Wednesday, March 9, 2011

Remembering His Holy name-experience by Sai devotee Durga


அன்பானவர்களே
சாயி நாமத்தை உச்சரித்தபடி, அவரை மறக்காமல் இருந்தால் அவருடைய கருணை நமக்கு எப்போதும் கிடைக்கும். இதோ துர்கா சர்மா என்ற ஒரு பக்தையின் கதையை படியுங்கள்.
மனிஷா


துர்கா சர்மாவின் அனுபவம்

ஒரு நாள் நான் பூஜைகளை முடித்துவிட்டு வீட்டில் அமர்ந்து கொண்டு இருந்தேன். என்னுடைய தாயாருக்கு உடல் நலமில்லை என்பதினால் அலுவலகத்துக்கு செல்லவில்லை.
மதியம் ஒரு மணிக்கு என்னுடைய தந்தை வந்து என்னுடைய பத்தாவது வகுப்பு சான்று பத்திரம் தேவை  எனவும், அதை முனிசிபல் அலுவலகத்தில் தந்தால்தான் எனக்கு சான்று பத்திரம் தருவார்கள் எனவும் கூறினார். நான் குழப்பத்தில் ஆழ்ந்தேன்.  பல ஆண்டுகளாக அதை எங்கே வைத்து உள்ளேன் என்பது தெரியவில்லை. பல முறை தேடியும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகவே அது தொலைந்து விட்டது என நினைத்து   இருந்தேன். அப்போது தேடத் துவங்கினாலும் உடனே கிடைக்காது. நான் அதை துலைத்து  பல ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால அதை எப்படி தந்தையிடம்  கூறுவது ?.
நான் மனதில் பாபாவை வேண்டிக்கொண்டே அவர் நாமத்தை உச்சரித்தபடியே மீண்டும் தேடத் துவங்கினேன். என்ன அதிசயம். அத்தனை ஆண்டுகளாக கிடைக்காது இருந்தது அன்று உடனே கிடைத்து விட்டது.  இத்தனை நாளும் அதே இடத்தில் அதைத் தேடியும் கிடைக்காமல் இருந்த அது இன்று   எங்கிருந்து வந்தது ? அது பாபாவின் கருணைதானே.
அன்று என் தாயார் உடல் நலமின்றி இருந்தாள் . காலை முதலே ஒன்றும் சாப்பிடவில்லை. தூங்கிக்கொண்டு இருந்தவள் மயக்கம் அடைந்து விட்டாள். என்ன செய்வது எனப் புரியவில்லை. பூஜை அறைக்கு ஓடினேன், பாபாவின் முன் ஊதுபத்தியைக் கொளுத்தி வைத்து அவருடைய உடியை எடுத்து வந்து தாயாரின் நெற்றியில் தடவி, அவளுடைய வாயிலும் போட்டேன். பாபாவின் நாமத்தை ஜெபம் செய்யத் துவங்கினேன். அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவளுக்கு சுய நினைவு வந்து விட்டது. பாபாவுக்கு மனதார கோடி ப்ரணாம் செய்தேன்.
(Transalted into Tamil by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.