Thursday, October 20, 2011

Shirdi Sai Baba's grace-21

பக்தர்களின்   அனுபவங்கள்

அன்பானவர்களே,
அனைவருக்கும் சாயி தின வாழ்த்துக்கள். பாபாவின் லீலைகளைப் படிக்கப் படிக்க நமக்கு நம்முடைய ஆத்மா ஞானம் அதிகமாகிக் கொண்டு போவதை உணர முடியும். நமக்குள் நம்மை அறியாமலேயே மாற்றங்கள் ஏற்படுவதைக் காண முடியும். சாயி சரித்திரத்தைப் படிப்பதின் மூலமும், அவருடைய அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதின் மூலமும் நாம் தூய மனிதராகிக் கொண்டு இருப்பதை உணர முடியும். சாய் மார்கத்தை கடைப்பிடித்து நாம் முன்னேறுவோம். இதோ சில சாயி பக்தர்களின் அனுபவங்கள்.
மனிஷா
---------------
பக்தரின் அனுபவம்-1
நான் எனக்கு பாபாவுடன் ஏற்பட்ட  அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என் E மெயில் முகவரியையும் பெயரையும் வெளியிடாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
எனக்கு பாபாவுடன் இரண்டு வருடங்களாகத்தான் தொடர்ப்பு ஏற்பட்டது. அதற்கு முன்  அவரைப் பற்றி  நான் கேள்விப்பட்டது இல்லை.
என்னுடைய கணவர் கடந்த 10 ஆண்டுகளாக கண்ணில் ஒரு  கோளாறினால் அவதிப்பட்டு வந்தார். என்ன மருத்துவம் செய்யும் அவருடைய கண்ணில் ஏற்பட்டுள்ள அலர்ஜி குறையவில்லை. அப்போதுதான் என் நண்பர் மூலமாக பாபாவைப் பற்றிக் கேள்விப்பட்டு அவருடைய ஆலயத்துக்கு சென்று வேண்டத்  துவங்கினேன். அது முதல் என்னுடைய கணவரின் கண்ணில் ஏற்பட்ட கோளாறு மெல்ல மெல்ல மறைந்தது. தற்போது நலமாக உள்ளார்.
எனக்கு முன் கோபம் அதிகம். அவ்வப்போது நம்பிக்கையும் குறைந்துவிடும். ஆனால் மீண்டும் மீண்டும் பாபாவின் ஆலயம் சென்று அவருடைய  உதவியைக்  கேட்பேன்.  அவர் என்னைக் கைவிட்டது இல்லை. என் குடும்பத்தில் அமைதி இல்லாமல் இருந்தது. என்னுடைய ஒரு சகோதரியின் மன வாழ்கை நல்லபடியாக அமையவில்லை. அவளுடைய கணவன் குடித்துவிட்டு வந்து அட்டகாசம் செய்வான். அவள் என்னிடம் வந்து அழுது புலம்புவாள். ஆகவே அவள் வாழ்கை நல்லபடியாக வேண்டும் என ஒன்பது வார சாயி விரதம் பதக்கத் துவங்கினேன். ஆனாலும் எந்த மாற்றமும் வரவில்லை. என்னுடைய நம்பிக்கை மீண்டும் உடைய ஆரம்பித்தது.  என்னுடைய பெற்றோர்கள் கவலை அடைந்தார்கள். ஆனால் விரதம் முடிந்து சில  நாட்கள் பொறுத்து அவள் வாழ்கையில் அமைதி திரும்பத் துவங்கியது. அவளுடைய கணவன் ஆவலுடன் மிக அன்பாக உள்ளதாக அவள் கூறினாள். அதற்கு காரணம் பாபாவின் அருள்தான்.
அடுத்து என்னுடைய இளைய சகோதரியின் வாழ்கை. அவள் ஒருவனைக் காதலித்து வந்தாள். அவன் வேறு ஜாதியை சேர்ந்தவன். அவனையே அவள் மணக்க விரும்பினால். அவனிடம்  திருமண நிச்சயம் செய்து கொள்ள பெற்றோர்களை அழைத்து வருமாறு எப்போது  கூறினாலும் அவன் ஏதோ சாக்கு சொல்லி அதை தட்டிக் கழித்தான். அவன் தாயாருக்கு மூலையில் கான்சர் என்றும் தான் வீட்டின் ஒரே பிள்ளை என்பதினால் அவளைக் கைவிட முடியாமல் இருப்பதாகவும், அவள் தன்னுடைய மாமாவின் மகளை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்துவதாகவும்  கூறினான்.
ஆனால் என் பெற்றோர்கள் இரண்டு வருடமாக அந்த திருமண ஒப்புதல் தொடர்ந்து தடைபடுவதினால் உடனே ஒரு முடிவு எடுக்குமாறு அவனிடம் கேட்க அவன் மீண்டும் சில நாட்கள் அவகாசம் கேட்டான். ஆகவே எங்களுக்கு சந்தேகம் வந்தது. அவனைப் பற்றி விசாரித்தபோது அவன் ஏற்கனவே திருமணம் ஆகி விட்டவன் என்றும் அவன் என்னுடைய சகோதரியை ஏமாற்றி வருகிறான் என்பதும் தெரிந்தது. ஆகவே என்னுடைய சகோதரியிடம் நல்ல முறையில் எடுத்துக் கூறி உங்கள் சாயிபாபா. காம்  என்ற இணைய தளத்தில் சென்று பாபாவின் அறிவுரையைக் கேட்டோம். அதில் வந்த பதில் இது  'மறைந்து உள்ள உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துவிட்டன'. அடுத்து ஒரே வாரத்தில் என் பெற்றோர்கள் விரும்பிய    இடத்தில் அவளுக்கு திருமணம் நிச்சயமாகியது.  பாபாவே எங்களுக்கு அருள் புரிந்து உள்ளார் என்றே நம்புகிறோம். நான் பல முறை உணச்சி வசப்படுகிறேன். பாபாதான் எனக்கு பொறுமையைக் கொடுக்க வேண்டும்.    
---------------------------------------
ஒரு பக்தரின் அனுபவம் -2
நான் சாயிபாபாவைப் பற்றி என்னுடைய நண்பன் ஒருவன் மூலம் அறிந்து கொண்டேன். அவன் வியாழர் கிழமைகளில் மாமிசம் சாப்பிட மாட்டன். அவன் இந்தியாவுக்கு சென்றால் சீரடிக்கு செல்லாமல் இருக்க மாட்டான்.
எனக்கும் சில பிரச்சனைகள் ஏற்பட்டன. அப்போது என்னுடைய தெலுங்கு நண்பன் ஒருவன் சாயிபாபாவைப் பற்றிக் கூற நானும் அவரைப் பற்றிய தகவல்களை படிக்கத் துவங்கினேன். அப்போதுதான்  உங்கள் அற்புதமான இணைய தளம் உள்ளது எனக்கு தெரிய வந்தது.  நான் அதிக ஆன்மீக நாட்டம் கொண்டவன் இல்லை. ஆகவே பாபாவின் படத்தை ஏசுவாக நினைத்தபடி பார்த்துக் கொண்டு அமர்ந்து இருப்பேன்.  நான் தேவாலயங்களுக்குச் சென்றாலும் மனதில் 'ஓம் சாயி ராம்' என்று  ஜெபிக்கத்  துவங்கியதை உணர்ந்தேன். நான் பாபாவின் மூன்று லீலைகளை என் வாழ்கையில் பார்த்தேன்.

லீலை -1

2010 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி.  நான் அலுவலகத்திற்கு லீவு போட்டுவிட்டு பாபாவின் ஆலயம் செல்ல முடிவு செய்தேன். காரணம் அன்று எனக்கு மிகவும் வேண்டிய நண்பர் ஒருவரின் பிறந்த நாள். பாபாவின் ஆலயம் போய் சேருவதற்கு  என் வீட்டில் இருந்து 45 நிமிடங்கள் ஆகும். நான் வழியில் நினைத்துக் கொண்டே சென்றேன். 'பாபா இன்று நீ மஞ்சள் மற்றும் பச்சை நிறத்திலான உடையில் எனக்கு காட்சி தந்தால் என் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டதாக கருதுவேன்'. என்னவோ தெரியாது மஞ்சள் நிறத்தைக் கண்டாலே எனக்கு பாபாவே நினைவுக்கு வருவார். மஞ்சள் நிற காரைப் பார்த்தால் கூட 'ஓம் சாயி ராம்' என நான் மூன்று முறை ஜெபிப்பேன். பாபாவின் ஆலயத்துக்கு சென்றேன். பாபாவின் சிலை மீது மஞ்சள் நிற சால்வை போர்த்தி இருந்தார்கள். பச்சை நிறம் துளிக் கூட அவர் அருகில் காணவில்லை. கண்களை மூடிக் கொண்டு தியானத்தில் அமர்ந்து இருந்தேன். திடீரென சிறிது சப்தம் கேட்டு கண் விழித்தேன். அந்த ஆலய பண்டிதரிடம் யாரோ ஒருவர் ஒரு மாலையை கொண்டு வந்து தந்து அதை பாபாவிற்கு போடச் சொன்னார். அது முழுக்க முழுக்க பச்சை நிற மாலை. அதை பண்டிதர் பாபாவின் சிலைக்கு அணிவிக்க  அந்த பச்சை நிற மாலை அவருடைய சால்வையின் கரைப் பகுதி போல காட்சி தந்தது.  மொத்தத்தில் பாபாவின் சால்வை நான் வேண்டியபடியே  மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் காட்சி தந்தது.  அதைக் கண்ட நானா பாபா என்னுடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு விட்டதாக கருதினேன்.

லீலை -2
ஒரு நாள் நான் அலுவலகத்துக்கு சென்று கொண்டு இருந்தேன். அன்று என்னுடைய மனம் அமைதியாக இல்லை. அழ வேண்டும் போல மன நிலை இருந்தது. சொல்ல முடியாத வேதனையினால் இதயத்தில் பாரமாகவும் இருந்தது. பாபா எனக்கு உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை. உன் பாதங்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழ வேண்டும் போல இருந்தது.  என்னுடன் இருக்கின்றாய் என நம்புவதற்காக காட்சி தா என வேண்டியவர்கள்   கார்களில் பாபாவின் படத்தைக் கண்டது போன்ற அனுபவங்களை படித்து உள்ளேன். அமெரிக்காவில் கார்களில் பாபாவின் படங்களை ஒட்டி வைக்க மாட்டார்கள், காரிலும் அவர் சிலையை வைத்துக் கொள்வது இல்லை. என் அலுவலகத்திலும் அறையிலும் பாபாவின் சிலையை வைத்து உல்லாஎந். ஆகவே அந்த சிலைகளைத் தவிர வேறு உருவில் நீ இன்று காட்சி தந்தால் என் குறை தீரும் என நம்புவேன் என வேண்டிக் கொண்டு அலுவலகம் சென்றேன். நான் முதலில் E Mail பார்த்த பிறகு ஒரு சமையல் கலை வலை தளத்தையும் பார்ப்பது உண்டு. அன்று அந்த வலை தளத்தை திறந்தபோது ஒரு பெண்மணி எழுதி இருந்த சமையல் குறிப்பைப்  படிக்க அதை திறந்தபோது முதலில் அதில் காட்சி தந்தது பாபாவின் உருவமே. அதன் மூலம்  என்னுடன் எனக்கு துணையாக இருப்பதை உணர்த்திய பாபாவிற்கு நான் மனமார நன்றி கூறினேன். 

லீலை -3
இது நேற்று நடந்தது. நான் எப்போதும்போல பாபாவின் நாமத்தை உச்சரித்தபடியே இருந்தேன். எனக்கு ஒரு முக்கியமான காரியம் நடக்க வேண்டி இருந்தது. அப்போது நான் அவரிடம் வேண்டிக் கொண்டேன், 'பாபா, எனக்கு ஒரு உதவி வேண்டும் . அதற்கு  நீ  நிச்சயம் சம்மதிப்பாய்  என்றால் ஏதாவது விதத்தில் உன் உருவத்தைக் காட்டு'.  அதன் பின் அதைப் பற்றி நான் முற்றிலும் மறந்து விட்டேன்.  இரவு நானும் என்னுடைய தாயார் மற்றும் சகோதரி மூவரும் TV யில் படம் பார்க்க அமர்ந்தோம். TV யைப் போட்டவுடன் அந்த நிகழ்ச்சியில் ஒரு காட்சி. மூலையில் பாபாவின் படம். அதைக் கண்ட  என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எனக்கு பாபாவின் அருள் நிச்சயமாக உள்ளது என்று நம்பினேன். நான் இரவு ஒப்டுக்கப்போகும் முன் நினைத்தேன் 'என் அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்'. அதற்காகவே இதை எழுதி அனுப்பி உள்ளேன்.

---------------------------------------
இன்னொரு பக்தரின்   அனுபவம்-3

நான் எனக்கு நேரிட்ட ஒரு அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். ஒரு முறை நானும் என் தாயாரும் சீரடிக்கு சென்று இருந்தோம். என் தாயார் வரிசையில் முதலில் இருந்தால். நான் கடிசியில் இருந்தேன். அப்போது காவி நிற  உடை அணிந்த வயதான மனிதர் என்னை தாண்டிச் சென்றார்.  நான் என்னை அறியாமலேயே அவர் பாதத்தை தொட்டு வணங்கிவிட்டு அவர் பின்னால் சென்றேன். கூட்டத்தை சமாளிக்க எப்போதுமே அங்குள்ள காவலாளிகள் சமாதிக்குள் நுழையும் கூட்டத்தினரை போ...போ..என   தள்ளி விட்டுக் கொண்டே இருப்பார்கள். . நான் நினைத்தேன் நான் பாபாவின் பின்னால்தான் நடந்து செல்கின்றேன் என்பது உண்மை என்றால் சமாதியில் நிறைய நேரம் நின்று பிரார்த்தனை செய்ய அனுமதிப்பார்கள்.
நான் சமாதி ஆலயத்தில் நுழைந்து 10 நிமிடம் வரை நின்று பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தேன். யாரும் என்ன போகச் சொல்லவில்லை. அதை விட வேறு எந்த விதத்தில்  பாபாவின் கருணையை நான் உணர முடியும்?

---------------------------------------
இன்னொரு பக்தரின்   அனுபவம்-4

என்னுடைய கணவர் சமீபத்தில் இறந்து விட்டதினால் நான் பெரும் துயரத்தில் இருந்தேன். ஒரு மாதம் கூட ஆகவில்லை. என்னுடைய புகுந்த வீட்டினர் என் கணவரின் சொத்துக்களுக்கு உரிமைக்  கேட்டு வழக்கு மன்றம் சென்றார்கள். வழக்கு மன்றத்தில் எங்களுக்குள் இழுபறி நடந்தது.
நான் பாபாவிடம் சென்று அழுதேன். என்னால் இதற்கு மேலும் நீதி கேட்டு நீதி  மன்றத்தில்  செலவு செய்ய முடியாது என்ற நிலையில் என்னை நீதான் காப்பாற்ற வேண்டும் என அழுதேன். அவரோ ஒவ்வொரு முறையும் உனக்குத்தான் வெற்றி கிடைக்கும் என ஆறுதல் கூறினார். கடைசியாக வழக்கின்  இறுதி தீர்ப்பு வந்தது.  அந்த தீர்ப்பில் என் மாமனார் வகைக்கு 25 % சொத்துக்களை தந்துவிட்டு மீதியை எனக்கு அளித்தார்கள். எனக்கு அதில் வருத்தம் என்றாலும் என்னை வ்நீதிமன்றத்துக்கு இனிமேலும் போஆகாமல் இருக்க பாபா வழி செய்துவிட்டார் என்பதற்காக நான் அவருக்கு நன்றி கூறினேன். அது முதல் நான் தூங்கும் முன் சாயி சரித்திரத்தின் 37 ஆம் பாகத்தை படித்து விட்டுத்தான் தூங்குகிறேன். 
(Into Tamil By Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.