Sunday, February 28, 2010

Sai Baba-As men believe in Me,so do I accept them

துவாரகாமாயியில் அமர்ந்து கொண்டு தனக்கு தக்ஷணை கொண்டு வருபவர்களையும் தரிசனம் செய்ய வருபவர்களையும் பாபா கண்காணித்து வருவது உண்டு. பலரும் ஒரு கேள்வியை எழுப்புவது உண்டு. எங்கும் நிறைந்தவர் பாபா என்பது உண்மை எனில் அவரிடம் நாம் குறைகளை ஏன் எழுதி அனுப்ப வேண்டும். நம் இதயத்தில் உள்ளதை அவர் அறிய மாட்டாரா?
உண்மைதான். ஆனால் சீரடியில் அனைத்து இடங்களிலும் அவர் கால்கள் பதிந்து உள்ளது. அந்த பூமி தெய்வீகம் நிறைந்த பூமியாகும். ஆகவே அங்கு சென்று பிரார்த்தனை செய்வதின் மூலம் அவரை நாம் மதிக்கின்றோம் , அன்பு காட்டுகின்றோம் என்பதைத் தவிர அந்தராத்த்மியாக உள்ள அவர் நாம் எங்கு இருந்தாலும் எப்படி இருந்தாலும் காத்து அருள்வார். அதற்கு உதாரணம் இந்த மூன்று சம்பவங்கள்.
மனிஷா

(1) தர்கட்டின் மகன் சீரடியில் பாபாவின் முன்னால் அமர்ந்து உள்ளார். அதே நேரத்தில் தர்கட் மும்பையில் தன்னுடைய வீட்டில் பாபாவுக்கு பூஜை செய்த பின் நேவித்தியம் படைக்க மறந்து விட்டார். பக்பா தர்கட் மகனிடம் கூறினாராம் 'உன்னுடைய தந்தை எனக்கு உணவு தர மறந்து விட்டார்'. தர்கட் அதை தன்னுடைய தந்தையிடம் கூறுவதற்காக பாந்த்ராவுக்கு கிளம்பிச் சென்றார். அது எப்படி முடிந்தது. பாபா சீரடியில் இருக்க பாந்த்ராவில் உள்ளவர் மறந்துவிட்டது பாபாவுக்கு எப்படித் தெரியும்? அவர் அந்தராத்மியல்லவா.

(2) இன்னொரு சம்பவம். திருமதி தர்கத் சீரடியில் இருந்தார். மதிய வேளை. சாப்பிட அமர்ந்த போது அங்கு வந்த ஒரு நாய் குறைத்துக் கொண்டே இருந்தது. உடனே திருமதி தர்கத் அதற்க்கு ஒரு ரொட்டித் துண்டை போட அதை தின்று விட்டு அது சென்றது. மதியம் பாபாவை சந்திக்க திருமதி தர்கத் சென்றபோது பாபா கூறினார் ' நீ சாப்பிடும் முன் உன்னிடம் வந்த நாய்க்கு நீ உணவு தந்தாய் அல்லவா. அது என்னுடன் உள்ள நாய்தான். பல பூச்சிகளும் பறவைகளும் என்னிடம் உள்ளன.

நானும் அவற்றில் ஒன்றாக செல்வதுண்டு. என்னை அவற்றில் அடையாளம் கண்டு கொள்பவர்களை நான் காத்தருள்வேன் . ஆகவே இரண்டும் கேட்டான் நிலையை தவிர்த்து எனக்கு இன்று பணிவிடை செய்ததைப் போல என்றும் உன் பணியை செய்து வா ' அதை எதற்காக பாபா கூறினார் என்றால் அனைத்து உயிர் இனங்களிலும் தான் இருப்பதை எடுத்துக் காட்டத்தான்.

(3) 1915 ஆம் ஆண்டு. கோவிந்தா பலராம் மார்கர் தனது தந்தையின் இறுதிக் கடன்களை செய்ய சீரடிக்குச் சென்றார். அவர் திருமதி தர்கட்டை சந்தித்தார். அவள் பாபாவுக்கு ஏதேனும் கொடுத்து அனுப்ப ஆவல் கொண்டாள். வீடு முழுவதும் தேடிய பின் நைவித்தியம் செய்து வைத்திருந்த பேடாவை பாபாவுக்கு கொடுத்து அனுப்பினாள். மர்கரும் பாபாவை சென்று சந்தித்தார். ஆனால் பேடாவை எடுத்துச் செல்ல மறந்து விட்டார் .

பாபாவிடம் பேசிக்கொண்டு இருந்தார். பேடாவையும் மறந்து விட்டார். பாபா தனக்கு எதுவும் கொண்டு வந்துள்லாயா எனக் கேட்டும் அவர் ஒன்றும் கொண்டு வரவில்லை என்றார். பாபா மீண்டும் கேட்டார் ' திருமதி தர்கத் எதுவும் அனுப்பவில்லையா?' அப்போதுதான் அவருக்கு பேடாவின் நினைவு வந்தது. அதைக் கொண்டு வந்து பாபாவிடம் தர பாபா அதை உடனேயே வாயில் போட்டுக் கொண்டார். திருமதி தர்கடின் அன்புக்கு அவர் அளித்த மரியாதை அது.

என்னை நம்புபவர்களை நான் ஏற்றுக் கொள்கின்றேன் என்கின்றது கீதை. அதுவே இந்த சம்பவமும்.

இவற்றில் இருந்து என்ன தெரிந்தது? பாபா அனைத்து இடங்களிலும் உள்ளார். மேலும் தன்னை நம்புபவர்களை தான் ஏற்றுக் கொள்கின்றார். ஆகவே பக்தர்கள் தங்களுடைய பிராத்தனைகளை எழுதி அனுப்புவது அனுப்புவது அவருக்கு நாம் காட்டும் சிரத்தை மற்றும் பக்தியைத்தான். அதனால் அவருடைய படத்தின் முன்னாள் நின்று கொண்டு வேண்டுவது அவருக்கு தெரிவதில்லை எனஒருவர் நினைப்பது தவறு.

இதற்கும் ஒரு உதாரணம் இந்த சம்பவம். பீ.ஆர். ஐயர் என்பவற்றின் அனுபவம் இது. அவர் எழுதுகின்றார் ' எனக்கு வயது ஐம்பத்தி மூன்று. நான்கு வருடங்களாக வேலை தேடி அலைந்தேன். ஒரு வேலையும் கிடைக்கவில்லை. என்னுடைய மகளும் மனைவியும் என்னுடைய வருமானத்தில்தான் வாழ்பவர்கள். நானும் சாயிபாபாவை வேண்டிக் கொண்டே இருந்தேன் . ஆனாலும் ஒன்றும் நடக்கவில்லை. அப்போதுதான் இணையதளத்தில் லஷ்மி என்பவர் பாபாவின் பக்தர்களுடைய வேண்டுகோட்களை எடுத்துக் கொண்டு சீரடிக்கு செல்ல இருபதாகக் கூற அவருக்கு என் துயரத்தைப் பற்றி எழுதி அதை பாபாவிடம் கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டேன்.

மறுநாள் எனக்கு ஒரு அழைப்பு வந்து இருந்தது என்பதையும் அதில் வெற்றி பெறவும் பிராதிக்குமாறு அவரிடம் செய்தி அனுப்பினேன். என்ன அதிசயம். நான் தேர்வில் வெற்றி பெற்றேன். நான் எதிர்பார்த்ததைவிட அதிக சம்பளம் கிடைத்தது. அதை என்னால் நம்ப முடியவில்லை. நான் எழுதிஅனுப்பியது அங்கு போகும் முன்னரே அனைத்தையும் அறிந்துள்ள, அனைத்து இடங்களிலும் உள்ள சாயி பாபா எனக்கு அருள் புரிந்து விட்டார்.

(Translated into Tamil by Santhipriya)

Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.