Wednesday, May 19, 2010

Unique Sai Darshan-Experience of Sai Devotee Meena.


அன்பானவர்களே,
சாயிபாபா எங்கும் நிறைந்து இருக்கின்றார் என்பது நமக்குத் தெரியும். நம்ம அவர் பார்த்துக் கொண்டே இருக்கின்றார் என்பதும் உண்மையே. நம் மனதை புரிந்து கொண்டு அருள் புரிகின்றார் என்பதற்கு சாட்சியாக மீனா என்ற சாயி பக்தையின் அனுபவத்தை படியுங்கள்
மனிஷா
மீனா எழுதி உள்ளதை படியுங்கள் :-
நான் உங்களுடைய இணையதளத்தினை தினமும் படித்து வருபவள். அதில் உள்ள சாயி அனுபவங்களை தொடர்ந்து படித்து வருபவள். எனக்கு நேற்று ஒரு வினோதமான அனுபவம் ஏற்பட்டது. நாங்கள் உள்ள இடத்தின் அருகில் சாயிபாபாவுக்கு எந்த ஆலயமும் கிடையாது.

ஒரு நாள் நாங்கள் அருகில் இருந்த ஒரு ஆலயத்துக்குச் சென்றோம். அந்த ஆலயத்தின் கோபுரமோ சாயிபாபாவின் ஆலயத்து கோபுரம் போலவே இருந்தது. அந்த ஆலயத்தின் படிகளில் ஏறி நடந்து சென்ற போது நான் என் கணவரிடம் கூறினேன் ' எனக்கு சாயிபாபாவின் நினைவு வருகின்றது. ஏன் எனத் தெரியவில்லை எப்போது அவரைக் காண முடியுமோ'.
ஆலயத்திற்குள் அப்போது நாங்கள் மட்டுமே இருந்தோம் . அதன் பிறகு தரிசனத்தில் கவனமாக இருந்தவர்கள் அதை பற்றி மறந்து விட்டோம். அங்கு அமர்ந்தபடிபிரார்த்தனையை செய்து கொண்டு இருந்தோம்.

நாங்கள் அங்கிருந்த கடவுட்களை வணங்கிக்கொண்டு இருந்த போது ஒரு தம்பதியினர் சிறிய குழந்தையுடன் வந்தனர். ஆலய பூசாரியிடம் எதோ கேட்டனர். அவரும் எதோ சொன்னார். உடனே அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பையில் இருந்து ராமர், சீதை, ஹனுமான் மற்றும் சாயி பாபாவின் விக்ரகங்களை எடுத்து ஒரு தட்டில் வைத்து அதற்கு அவர் மூலம் பூஜை செய்தனர். அவர்கள் பூஜை முடிந்ததும் அவற்றை மீண்டும் எடுத்துக் கொண்டு போய் விட்டனர். அந்த காட்சி எனக்கு விநோதமாக இருந்தது. நான் பார்த்தவரை இந்த எட்டு வருடங்களில் அமெரிக்காவிலோ, இந்தியாவிலோ வீட்டில் இருந்து எடுத்து வந்த விக்ரகங்களை வைத்து ஆலயத்தின் சன்னதியில் பூசாரிகள் பூஜை செய்ததது இல்லை.

அந்த ஊரில் உள்ள ஆலயத்தில் மாதத்தின் முதல் சனிக்கிழமையில் மட்டும் சாயி பக்தர்கள் சாயி பாபாவின் சிலைகளைக் கொண்டு வந்து (அதை கொலு என்பார்கள் ) வைத்து பஜனைகள் செய்து விட்டுப் போவார்கள். ஆனால் இன்று எப்படி அது நடந்தது?
நான் காரில் சென்று கொண்டு இருந்தபோது என் நினைவுக்கு வந்தது. அன்று நான் சாயிபாபாவை பார்க்க ஆவலாக இருந்துள்ளேன். அதை தெரிந்து கொண்ட பாபா எனக்கு அந்த அனுபவத்தை தந்து அவரை தரிசிக்க வைத்து உள்ளார். அன்று முதல் எனக்கு அவர் மீது இருந்த பக்தியும் நம்பிக்கையும் என்னும் பெருகியது. எனக்கு அவரே என்றும் துணை இருக்க வேண்டும்'' .

(Translated into Tamil by Santhipriya)
Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.