Friday, July 2, 2010

Lost article found by grace of Baba-Experience by Shri Srinivasan.


அன்பானவர்களே,
இன்று பக்தர் ஸ்ரீனிவாசனின் அனுபவத்தைப் படியுங்கள். பாபாவின் மீது நம்பிக்கை வைத்தால் அவர் நிச்சயம் காப்பாற்றுவார் என்பதே உண்மை.
மனிஷா
பக்தர் ஸ்ரீனிவாசனின் அனுபவம்.

நான் மும்பையில் வசிப்பவர். என்னுடைய மகனுடன் சில நாட்கள் இருக்க நான் ஸ்வீடன் நாட்டுக்கு சென்றேன். இரண்டு நாட்களுக்கு முன்னால் அங்கு சென்று இருந்தபோது நான் என் மகன் மற்றும் மனைவியுடன் சில பொருட்களை வாங்கச் சென்றோம். அதன் பின் ரயிலில் நாங்கள் கிளம்பி வந்தோம் . நான் வரும் வழியில் வாங்கிய பொருட்களுடன் இருந்த பையை தொலைத்து விட்டதை உணர்ந்தேன். எங்கு விட்டு விட்டேன்? ரயிலிலா இல்லை சர்ச்சிலா? நான் எப்போதுமே பாபாவின் நாமத்தை உச்சரித்தபடி இருப்பவன். ஆகவே உடனேயே தொலைந்து போன பொருட்கள் கிடைக்க வேண்டும் என அவரை வேண்டிக் கொண்டு பாபாவின் நாமத்தை ஜெபிக்கலானேன். என் மகனும் பாபாவின் தீவீர பக்தன். அவன் கவலைப்படாதீர்கள், பாபாவின் அருளால் அவை கிடைத்து விடும் என்றான். இரவு நான் தூங்கவே இல்லை. மறுநாள் நான் சர்ச்சுக்கு சென்றேன். என்ன அதிசயம் . நான் வைத்துவிட்டுப் போனது போலவே என்னுடைய பொருட்களுடன் கூடிய பை ஒரு மூலையில் இருந்தது. என்னுடைய மகன் கவுண்டரில் சென்று தொலைந்து போன பொருட்களை அடையாளம் கூறி விட்டு எடுத்து வந்தான். அனைத்துப் பொருட்களும் அப்படியே இருந்தன. என்னுடைய மகன் எப்போதுமே என்னை அமைதியாக இருக்கச் சொல்வான். பாபாவை நம்பி வேண்டினால் நமது வேண்டுகோட்கள் நிறைவேறும் என்பது உண்மை. அதை பாபா எங்களுக்கு மீண்டும் காட்டிவிட்டார்.

(Translated into Tamil by Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.