Wednesday, March 9, 2011

ALL POWERFUL UDI

அன்பானவர்களே
சாயிபாபாவின் உடியை பயன்படுத்தி பயனடைந்தவர்கள் ஏராளம். அதன் மகிமை குறித்து சாய் சரித்திரத்திலும் கூறப்பட்டு உள்ளது. சாயியின் உடி குறித்து தன்னுடைய அனுபவத்தை மதுபாலா என்பர் எழுதுகின்றார். அதை படியுங்கள்
மனிஷா




மதுபாலாவின் அனுபவம்

''அது 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்பதான் தேதி. நான் அலுவலகத்தில் அமர்ந்து இருந்தேன். என்னுடைய ஆள்காட்டி விரலில் கடுமையான வலி. நகச்சுத்தி என்பது அது. நகத்தில் வரும் வியாதி. என்னால் கையைத் தூக்க முடியாத அளவு வலி. என்ன செய்வது என துடித்தேன். அதற்கு என்ன மருந்து போட்டாலும் உடனே குணம் ஆகாது. வீடு சென்றேன். பாபாவை வேண்டிக் கொண்டேன். அவர் உடியை எடுத்து விரல் மீது சீழ் பிடித்து இருந்த இடத்தில் பூசினேன். சற்று நேரம் சென்றது. அதிசயித்தேன். பொறுக்க முடியாமல் இருந்த வலி குறையத் துவங்கியது. உடனே என்னுடைய தாயாரை தொடர்பு கொண்டு ஆவலுடன் அது பற்றிக் கூறினேன். அன்று இரவு மீண்டும் பாபாவின் உடியை விரலில் தடவிக் கொண்டேன்.
மறு நாள் எழுந்து அலுவலகம் சென்றேன். விரலில் இருந்த வலியை மறந்து விட்டேன். வீக்கமும் இல்லை. அலுவலகத்தில் வேலை செய்யும்போது எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை . இது மிகச் சிறிய சம்பவமாகத் தெரிந்தாலும் பொறுக்க முடியாமல் இருந்த வலி, மருந்துகளால் தீர்க்க முடியாத வலி எப்படி திடீரென குறைய முடியும்? பாபாவின் உடியின் மகிமையை என்னவென்று கூறுவது?
ஓம் சாயி நமோ நமஹா, ஸ்ரீ சாயி நாம நமஹா, ஜெய் ஜெய் சாயி நமோ நமஹா, சத்குரு சாயி நமோ நமஹா ''
(Translated into Tamil by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.