Friday, October 14, 2011

Shirdi Sai Baba's Grace-Experience of Sai Devotees-Part 20

ஷீரடி சாயிபாபாவின் அருள் 


அன்பானவர்களே
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
சகோதரர் சீரீஷின் அனுபவத்தைப் படித்தப் பின்னர் இன்னொரு பக்தர் எழுதி உள்ள அனுபவம் இது.  பாபாவிற்கு நாம் கொடுக்கும் வாக்குறுதியை நாம் நிறைவேறினால் அவருடைய அருளும் ஆசியும் நமக்கு நிச்சயம் கிடைக்கும். இந்த பக்தரின் அனுபவத்தை தொடர்ந்து மேலும் இரண்டு அன்பர்கள் எழுதி உள்ள அனுபவத்தையும் வெளியிட்டு உள்ளேன்.
மனிஷா 
-----------------------------------

சாயிபாபாவிற்கு கொடுத்த வாக்குறுதி


அன்புள்ள சகோதரி மனிஷா,
நான் தமிழில் உள்ள சாயி சரித்திரம் எங்கு கிடைக்கும் என தேடிக் கொண்டு இருந்தேன். அப்போது உங்கள் இணையதளத்தைப் பற்றி தெரிய வந்தது. அதில் அன்பர்கள் பாபாவின் அனுபவத்தை பகிர்ந்து கொள்வதும் தெரிந்தது.  அதை படிப்பதற்கே அருமையாக இருந்தது. அதில் பாபாவின் அருளைப் பெற்றவர்களின் அனுபவங்களை படித்து மகிழ்ந்தேன்.
நான் என்னுடைய சகோதரியின் வாழ்க்கையினால் பலவிதமான மனத்துயரில் இருந்தேன். ஒவ்வொரு நாளும் அந்த மனக் கவலையில் இருந்து எனக்கு விடுதலை தருமாறு பாபாவிடம் வேண்டிக் கொண்டு இருந்தேன்.
அப்போது சாயி சரித்திரத்தைப் படித்தால் துயரம் நீங்கும் எனத் தெரிந்தது. அதற்காக தமிழ் புத்தகத்தை தேடினபோது உங்கள் இணையதளத்தில் அது கிடைத்தது. நான் பாபாவிடம் என்னுடைய துயரம் தீர்ந்தால் என் அனுபவத்தை உங்கள் தளத்தில் எழுதுவதாக வாக்குறுதி தந்தேன்.
அதன் பின் நாள் ஒன்றுக்கு இரண்டு பாகங்களாகப் படிக்கத் துவங்கினேன். இரண்டு நாட்கள் கழிந்தது. ஒரு வழியும் தெரியவில்லை. ஆகவே பாபாவிடம் என்னுடைய சகோதரியின் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்து என்னுடைய பெற்றோர்கள் மன நிம்மதி பெற வழி செய்ய வேண்டும் என வேண்டி அழுதேன் .
என்னுடைய சகோதரி திருமணம் செய்து கொள்வதில் பிரச்சனையை எழுப்பியதினால் என் பெற்றோர்களுக்கும் அவளுக்கும் மனஸ்தாபம் இருந்தது. அது மேலும் மேலும் அதிகரித்தது.  அவர்கள் ஒருவருக்கொருவர்  பேசிக் கொள்வதைக் கூட நிறுத்தி விட்டார்கள். கூடவே உறவினர்கள் வேறு அவள் திருமணத்தைப் பற்றி என் தந்தையிடம் அடிக்கடிக் கேட்க அவர் மேலும் துயரத்தில் ஆழ்ந்தார்.
நானோ என்னுடைய தந்தை மற்றும் சகோதரியிடம் அது குறித்துப் பேசினேன். ஆனால் இருவரும் அவரவர் கருத்தில் பிடிவாதமாக இருந்ததினால் அதை தீர்க்க  வழியே தெரியவில்லை. பாபாவிடமே மீண்டும் மீண்டும் வேண்டி அழுது வந்தேன்.
ஆகவே அவர்கள் இருவரையும் நேரடியாக பேச ஏற்பாடு செய்ய வேண்டும் என முடிவு செய்தேன். அதற்கான தருணத்தை எதிர்பார்த்துக் காத்து இருந்தபோது ஒருநாள் சகோதரி மற்றும் என்னுடைய தாயாரை நேருக்கு நேர் பேச வைத்து அவர்களுடைய மன வேறுபாட்டைக் விலக்கினேன் . அவர்கள் இருவரும்  சம்மதத்திற்கு வந்து சுமுக நிலைக்கு வந்தார்கள் . 
ஆனால் என்னுடைய தந்தையையும் சகோதரியையும் ஒன்றாக பேச வைக்க முடியவில்லை.  இருவருக்கும் அவரவர் மனதில் கருத்து வேறுபாடு இருந்தது. நான் என்னுடைய தந்தையிடம் தாயாரையும் சகோதரியையும் பேச வைத்த செய்தி அனைத்தையும் கூறினேன்.  அதற்குப் பிறகு  அவர்கள் இடையே இருந்த மனஸ்தாபம் மெல்ல மெல்ல குறையத் துவங்கியது. தற்போது தந்தை மற்றும் சகோதரி இருவரும்  ஒருவருக்கொருவர் பகைமை காட்டிக் கொள்ளவில்லை. விரைவில் அவர்களுக்கு இடையே சமாதானத்தை பாபா ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. அதனால் எனக்கும் என் மன உளைச்சல் மறைந்து  தற்போது மன அமைதி கிடைத்து உள்ளது.
எனக்கு என்னுடைய அனுபவத்தை எப்படி எழுதுவது என்றே புரியாமல் இருந்தபோது ஒரு நாள் படித்தேன். 'சாயிக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை மீறாதீர்கள்'. அதைப் படித்தப் பின்னர்தான் நான் அவருக்கு கொடுத்த வாக்குறுதியை மறந்து விட்டு இருந்தது தெரிந்தது. நான் கொடுத்த வாக்குறுதி என் நினைவுக்கு வந்தது. என்னுடைய பிரச்சனை முழுமையாகத் தீராவிடிலும், எனக்கு என் பெற்றோர்கள் மற்றும் சகோதரியின் மன வேறுபாட்டினால் ஏற்பட்ட மன உளைச்சல் தற்போது இல்லை. அவர்கள் கருத்து வேறுபாடும்  விரைவில் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. என் சகோதரிக்கு விரைவில் திருமணம் ஆகி அவள் நல்ல வழக்கை பெறுவாள் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.
சாயி ராம்
---------
சாயி விரத மகிமை
நான் உங்கள் தளத்தில் சாயியின் விரத மகிமையை படித்துள்ளேன். ஆனால் எனக்கு நேரம் இல்லை என்பதினால் அதை செய்ய முடியவில்லை.
என்னுடைய சகோதரன் 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டான். முதலில் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் பல கருத்து வேறுபாடுகள் அவர்களுக்குள் வந்து அவள் அவரை விட்டு விலகி  தனது தாயாரின் வீட்டிற்குச் சென்று விட்டாள்.
என்னுடைய தாயார் என்னுடைய குழந்தைப் பார்த்துக் கொள்வதற்காக என்னுடன் வந்து தங்கி இருந்தாள். என்னுடைய சகோதரனின் வாழ்க்கையினால் அவள் மிகுந்த மனத்  துயரில் இருந்தாள். என்னுடைய சகோதரன் அவன் மனைவியுடனும் அவளுடைய பெற்றோர்களுடனும் எவ்வளவோ பேசிப் பார்த்தும் அவள் அவனுடன் வந்த வாழத் தயாராக இல்லை. ஆகவே சாயிபாபாதான் இதற்கு ஒரு வழி காட்ட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.
ஆகவே நான் சாயி விரதத்தை துவக்க முடிவு செய்து தாயாரிடம் அதைப் பற்றிக் கூறினேன். வியாழன் கிழமைகளில் நான் வீட்டில் இருந்தே அலுவலக வேலை செய்து வந்ததினால் அந்த விரதத்தை நானே செய்யத் துவங்கி முடித்தேன்.
அந்த விரதம் முடிந்து அடுத்த வாரம் என்னுடைய சகோதரனிடம்  இருந்து அவனுடைய மனைவி திரும்பவும் அவனுடன் வந்து வாழ சம்மதித்து விட்டதாக செய்தி வந்தது.  நாங்கள் அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தோம் . பாபாவே எங்களுக்கு அருள் புரிந்து உள்ளார். அவர்கள் தற்போது மகிழ்ச்சியுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். 
-----------------------------------------
உடி மகிமை
என்னுடைய நண்பன் ஒருவருக்கு சிறிய வயது மகள் இருக்கின்றாள். அவளுக்கு பருவ நிலை மாறுதலினால் உடல் நலம் குன்றும். ஒரு முறை அவளுக்கு நிற்காமல் பேதியாகியது. மருத்துவ மனையில் சேர்த்தார்கள். மருத்துவரிடம் காட்டியும் குணம் அடையவில்லை. நான் அவளைப் பார்க்கச் சென்றபோது அவளுக்கு பாபாவின் உடியை தந்தேன். அவளும் பாபாவின் பக்தைதான். நான் அவள் முன்னிலையில் அந்த குழந்தைக்கு அதன் நெற்றியில் உடியை இட்டு விட்டேன். தினமும் அதை அவளுக்கு இடுமாறு கூறினேன். அவளுடைய நிலைமை மோசமாக இருந்தது. சிறிய அறுவை சிகிச்சை செய்து குழாய் வழியத் உணவை கொடுத்தார்கள். அவள் குணமடைய இன்னும் ஒரு மாதம் ஆகும் என்றார்கள். ஆனால் உடியை கொடுத்த ஓரே வாரத்தில் அவள் குணம் அடைந்தாள் என்பது பாபாவின் அருள்தான்.
-----------------------

மகாசமாதியில் சாயியின் தரிசனம்
மனிஷா  சகோதரி,
நான் பாபாவின் சிறிய பக்தை. என் பெயர் அனாமிகா சிங் . இந்தியாவில் வசித்து வருகிறேன். ஆனால் என் முகவரியை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். சாயி பாபாவுக்கு கோடி கோடி ப்ரணாம். என் அனுபவத்தை  அனுப்பி  உள்ளேன்.
அனாமிகா சிங் 

15 .10 .2010 பாபாவின் மகா சமாதி தினம் ஆகும். எனக்கு அன்று பாபாவை தரிசிக்க வேண்டும் போல இருந்தது. என் கணவரிடம் அதைப் பற்றிக் கூறினேன். அவரும் வருவதாகக் கூறினார். முதலில் BSNL அலுவலகம் சென்று அங்கு தனது பிராட்பாண்ட் பிரச்சனையை தீர்த்துக் கொண்டு செல்லலாம் என அவர் கூறியதினால் முதலில் அங்கு சென்றோம். நான் அதை முடித்தப் பின் ஆலயம் செல்ல ஆவலுடன் காத்து இருந்தேன். ஆனால் அங்கு அதிக நேரம் ஆகிவிட்டதினால் என் கணவர் மாலை ஆலயத்துக்கு செல்லலாம் எனக் கூறினார். எனக்கு வருத்தமாக இருந்தது. ஆனால் வேறு வழி இல்லை. ஆகவே அலுவலகத்துக்கு கிளம்பியபோது ஒரு இடத்தில் போலிஸ் அனைவரது வண்டி சம்மந்தப்பட்ட காகிதங்களையும் சோதனை செய்து கொண்டு இருந்ததைக் கண்டோம். என் கணவர் மறந்து போய் அவற்றை வீட்டிலேயே வைத்து விட்டதினால் வேறு குறுக்கு வழியில் செல்லத் துவங்கினோம். வழி சரியாகத் தெரியாததினால் யாரோ ஒருவர் கூறிய வழியில் சென்றபோது அந்த வழியில் அற்புதமான சாயி ஆலயம் இருந்ததைக் கண்டேன். அங்கு சாயியை தரிசித்து விட்டு சென்றோம். சாயி எனக்கு அருள் புரிந்துவிட்டார். அது போல இந்த வருட மகாசமாதி தினத்தன்றும் சாயியின் தரிசனம் நன்கு கிடைத்தது. 

(Into Tamil by Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.