Monday, October 10, 2011

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 19

ஸ்ரீரடி பாபாவின் அருள்
அன்பானவர்களே,
சீரடி பாபா கருணை மிக்கவர். அவர் தனது குழந்தைகளை என்றுமே கைவிட்டது இல்லை என்பதற்கு உதாரணமாக இதோ இந்த இரண்டு அனுபவங்களை படியுங்கள். பாபாவின் பக்தர்கள் தம்மை பாபா எந்த நிலையிலும் கைவிட்டது இல்லை என்ற உண்மையை மறுக்க மாட்டார்கள்.
மனிஷா
-------------------------------
கனவில் தோன்றி அருள் புரிந்தார்

எனக்கு என்னுடைய அனுபவத்தைப் பற்றி எப்படி எழுதுவது என்பது புரியவில்லை. நான் இத்தனை நாள் பாபாவைப் பற்றிய என் அனுபவத்தை எழுதாததிற்கு பாபா என்னை மன்னிக்கவும். நன் வாழ்கையில் பல ஏற்ற இறக்கங்களைக் கண்டு உள்ளேன். நான் இந்த இணையதளத்தை தவறாமல் படித்து வருகிறேன். நான் 2001 ஆம் ஆண்டு முதல் பாபாவின் பக்தன்.
கடந்த நான்கு ஆண்டுகளாக எனக்கு பல பிரச்சனைகள் தோன்றின. நான் முற்றிலும் வெறுப்படைந்து தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு சென்றேன். எனக்கு பாபா மீதான நம்பிக்கையும் மறைந்தது. ஆனால் அவரை நான் தொடர்ந்து பூஜித்து வந்தாலும் அவர் எனக்கு உதவவில்லை. ஒரு நாள் பாபாவின் ஒரு பக்தருடன் பேசிக் கொண்டு இருக்கையில் நான் பாபாவிடம் என் குறைகளை கூறுவதை விட்டுவிட்டேன் என்றேன். அதற்க்கு அவர் எனக்கு இன்னும் பொறுமை வேண்டும் என்றும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல நம்பிக்கை மற்றும் பொறுமை போன்ற இரண்டும் தேவை என்றும் கூறினார். என்னை சாயி ச்தவன் மஞ்சரியை படிக்குமாறு கூறினார். நான் அதை 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தொடர்ந்து படித்து வர ஆரம்பித்தேன். அப்போது 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எனக்கு ஒரு கனவு வந்தது. அதில் நான் பாபாவின் ஒரு ஆலயத்துக்கு என்னுடைய பெற்றோர்களுடன் சென்று இருந்தது போன்ற கனவு. அதில் சாயிபாபாவின் சிலை சீரடியைவிட மாறுதலாக இருந்தது. நான் பாபாவின் சிலைக்கு இரண்டு துணிகளை வாங்கிக் கொடுத்தேன். என்று நான் இந்த நிலையில் உள்ளேன் என்றால் அது உங்களினால்தான் என்று கூறவும் பாபா எழுந்து என் அருகில் வந்தார். நான் அவரிடம் உங்களை தொடலாமா எனக் கேட்டு விட்டு அவரது வலது கன்னத்தை தடவினேன். அவர் சிரித்தார். நான் அவரிடம் இனி எனக்கு வாழ ஆசை இல்லை. மரணம் அடைய விரும்புகிறேன் என்றேன். அவர் இல்லை கூடாது என்றார். நான் அவரிடம் எனக்கு எப்போது திருமணம் ஆகும் என்றேன். அவர் நீ உடனே போ என்றார். நான் எனக்கு உடனே போக பணம் இல்லையே என்றேன். அவள் என்னுடைய இடது பக்கம் சென்றார், காகிதத்தில் எதையோ எழுதிவிட்டு வலது பக்கமாக வந்து உனக்கு டிக்கெட்டிற்கு ஏற்பாடு செய்து விட்டேன் என்றார். அப்படியானால் நீங்களும் என்னுடன் இருப்பீர்களா என்று கேட்டவுடன் சிரித்துக் கொண்டே மறைந்துவிட்டார். அந்த கனவு களைந்து எழுந்தேன். அடுத்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகி இருக்கும். அப்போது ஒரு சகோதரி தன்னுடைய அனுபவத்தை எழுதி இருந்தாள். அதில் அவர் பாபாவின் சிலையில் இருந்து பாபா எழுந்து வந்ததைக் கண்டதாக கூறி இருந்தாள். ஆகவே நானும் என் கனவு நிஜமாகட்டும் என எண்ணினேன்.
நான் இந்தியாவில் ஒரு கணினி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். U.K நாட்டில் என்னுடைய தலைமை அலுவலகத்தில் இருந்து என்னுடைய அதிகாரி இந்தியாவுக்கு வந்தார். நான் அடுத்த சில நாட்களில் ஆஸ்திரேலியா மற்றும் UK விற்குப் போக வேண்டும் என்றார்கள். என்னிடம் விசா இல்லை. பாபா கூறியது போலவே நடந்தது. நான் விசாவிற்கு விண்ணப்பித்தேன். உடனே எனக்கு விசா கிடைத்துவிட்டது. 2011 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் UK என்ற இரண்டு நாடுகளுக்கும் சென்று வந்தேன். என்னிடம் புகைப்படக் கருவி இல்லை என்பதினால் அது கிடைத்தால் அங்குள்ள அசீரடி பாபாவின் ஆலயங்களுக்கும் சென்று புகைப் படம் எடுத்து வந்து அனைவருடனும் பகிர்ந்து கொள்வேன் என வேண்டிக் கொண்டு இருந்தேன். அதற்கு ஏற்ப எனக்கு நல்ல தரிசனம் கிடைத்தது. அடுத்த ஒரு வாரம் கழித்து மீண்டும் UK நாட்டிற்கு செல்ல வேண்டி இருந்தது. எனக்கு அப்போது பண முடை இருந்தது. ஆனால் பாபாவின் அருளினால் அதுவும் விலகியது. அனைத்தும் நல்லவிதமாக முடிந்தது. நான் அங்கு எடுத்த பாபாவின் படங்களை கீழே தந்து உள்ளேன்.


பாபா ஒரு முறை லஷ்மி தேவிக்கு ஒன்பது நாணயங்களை தந்ததாக படித்து இருந்தேன்.ஆனால் எனக்கு அவர் ஒன்று கூட தரவில்லை என நினைத்தேன். ஆனால் எனக்கு என் அலுவலகத்தினர் கொடுத்த தொலைபேசி எண்ணின் கூட்டுத் தொப்கை 9. அது போல எனக்கு அது கிடைத்த நாள் 27 அதாவது அதன் கூட்டுத் தொகை 9. ஆக இப்படியே பாபா எனக்கு கருணைக் காட்டுவர் என நம்புகிறேன்.
பாபாவின் மகள் 
-----------------------------------

என்னுடைய வாழ்கையின் ஒவ்வொரு
கட்டத்திலும் பாபா உதவி செய்தார்.


மனிஷா சகோதரி,
என்னுடைய பெயரையும், முகவரியையும் வெளியிடாதீர்கள்.
நான் கடந்த எட்டு வருடங்களாக பாபாவின் பக்தை. எனக்கு பல சங்கடங்கள் வந்தன . ஒவ்வொரு நாளும் அவரை பூஜித்தப் பின் என்னை அவர் பாதுகாப்பார் என நானே எனக்கு கூறிக் கொள்வேன். இந்த வருடம் அதிக சங்கடங்கள் வந்த ஆண்டு ஆகும்.
எனக்கு இரண்டு முக்கிய பிரச்சனைகள். முதலாவது நான் ஒரு பரிட்ஷை எழுத வேண்டும். அடுத்து கிரீன் கார்ட் எனும் பச்சை கார்ட் கிடைக்க வேண்டும். 2010 அம ஆண்டு டிசம்பர் மாதம் பரிட்ஷை எழுத விண்ணப்பித்தேன்.
எனக்கு பரிட்ஷைக்கு தயார் செய்து கொள்ள ஆறு மாத காலமே இருந்தது. அதற்குள் என்னை தயார் செய்து கொள்ள வேண்டும் . ஆனால் என் மீதே எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் நான் பரிஷை எழுதச் சென்றதும் நாங்கள் கொண்டு போய் இருந்த புத்தகங்களை வைத்துக் கொள்ள எங்களுக்கு ஒரு லாக்கர் கொடுத்தார்கள். அது அந்த நட்டு கல்வி நிலையத்தின் நடைமுறை. அந்த லாகரின் எண்ணிக்கை ஒன்பது. அது இரண்டு நாட்கள் நடைபெறும். இரண்டு நாளும் எனக்கு அதே என்ன உள்ள லாகர் கிடைத்ததினால் பாபா எனக்கு துணையாக உள்ளார் என நம்பினேன். நான் பரீட்சையில் நல்ல மார்க் எடுத்து தேர்வு அடைந்தேன். என் கணவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
அடுத்த பிரச்சனை கிரீன் கார்ட். நாங்கள் பல ஆண்டுகளாக அதற்க்கு விண்ணப்பித்துக் கொண்டே வந்தோம். சாதாரணமாக செப்டம்பர் மாதத்துடன் அதை கொடுப்பது நின்று விடும். இந்த ஆண்டும் செப்டம்பர் மாதம் வந்தது. எங்களுக்கு கிரீன் கார்ட் கிடைக்கவில்லை. நாங்கள் வருத்தத்தில் ஆழ்ந்தோம். ஏன் என்றால் அது என் கணவருக்கு முக்கியமான பிரச்சனை. ஆகவே சாயி சரித்திர பாராயணம் செய்யத் துவங்கினேன். ஆனால் என் கணவருக்கு அது கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. திடீர் என அந்த இறுதி மாத கணக்கை அக்டோபருக்கு மாற்றினார்கள். ஆகவே நாங்கள் நம்பிக்கையோடு பாபாவிற்கு நன்றி கூறினோம். அடுத்து நான் உடல் நலமின்றிப் போனேன். பாபாவை நீ ஏன் இப்படி மீண்டும் மீண்டும் சோதனை செய்கிறாய் என கேட்டு அழுதேன். என் மருத்துவ சோதனைகள் நல்ல முடிவை கொடுக்க வேண்டும் என அவரிடம் வேண்டினேன். அன்று என் E -மெயிலை திறந்தேன். என் ஒன்றுவிட்ட சகோதரன் சில படங்களை அனுப்பி இருந்தான் அதை திறந்தேன். முதலில் இருந்தது பாபாவின் புகைப் படம். அதுவே எனக்கு மன ஆறுதலாக இருந்தது. அதைப் போலவே அன்று வந்த மருத்துவ சோதனையில் எனக்கு அனைத்துமே சரியாக இருந்தது என முடிவு இருந்தது.
--------------------------
பாபா சரியான நேரத்தில் உதவினார்

எனக்கு என்னுடைய மகனின் வேலை விஷயமாக பணம் தேவைப்பட்டது. அனைவரிடமும் கேட்டும் எவரும் தர முன்வரவில்லை. என்ன செய்வது எனத் தெரியாமல் பாபாவிடமே பணம் கேட்டு மனம் உருகி வேண்டினேன்.
அன்று மதியம் என்னுடைய தபால் பெட்டியை திறந்தேன். அதில் எனக்கு வரவேண்டிய இன்சூரன்ஸ் பணத்தின் காசோலை இருந்தது. உண்மையில் அது வரவேண்டியது அக்டோபர் மாதம்தான். ஆனால் அதற்கு முன்னரே வந்துவிட்டது. இது பாபா நம்மைக் கைவிடுவதில்லை என்பதையே அல்லவா காட்டுகின்றது.
யு. பாபாஜி
மலேசியா


(In Tamil By Santhipiriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.