Tuesday, August 17, 2010

Great Miracle Of Baba - Experience by Sai devotee.

அன்பானவர்களே ,
இன்று பெயர் கூற விரும்பாத ஒரு சாயி பக்தை எழுதி அனுப்பி உள்ள மனம் உருக வைக்கும் அனுபவத்தைப் படியுங்கள் .
மனிஷா

பெயர் கூற விரும்பாத ஒரு சாயி பக்தரின் அனுபவம்
இன்று எனக்கு நடந்த அற்புதத்தைப் பற்றி அனைவருக்கும் கூற விரும்புகிறேன். மூணரை வயதான என் குழந்தைக்கு கண்ணில் கோளாறு ஏற்பட்டு விட்டது. குழந்தைக்கு கண்பார்வை -1.5 என மருத்துவர் கூறிவிட அதிர்ச்சி அடைந்தேன். ஆனால் என் தாயார் சாயி பக்தி அதிகம் உள்ளவள். அவள் பிராத்தனை புரிய நான் தினமும் பாபாவின் உடியையும் தீர்த்தத்தையும் குழந்தையின் கண்ணில் தடவி வந்தேன். இன்று மருத்துவரிடம் சென்றபோது அவர் பார்வை சற்று குணமாகி உள்ளது எனவும் இன்னும் சில நாளில் பார்வை குணமாகலாம் என்றார். நிம்மதி அடைந்த நானும் பிரார்த்தனையை தொடர்கின்றேன்

சிப்பூரில் இருந்த அமித் அவர்களுக்கு நான் அடிக்கடி என் பிரச்சனைகளைக் கூறி பிரார்த்திக்கச் சொல்வது உண்டு. அவை பல நடந்து உள்ளன. என் குழந்தையின் பிரச்சனையும் நல்லபடியாக முடியும் என்று நம்புகிறேன். என்ன வந்தாலும் சாயியின் பக்தர்கள் சாயியின் மீதான நம்பிக்கையை இழக்கலாகாது. அவர் நிச்சயம் நம்மை கைவிட மாட்டார். வியாதி வந்தாள் அவர் உதயை உபயோகித்து வந்தால் அவர் நிச்சயம் நம்மைக் காப்பார்.

(Translated into Tamil by Santhipiriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.