Wednesday, November 10, 2010

Properties one must have to attain Absolution




முதல் ஐந்து பகுதிகளைப் படித்தவர்கள் பாபாவின் இந்த உபதேச அமிருதத்தையும் பருக வேண்டும். பாபா தொடர்ந்தார் ' ஒருவருக்கு முக்தி கிடைக்க அவருக்கு என்ன தகுதிகள் வேண்டும் என இப்போது நான் கூறுவதைக்கவனமாகக் கேள்.
-இந்த வாழ்கையில் வெறுப்புற்று பந்தங்களில் இருந்து விடுபட எண்ணம் உள்ளோர்கள், எவர் ஒருவருக்கு உண்மையிலேயே நல்லது கெட்டது தெரியுமோ அவர்கள் முக்தி பெறத் தகுதியானவர்கள்
- ஒருவர் எத்தனை பாபங்களை செய்து இருந்தாலும், கடந்த காலத்தில் தான் செய்த அனைத்து தவறுகளுக்கும் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பவர்கள்,
- எந்த ஒருவர் தான் தற்போது உள்ள நிலையை எண்ணி அதில் சந்தோஷத்துடன் வாழ்கின்றாரோ, எவர் பாபங்களை செய்ய அஞ்சுகின்றாரோ, எவர் பொய் கூறுவது இல்லையோ அவர்கள்,
- எவர் கடவுள் பக்தி கொண்டு உள்ளாரோ, எவர் புனிதமானவர்களை மதிக்கின்றாரோ, எவர் ஒழுக்கமான வாழ்வை தொடர்கின்றார்களோ அவர்கள்,
- எவர் நல்லவர்களை விட்டு ஒரு கணமும் பிரிவது இல்லையோ, எவருடைய நாக்கு எப்போதும் ஹரியை ஜபித்துக் கொண்டு உள்ளதோ அவர்கள்,
- எவர் ஒருவர் இந்த உலக வாழ்க்கையே விஷத்தைப் போல உள்ளது என்பதை உணருகின்றாரோ, எவர் தினமும் ஆத்மத்யாவை கடை பிடிக்கின்றனரோ ( தினமும் வாழ்வில் ஒரு நாள் குறைந்தது என்ற உண்மையை உணருதல்) , அவர்கள்,
- கடவுளை தனிமையில் இருந்தவாறு எந்நேரமும் பிரார்த்திப்பவர்கள்,
- கடவுளுடைய நாமத்தைக் கேட்ட உடனே எவர் தமக்குள் அளவில்லா ஆனந்தத்தை பெறுகின்றார்களோ அவர்கள்,
- எவர் ஒருவர் கடவுள் நினைவை தன மனதில் இருந்து ஒரு ஷணமும் மறக்காது உள்ளாரோ, எவர் தனது கௌரவத்தைப் பார்க்காமல் புனிதமானவர்களுக்கு பணி புரிகின்றாரோ, அவர்கள்
- எவர் தனக்குள் உள்ள ஆறு விரோதிகளை அழிகின்றாரோ, எவர் தனது ஆசைகளை அடக்கி வைத்துள்ளாரோ, எவர் சந்தேகத்தை ஒதுக்கி வைத்து வாழ்கின்றார்களோ, எவர் இரண்டு விதமான வாழ்கையை விட்டுவிட்டு ஒரே மாதிரியான வாழ்கையை கடைபிடித்து வாழ்கின்றனரோ அவர்கள்,
-எவர் ஒருவர் தான் பிருமன் என்பதை உணர்ந்துகொண்டு, தன்னுடைய தேக சுகத்தை ஒதுக்கி வாழ்கின்றனரோ அவர்கள் என மேற்கூறிய அனைவரும் முக்தி பெறத் தகுதியானவர்கள்.

' பாபா தொடர்ந்தார் ' உயிர் உள்ளவை, இல்லாதவை அனைத்துமே கடவுளின் படைப்புக்களே. அவர் இன்றி அணுவும் அசையாது. அவர் எங்கும் நிறைந்து இருக்கின்றார். அனைத்திலும் அவர் நிறைந்து உள்ளார். இந்த நான்கை நீ நன்கு புரிந்து கொள்ள வேண்டும். நாம் மாயையான உலகில் இருப்பதினால் இந்த உண்மையை புரிந்து கொள்ள முடியவில்லை. நீ, மாதவா, மாருதி, பண்டரிநாதர், மகாலச்பதி, காசிநாத், அட்கர், ஹரிபன்ட், சாத்தே, கணேஷ் பேர்ரி, தாத்யா, பாலச்சந்திரா, வேணு மற்றும் நான் என்ற அனைவருமே கடவுளின் அங்கங்களே. ஆகவே நாம் ஒருவரையும் வெறுக்கக் கூடாது. அனைவரிடமும் கடவுள் உள்ளார் என்பதை உணர்ந்து கொள்பவர்களுக்கு பொறாமை வருவது இல்லை. அப்படி ஒரு நிலை அடைந்து விட்டவர்களுக்கு அனைத்தும் தானாகவே நடக்கும்.

ஒரு பூச்சி அனைத்து இடங்களிலும் சென்று அமரும். ஆனால் அது நெருப்பின் மீது அமருமா? அது போலத்தான் நாம் இருக்க பழகிக் கொள்ள வேண்டும். அனைத்தையும் மகிஷ்சியுடன் பார்பவர்கள் பிரும்மன் என்ற அறிவின் பக்கம் பார்ப்பது இல்லை.

நாராயணா, எப்போது ஒருவர் பிரும்மன் என்ற உண்மையை புரிந்து கொள்ள மறுக்கின்றார்களோ அதுவரை அவர்களுக்கு பிறப்பும் இறப்பும் தொடந்து கொண்டே இருக்கும். ஆகவே இந்த பிறவியிலேயே நாம் அந்த உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
............கர்மா- 7.......தொடரும்
(Translated into Tamil by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.