடி எதையோ கூறியது காதில் விழுந்தது. அவர் யார் என்று தெரியவில்லை. அனால் அந்த மனிதன் என்னுடைய தந்தையிடம் மராத்திய மொழியில் உரக்கக் கூறினார் ' லோதாலரே அலபாளா' . அவர் ஆங்கிலேயேப் பள்ளியில் கல்வி படித்திருந்ததினால் அவருக்கு அது புரியவில்லை.

ஆனால் ஒன்று புரிந்தது, எவரோ வரபோகும் வெள்ள அபாயத்தைப் பற்றி கூறுகின்றார். விரைவாக தன் காலை கடனை முடித்துக் கொண்டவர் எழுந்து நின்று என்ன நடக்கின்றது என பார்த்தார். அவ்வளவுதான். பதினைந்து அல்லது இருபது அடி அளவு பெரிய கருத்த மேக மூட்டாம் அவரை நோக்கி பாய்ந்தபடி வந்து கொண்டு இருந்தது. சில நொடிகளில் அது பிளந்து விழ பெரும் வெள்ளம் . அவரால் அங்கிருந்து தப்பி ஓட முடியவில்லை. ' பாபா நான் ஆபத்தில் உள்ளேன், என்னைக் காப்பாற்று' என பாபாவை நினைத்துக் கத்தினார். கண்களை மூடிக்கொண்டு பாபாவை தியானித்தபடி நின்றுகொண்டு இருந்தார். சற்று நேரத்துக்கு பின் கண்களை முழித்துப் பார்த்தவருக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. இரண்டாகப் பிளந்த வெள்ளத் தண்ணீர் அவரைத் தாண்டி ஓடிக்கொண்டு இருந்தது.

அவர் கால் முட்டி வரை மட்டுமே தண்ணீர் இருக்க மற்ற இடங்களில் நதி முழுகி இருந்தது. சற்று நேரம்தான். வெள்ளம் வடியத் துவங்கியது. அவரை சுற்றி ஓடித்திருந்த மரக் கிளைகள், மரங்கள் என பலவும் வெள்ளத்தில் மிதந்தபடி ஓடிக்கொண்டு இருந்தது. பாபா தன்னைக் காப்பாற்றி விட்டார். அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என நினைத்தபடி மெல்ல நடந்து தன் இருப்பிடத்துக்கு வந்தார், குளித்தார். ஆனால் காகட் ஆர்த்திக்கு செல்ல முடியவில்லை. துவாரகாமாயிக்கு சென்றவரை வழியில் பாபா சந்தித்தார். 'என்ன பாபு, எதற்காக விடியற்காலை என்னை அப்படி சத்தம் போட்டு அழைத்தாய்?' எனக் கேட்க தந்தைக்கு புரிந்தது பாபா அனைத்தையும் அறிந்து கொண்டு உள்ளார். அவர் கால்களில் தடாலென விழுந்தார், நடந்ததைக் கூறினார். அப்போது அவரை தூக்கி நிறுத்திய பாபா அவரிடம் மீண்டும் கூறினார் ' பாபு உன்னை மரணம் அடைய சீரடிக்கு வரச் சொல்லவில்லை. நீ நிறைய வேலைகளை செய்ய வேண்டும். உனக்கு அத்தனை விரைவாக மரணத்தை வரவிட மாட்டேன்.'

1962 ஆம் ஆண்டு என நினைக்கின்றேன் । க்லோபாஸ் என்ற தியேட்டரில் டென் கம்மாண்டன்ட்ஸ் என்ற படம் ஓடிக்கொண்டு இருந்தது. பெரும் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிய படம் அது. நான் மிகவும் வற்புறுத்தி அழைத்ததினால் என் தந்தையும் அதை காண வந்தார் . அதில் வந்த ஒரு காட்சியில் மோசஸ் எகிப்தை விட்டு தன்னுடைய ஜீயுஸ் எனப்படும் இஸ்ரேலிய மக்களுடன் வெளியேறி ,சிவப்புக் கடலை அடைந்து தன்னுடைய கடவுளை வேண்டிக் கொள்கின்றார். அப்போது அந்தக் கடல் இரண்டாகப் பிளந்து கடலைத் தாண்டிச் செல்ல அவர்களுக்கு வழி கொடுத்தது. அந்த காட்சியைக் கண்டதும் அவருக்கு சீரடியில் தான் இருந்தபொழுது மேகம் பிளந்து அதனால் ஏற்பட்ட பெரும் வெள்ளம் தன்னை முழுக அடிக்காமல் இரண்டாகப் பிளந்து ஓட வழி செய்து தன்னை பாபா காப்பாற்றிய காட்சி நினைவுக்கு வந்தது. அவர் கண்களில் இருந்தது கண்ணீர் ஆறாகப் பெருகியது. ஆகா அப்படியும் நடக்குமா என்று எதுவும் இல்லை. நடக்கும், பாபா அத்தகைய சக்தி பெற்று இருந்திருக்கின்றார்.
These experiences are already posted in Shirdisaibabakipa website and are in random order .Devotees who wish to read them in English can click Here.Posted .

Click On Link Below To Read.

1. Live Experiences Of The Tarkhad Family-Chapter 1.

2. Live Experiences Of Tarkhad Family Chapter 2.

3.Live Experiences Of Tarkhad Family Chapter 3.

4.Live Experience Of Tarkhad Family Chapter 4.

5. Live Experience Of Tarkhad Family Chapter 5.

6. Live Experience Of Tarkhad Family Chapter 6

7.Live Experience Of Tarkhad Family Chapter 7

(Translated into Tamil by Santhipriya )


Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.Live Expriences of the Tarkhad Family With Sai Baba,

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.