Wednesday, March 10, 2010

B.V Narsimha Swami ji-After Swami Ji's Mahasamadhi.


அகில இந்திய சாயி சமாஜ வளர்ச்சி ......தொடர்ச்சி


நான்கு பாகங்களாக வெளிவந்த சாயி பாபாவின் வழக்கை சரித்திரமே நரசிம்மஸ்வாமியின் அற்புதமான படைப்பாகும். அதில் இரண்டு பாகங்கள் அவர் மகாசமாதி அடையும் முன்னரும் , மற்ற இரண்டு பாகங்கள் அவர் மகா சமாதி அடைந்த பின்னரும் வெளியாயின . ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட அந்த புத்தகம் சாயி பக்தர்களுக்கு ஒரு வரப்ரசாதம் , ஏனெனில் அதில் சாயி பாபா பற்றிய பல விஷயங்கள் இருந்தன . அந்த புத்தகம் பலமுறை மறு பதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
நரசிம்மஸ்வாமி இருந்த குடிசை போன்ற இடம் ஆலயத்தின் பின்புறம் உள்ளது . அவர் உபயோகித்த அனைத்துப் பொருட்களும் அங்கு வைக்கப்பட்டு உள்ளன . ஒரு சலவைக் கல்லில் செய்யப்பட்ட நரசிம்மஸ்வாமி சிலையும் அங்கு வைக்கப்பட்டு உள்ளது . அவர் அங்கு இன்னமும் அங்கு வாழ்வது போலவே அங்கு செல்லும் பக்தர்களுக்கு உணர்வு வருகின்றது .

நரசிம்மஸ்வாமி இருந்த பொழுது ஆலயத்தின் மேல் கூரையில் சிமென்ட் தகடுகள் போடப்பட்டு இருந்தன . 1966 ஆம் ஆண்டு குரு பூர்ணிமா தினத்தன்று ரிகே என்பவர் சிமென்ட் தகடுகள் போடப்பட்டு இருந்த கூடத்தில் அதை எடுத்துவிட்டு கான்க்ரீட் போட்டு மூடப்பட்ட அந்த இடத்தை திறந்து வைத்தார் . அந்த வைபவத்தில் பாபாவின் வழக்கை வரலாற்றின் நான்காம் பாகம் மற்றும் பாபாவின் போதனைகள் என்ற புத்தகம் தெலுங்கு , கன்னடம் , குஜராத்தி மற்றும் தமிழில் வெளியிடப்பட்டது .

நரசிம்மஸ்வாமியின் முயற்சியினால் பல மன்னர்களிடம் இருந்தும் சாயி சமஸ்தானத்துக்கு பணம் கிடைத்தது . ஆகவே ஷீரடி சமஸ்தனத்தினர் அவரை தம்முடைய கொள்கைக்குழு உறுப்பினராக நியமித்தது .ஆனால் தனக்கு உடல் நலம் இல்லை என்பதினால் நரசிம்மஸ்வாமி தனக்கு பதிலாக ராதாகிருஷ்ண ஸ்வாமியை தன் இடத்தில் அமர்த்தினார் . 1952 ஆம் ஆண்டிற்குப் பின்னர் கோபாலஸ்வாமி என்பவர் அந்த பொறுப்பை ஏற்றார் .

1964 ஆம் ஆண்டு தமிழ்நாட்டு அரசின் இந்து மத நன்கொடை கட்டுப்பாடு விதியின் கீழ் எழுந்த சர்ச்சையினால் சாயி சமாஜம் வழக்குகளை சந்திக்க வேண்டி வந்தது. ஆனாலும் , நரசிம்மஸ்வாமியின் முயற்சியினால் அந்த வழக்குகளில் சாயி சமாஜம் வெற்றி பெற்று , அது இந்து மத நன்கொடை கட்டுப்பாடு விதியின் கீழ் இல்லை என்ற தீர்ப்பை பெற்றது .

1966 ஆம் ஆண்டில் நரசிம்மஸ்வாமியின் படம் ஒன்று சீரடி சாயிபாபாவின் ஆலயத்தின் கூடத்தில் பாபாவுடன் இருந்த மற்ற முக்கியமானவர்களுடைய புகைப் படங்களுடன் வைக்கப்பட்டது . பாபாவின் மிக நெருங்கியவரான ஸ்ரீ . சகுன் மேரு நாயக் என்பவருடைய வேண்டுகோளின்படி நரசிம்மஸ்வாமியின் படம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ரிகே என்பவரால் சாயி பாபாவின் பாதத்தின் அருகில் வைக்கப்பட்டது . அப்போது அவர் கூறினார் '' பாபாவின் பெயர் உள்ளவரை நரசிம்மஸ்வாமியின் பெயரும் நிலைத்து இருக்கும்'' . அத்தனை தீர்கமான கணிப்பு அது . 1980 ஆம் ஆண்டில் ராதாகிருஷ்ண ஸ்வாமி மறைந்த பிறகு அவருடைய புகைப்படமும் சீரடி ஆலயத்தில் உள்ள கூடத்தில் மாட்டப்பட்டது .

1967 ஆம் ஆண்டில் கோதாவரி மாவின் விருப்பப்படி நரசிம்மஸ்வாமியின் படம் சகோரியில் உள்ள உபாசினி மகாராஜ் ஆசிரமத்தில் வைக்கப்பட்டது . அது போல நரசிம்மஸ்வாமியின் ஒரு பக்தருடைய விருப்பத்தினால் 2001 ஆம் ஆண்டில் திருவண்ணாமலை ரமண ஆச்ரமத்திலும் அவர் படம் மாட்டப்பட்டது
1967 ஆம் ஆண்டில் ரிகே அவர்கள் நரசிம்மஸ்வாமியின் ஆசைப்படி முதல் இரண்டு வகுப்பு கொண்ட பெண் குழந்தைகள் பள்ளியை ஆரம்பித்து வைக்க அது பின்னர் பெரிய பள்ளியாக மாறியது .

1968 ஆம் ஆண்டில் பாபாவின் மகாசமாதி விழாவை ஒட்டி நடந்த விழாவில் பாகவத மேளா என்பது நடந்தது . கோபாலக்ருஷ்ண பாகவதர் அதை திறந்து வைத்தார் . ஒன்பது நாட்கள் நடந்த ராசா லீலா என்ற நிகழ்சியைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்தனர். பாபாவின் மகாசமாதி தினத்தன்று 108 தங்க லக்கேட்டுகளை கொண்டு ஸ்வர்ண புஷ்ப ஆராதனை நடந்தது . அதைக் கண்ட ரிகே அவர்கள் இதயபூர்வமாகக் கூறினாராம் ''சீரடியில் மட்டுமே பாபா உள்ளதாக யார் கூற முடியும் . அவருடைய மகிமையை இங்கு வந்து பாருங்கள்''.
1971 ஆம் ஆண்டில் அந்த சமாஜத்தின் அனத்து உட்புறச் சுவர்களிலும் பாபாவின் அற்புதமான லீலைகளை வண்ணமயமான கோலத்தில் சித்திரமாகத் தீட்டி இருந்தனர். நரசிம்மஸ்வாமியின் இருப்பிடம் தியான மண்டபமாக மாற்றப்பட்டது . பிரசாதம் தயாரித்து வழங்க ஒரு சமையல்கட்டும் கட்டப்பட்டது .

1974 ஆம் ஆண்டில் உபசமாஜங்கள் ஒன்றிணைந்து நரசிம்மஸ்வாமியின் பிறந்தநாள் விழாவை வெகு விமர்சையாகக் கொண்டாடினர் . 1987 ஆம் ஆண்டு சாயி பாபாவின் பளிங்கு கல்லால் ஆன உருவச்சிலை வடிவமைக்கப்பட்டு அது ஆலயத்தில் பிரதிஷ்டை செயப்பட்டது .

1991 ஆம் ஆண்டு அகில இந்திய சாயி சமாஜத்தின் தங்கவிழா கொண்டாடப்பட்டு சமாஜத்தின் மருத்துவ மனையில் கண் சிகிச்சை மையமும் திறக்கப்பட்டது .
2002 ஆம் ஆண்டு அகில இந்திய சாயி சமாஜத்தின் வைர விழா கொண்டாடப்பட்டது । 1998-200 ஆம் ஆண்டுகளில் சுவாமிஜியின் அனைத்து புத்தகங்களும் மறு பதிப்பு செய்யப்பட்டு வெளியாயின. 2002 ஆம் ஆண்டு நரசிம்மஸ்வாமி முன்னர் எழுதி இருந்த பாபாவின் வாழ்கை சரித்திரத்தின் நான்கு பாகங்களையும் ஒன்றாக இணைத்து வெளியிட்டனர் . மறு பதிப்பும் முழுவதுமாக விற்றுவிட அதை மீண்டும் மறு பதிப்பு செய்ய வேண்டியதாயிற்று .
............ தொடரும்

Posted so Far :

B. V Narsimha Swamiji-Introduction .
Chapter 1-B.V Narsimha Swami ji-Birth and Childhood.
Chapter 2.-B.V Narsimha Swami ji -Life in Salem.
Chapter 3-B.V Narsimha Swami ji-Public Life.
Chapter 4-B.V Narsimha Swami ji- Turning Point .
Chapter 5.B.V Narsimha Swami ji-In Search of God.
Chapter 6. B.V Narsimha Swami ji -Life in Ramana Maharshi Ashram.
Chapter 7. B.V Narsimha Swamiji-Towards Pandharpur.
Chapter 8. B.V Narsimha Swami ji -From 1932-1934 part 1.
Chapter 9.B.V Narsimha Swami ji-From 1932-1934 continued.
Chapter 10.B.V Narsimha Swami ji-Life in Sakori.
Chapter 11. B.V Narsimha Swami ji-Face to face with Master .
Chapter 12. B.V Narsimha Swami ji-Sai Prachar.
Chapter 13.B.V Narsimha Swamiji-Baba Himself Favors the Movement.
Chapter 14. B.V Narsimha Swami ji-Early Days of His mission .
Chapter 15. B.V Narsimha Swami Ji-Only Aim.
Chapter 16.B.V Narsimha Swami ji-Early Days of His Mission
Chapter 17.B.V Narsimha Swami ji -Lockets and Calenders.
Chapter 18. B.V Narsimha Swami ji-Lectures and Discourses.
Chapter 19.B .V Narsimha Swami ji-Meeting The Disciple.
Chapter 20. B.V Narsimha Swami ji-Efficient System For Sai Prachar-Part 1.
Chapter 21.B.V Narsimha Swami ji-Efficient System For Sai Prachar-Part 2.
Chapter 22.B.V Narsimha Swami Ji -Swami Ji's Mahasamadhi Part-1.
Chapter 23.BV Narsimha Swami Ji-SwamiJi's Mahasamadhi Part 2.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.