Monday, June 21, 2010

Live Experiences Of The Tarkhad Family With Sai Baba-Darshan To Grand Ma.


சாயிநாதர் என்னுடைய பெரிய அம்மாவுக்கு தரிசனம் தந்த கதை


என்னுடைய தந்தை சுமார் பதினேழு முறை சீரடிக்கு சென்று உள்ளார். அவர் பலவிதமான அனுபவங்களைப் பெற்றார். அதை படித்துள்ள உங்களுக்கும் சாயி நாதரின் பெருமை புரிந்து இருக்கும் . அவருடைய அற்புதங்கள் என்னை எந்த அளவு ஆக்கிரமித்தது என்பதை மட்டும் அல்லாது, சாயி பாபாவின் மகிமை என்ன என்பது பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இதை வெளியிட்டேன்.

என்னுடைய பெரிய தந்தையின் குடும்பத்தினருக்கு, என்னுடைய தாத்தாவும், தந்தையும் சாய் பக்தர்கள் என்பது தெரியும். அவர்கள் சௌபாத்தி என்ற இடத்தில் இருந்த சார்னி ரோட்டில் இருந்தனர். என்னுடைய குடும்பத்தினர் பாந்த்ராவில் இருந்தனர். என்னுடைய பெரிய தந்தையின் குடும்பத்தினர் ஆங்கிலேயர்களைப் போல வாழ்கை வாழ்ந்தவர்கள். அவர்களுக்கு மகான்களைப் பற்றியோ அல்லது பாபா பற்றியோ நம்பிக்கை கிடையாது.

ஒரு முறை மும்பையில் பெரிய அளவு பிளேகு என்ற நோய் பரவி இருந்தது. என்னுடைய பெரிய அம்மாவும் அந்த நோயினால் பீடிக்கப்பட்டார் . அவருடைய டாக்டரான கணவர் என்ன மருந்து கொடுத்தாலும் அவருக்கு வந்திருந்த ஜுரம் குறையவே இல்லை. அவருக்கு எழுபதுக்கு மேல் வயது ஆகி இருந்தது. அவர் என்னுடைய தந்தையிடம் சீரடி சாயி பாபா குறித்து அடிக்கடி கேட்டுக் கொள்வது உண்டு. அவருக்கு உடல் நலமில்லைஎனக் கேள்விப்பட்ட என்னுடைய தாத்தாவும் தந்தையும் அங்கு பெரியம்மாவை பார்கச் சென்றனர். அவர்களிடம் என் பெரியம்மா தனக்கு வந்துள்ள பிளேகு நோய் தீராதது எனவும் அவர்களை தனக்காக சாயி பாபாவிடம் வேண்டிக் கொள்ளுமாறு கூறினார்.

அவளுக்கு நோய் தீர்ந்து விட்டால் அவர்களுடன் சென்று சாயி பாபாவை தரிசிப்பதாகக் கூறினாள். என்னுடைய தந்தை உண்மையிலேயே அவளுக்கு பக்தி இருந்தால் அவள் படுக்கையில் இருந்து கொண்டே சாயிபாபாவை வேண்டலாம் எனக் கூறி, அவளுடைய தலையாணிக்கு அடியில் வைத்துக் கொள்ள சிறிது உடியை காகிதத்தில் மடித்துக் கொடுத்தார். அதன் பிறகு வீடு வந்து சேர்ந்து விட்டனர் மூன்று நாட்கள் கழிந்தது. பெரியாமாவின் வீட்டு வேலைக்காரன் வந்து உடனே என்னுடைய தந்தையும், தாத்தாவையும் கையுடன் அழைத்து வருமாறு தன்னை அனுப்பியதாகக் கூறினான். அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பெரியம்மாவின் உடல் நிலை என்ன ஆயிற்றோ என பயந்தனர். அங்கு சென்றால் அவர்கள் அதிசயிக்கும் வண்ணம் அவள் படுக்கையில் அமர்ந்து கொண்டு இருந்ததைக் கண்டனர். அவர்களைக் கண்டவள் அழத் துவங்கி கூறினாள் 'ஜோதிபாபா ( என் தந்தை) நேற்று இரவு வெண் தாடியுடனும், தலையில் வெள்ளை கட்டும் போட்டு இருந்த சாயிபாபா என் அருகில் வந்தார். என் தலையைத் தடவி விட்ட பின் அம்மா உனக்கு இனி ஒன்றும் ஆகாது , படிப் படியாக குணம் ஆகி விடுவாய் என்று கூறிவிட்டு என் நெற்றியில் வீபுதியை தடவி விட்டுச் சென்றார். இரவு ஒரே வியர்த்தது, ஜுரம் முழுமையாக குறைந்து விட்டது. காலையில் நான் எழுந்தேன், என் பல்லைக் கூட விளக்காமல் வேலைக்காரனை அழைத்து கண்ணாடி ஒன்றை கொண்டு வரச்சொல்லி அதில் என் நெற்றியைப் பார்த்தேன்.

அவர் இட்ட வீபுதி அப்படியே இருந்தது. அதனால்தான் உடனேயே உங்களை அழைத்துவர ஆளை அனுப்பினேன் . இதோ பார் என அவர்களுக்கு தன் நெற்றியைக் காட்ட அவர்கள் பிரமித்தனர். பாபா இட்டதாக கூறிய விபுதி அவள் நெற்றியில் இருந்தது. அதைக்கேட்ட என் பெரியப்பாவும் பிரமித்தார். என் எனில் அதுவரை பிளேகு நோய் வந்த அனைவரும் உயிர் இழந்து விட்டனர். என் தந்தை சாயிபாபாவுக்கு அங்கிருந்தே நன்றி கூறினார். தாஸ்குண மகராஜை அழைத்து பஜனைக்கு ஏற்பாடு செய்தனர். இப்படியாக என் பெரியாமாவுக்கும் சாயிநாதர் தரிசனம் தந்தார்.

சாயி பக்தர்களே இத்துடன் தர்கட் குடும்பத்தினர் சாயிநாதரிடம் இருந்து பெற்ற அனுபவங்களைப் படித்தீர்கள். மறைந்து விட்ட என் தந்தையின் ஆத்மா நான் எழுதியதில் தவறுகள் ஏதும் இருப்பின் என்னை மன்னிக்கட்டும்.

These experiences are already posted in Shirdisaibabakipa website and are in random order .Devotees who wish to read them in English can click Here.Posted .


Click On Link Below To Read.

1. Live Experiences Of The Tarkhad Family-Chapter 1.

2. Live Experiences Of Tarkhad Family Chapter 2.

3.Live Experiences Of Tarkhad Family Chapter 3.

4.Live Experience Of Tarkhad Family Chapter 4.

5. Live Experience Of Tarkhad Family Chapter 5.

6. Live Experience Of Tarkhad Family Chapter 6

7.Live Experience Of Tarkhad Family Chapter 7

8.Live Experience Of Tarkhad Family Chapter 8.

9.Live Experience Of Tarkhad Family Chapter 9.

10.Live Experience Of Tarkhad Family Chapter 10.

11. Live Experience Of Tarkhad Family Chapter 11.

12. Live Experience Of Tarkhad Family Chapter 12.

13. Live Experience Of Tarkhad Family. Chapter 13.

14. Live Experience of Tarkhad Family-Chapter 14.

15.Live Experience Of Tarkhad Family-Chapter 15.

16. Live Experience Of Tarkhad Family-Chapter 16.

17. Live Experience Of Tarkhad Family-Chapter 17.

18. Live Experience Of Tarkhad Family -Chapter 18.

19. Live Experience Of Tarkhad Family-Chapter 19.

20. Live Experience Of Tarkhad Family-Chapter 20.

21. Live Experience Of Tarkhad Family-Chapter 21.

( Translated into Tamil by Santhipriya )
Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.