Thursday, May 13, 2010

Live Experiences Of The Tarkhad Family With Sai Baba-An encounter with a ghost.

பேயுடன் ஒரு அனுபவம்
இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் இது போன்ற கதைகளை நம்புவது கடினம். இத்தனை விஞ்ஞான வளர்ச்சி பெற்றுள்ள நாட்டில் நானே ஒரு என்ஜினீயர் . ஆனாலும் என்னுடைய தந்தைக்கு புண்ணிய பூமியான சீரடியில் ஏற்பட்ட அனுபவத்தை என்னால் நம்ப முடியாமல் இருக்க முடியவில்லை . அது அவருக்கும் ஒரு மறக்க முடியாத சம்பவம்.

என் தந்தை ஒருமுறை சீரடிக்கு சென்றிருந்த போது எப்போதும் போல விடியற் காலை எழுந்தவர் நதிக் கரைக்குச் சென்று அங்கிருந்த ஆலமரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு தன்னுடைய காலைக் கடன்களை கழிக்கத் துவங்கினார் . அப்போது ஒரு பெரிய சேவல் சற்று தள்ளி அமர்ந்து கொண்டு அவரைப் பார்த்துக் கொண்டே கூவத் துவங்கியது. அதன் சப்தம் மிகவும் பயங்கரமாக இருந்தது. அதையே அவர் பார்த்துக் கொண்டு இருந்த போது அது ஒரு பெரிய பாம்பாக மாறி படமடுத்து ஆடத் துவங்கியது. அதைக் கண்ட என்னுடைய தந்தை பயந்து போய் பாபாவை வேண்டலானார். அவ்வளவுதான். அது மறைந்து போயிற்று. இனி சீக்கிரமாக காலைக் கடனை முடித்துக் கொண்டு சென்று விட வேண்டும் என நினைக்கத் துவங்கியதுமே ' ஹி மனுஷா, நீ ஏன் என் வழியை மறைத்துக் கொண்டு அமர்ந்து உள்ளாய் 'என்ற குரல் கேட்டது.

அவர் முன்னால் ஒரு ஆகோரமான மனிதன் வந்து நிற்க அவரும் தன்னை சுற்றிலும் நிறைய இடம் இருக்கையில் அதற்கு ஏன் சண்டை போடுகிறாய் எனக் கேட்க, அந்த உருவம் மெல்ல மெல்ல பெரியதாகிக் கொண்டே போய் ' இப்போது நான் யார் என்று உனக்குத் தெரிகின்றதா? நான்தான் வேதாளம். இந்த இடம் அனைத்தும் எனக்கே சொந்தம். நான் கூறினால் அனைவரும் எழுந்து போய் விட வேண்டும் ' என்றது. அதைக் கேட்ட என் தந்தையின் மனதில் தோன்றியது, இந்த இடம் பாபாவுக்குதான் சொந்தமே தவிர வேறு எவருக்கும் அல்ல என்பதினால் பாபாவை மனதில் வேண்டிக்கொண்டே ஒரு பிடி மண்ணை எடுத்து அதன் மீது வீசினார். பெரும் புகை அங்கு தோன்றியது, வேதாளம் ஓடி விட்டது. என் தந்தை அங்கிருந்து ஓட்டமாக ஓடி வந்து குளித்து விட்டு துவாரகாமாயியை அடைந்தார். பாபா சிரித்தபடி அவரிடம் கேட்டார், ' அரே பாய் விடியற்காலை என் உடியை ஏன் உபயோகித்தாய் ? ' பாபாவின் கால்களில் விழுந்த என் தந்தை நடந்தது அனைத்தையும் கூறினார்.

மேலும் பேயும், பிசாசுகளும் இருப்பதும் உண்மையா என்றும் ஆவலுடன் கேட்டதற்கு பாபா கூறினார் ' நீ அந்த வேதாளம் முக்தி அடைய வழி செய்து விட்டாய். அது நல்லதற்கே. பேயும், பிசாசுகளும் இருப்பதும் உண்மையே , அவைகளும் கடவுளின் படைப்புக்களே. ஆனால் அழிக்கும் தன்மை கொண்ட அவர்களைவிட காக்கும் தன்மை கொண்டவன் பலசாலி . நான் இந்த துவாரகாமாயியில் உள்ளவரை இந்த இடத்தில் என்னை மீறி எந்த தீங்கும் நடக்க முடியாது. சீரடியில் நீ கவலைப் படாமல் இரு'
These experiences are already posted in Shirdisaibabakipa website and are in random order .Devotees who wish to read them in English can click Here.Posted .


Click On Link Below To Read.

1. Live Experiences Of The Tarkhad Family-Chapter 1.

2. Live Experiences Of Tarkhad Family Chapter 2.

3.Live Experiences Of Tarkhad Family Chapter 3.

4.Live Experience Of Tarkhad Family Chapter 4.

5. Live Experience Of Tarkhad Family Chapter 5.

6. Live Experience Of Tarkhad Family Chapter 6

7.Live Experience Of Tarkhad Family Chapter 7

8.Live Experience Of Tarkhad Family Chapter 8.

9.Live Experience Of Tarkhad Family Chapter 9.

10.Live Experience Of Tarkhad Family Chapter 10.

11. Live Experience Of Tarkhad Family Chapter 11.

12. Live Experience Of Tarkhad Family Chapter 12.

13. Live Experience Of Tarkhad Family. Chapter 13.

14. Live Experience of Tarkhad Family-Chapter 14.

15.Live Experience Of Tarkhad Family-Chapter 15.

16. Live Experience Of Tarkhad Family-Chapter 16.

17. Live Experience Of Tarkhad Family-Chapter 17.

18. Live Experience Of Tarkhad Family -Chapter 18.

( Translated into Tamil by Santhipriya)
Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.