Monday, May 28, 2012

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 37




(Translated into Tamil by Mrs. Ramya )


பாபா தின நல்வாழ்த்துக்கள் !
இந்த தளத்தில் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துக் கொள்ளும் பக்தர்களுக்கு பாபாவின் நல்லாசிகள் சென்றடைகின்றன.பாபாவின் அளவில்லாத அன்பு, கடலின் அலை போல என்றும் ஓயாமல் இருந்துக் கொண்டு இருக்கிறது.இந்த அலை நமது மனதையும், உயிரையும் அமைதியாக்கி நம் வாழ்விற்கு அர்த்தத்தை கொடுக்கிறது.இங்கு பகிர்ந்துக் கொள்ளப்படும் அனுபவங்கள் நம் வாழ்க்கைக்கு தொடர்புடையதாக இருப்பதோடு அல்லாமல், துயரத்தில் வாடி, மன நிம்மதியை தேடி அலையும் பலருக்கு அதிகப்படியான சக்தியை கொடுக்கிறது.
அனுபங்களை நாம் பகர்ந்துக் கொண்டும்,பாபாவின் லீலைகளை பருகி கொண்டும் இருப்போமாக.பாபாவின் சரித்திரத்தில் உரைக்கப்பட்டதாவது, பாபாவின் கதைகளை தினமும் கேட்டால் பாபாவை நாம் எப்போதும் பார்க்கலாம்.காலை மாலை என உள்வாங்கி இவரை தியானித்தால், வாழ்வின் துன்பம் அகன்று தூய தன்னிலையை அடையலாம். 
மனிஷா 
-------------------------------------------------------------------------------

பாபா, அவர் என்னுடன் இருப்பதை உணர்த்தினார் 

சகோதரி மனிஷா,
உங்களின் உயரிய சேவைக்கு நன்றி.எனது அனுபவத்தை இங்கே பகிருமாறு கேட்டுக் கொள்கிறேன்.எனது பெயரை குறிபிட்ட வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
அன்பர்களே,
அனைவருக்கும் எனது சாய்மாவின் அற்புதமான அனுபவத்தை பகிர்ந்துக் கொள்கிறேன்.
எப்போதும் போல நான் இன்று காலை இந்த தளத்திற்கு வந்து நம் சாய் குடும்பத்தின் பக்தர், ஒருவரின் பாபாவின் லீலையை படித்துக் கொண்டு இருந்தேன்.அந்த லீலையில் பக்தர், பாபாவை எப்படியாவது பார்க்க வேண்டும் என நினைத்து, அன்று மாலை ஆட்டோவில் பாபாவின் படத்தை பார்த்து இருக்கிறார்.
பின் நானும் இதே போல எனக்கு நடக்குமா என நினைத்தேன்.சராசரி ஆளாக நானும் பாபாவிடம், எனக்கும் இதை போல இன்று உங்களை காட்டுவீர்களா? நீங்கள் என்னுடன் இருப்பதை நான் இன்று உணர விரும்புகிறேன் பாபா எனக் கேட்டுக் கொண்டேன். இந்தியாவாக இருந்தால் பல இடங்களிலும், வண்டிகளிலும் பாபாவை வைத்து இருப்பார்கள். நான் இருப்பது அமெரிக்காவில். இங்கே எப்படி பார்க்க முடியும்? இன்று நான் ஆட்டோவிலும் போக போவதில்லை, கோவிலுக்கும் போக போவதில்லை. எனில் வீட்டிற்கு வந்து உங்களை பார்த்தால் மட்டுமே முடியும்.. என நினைத்துக் கொண்டேன்.
எனது அலுவல் வேலை மிகுதியின் காரணமாக நான் வேண்டியதை மறந்தே விட்டேன்.மதிய இடை வேளையில் எனது தோழி வீட்டிற்கு செல்வதாக கூறி விடைபெற்றாள்.பின் திடிரென எனக்கு தொலைபேசியில் அழைத்து, கீழ் தளத்திற்கு வர சொல்லி அழைத்தாள்.அங்கே சென்றதும், இந்தியாவின் முக்கியஸ்தர்களின் ஒருவரான ஒரு நபரை அறிமுகம் செய்து வைத்தாள்.அவர் பாபாவின் ஒரு தீவிர பக்தர்.என்னுடன் பேசியதும், எனக்கும் பாபா என்றால் பக்தி அதிகம் என தெரிந்துக் கொண்டார்.அவர் இந்தியாவில் இருந்து சாய் எந்திரம் கொண்டு வந்ததாகவும் அதை எனக்கும் கொடுப்பதாக கூறினார்..பின் திடிரென அவர் கழுத்தில் இருந்த நீளமான செயினில் இருந்த டாலரை காட்டினார்.அதில் இருந்தது என் அன்புக்குரிய பாபா.
என் ஆச்சர்யம் அதிகரித்து நான் வாயடைத்து போனேன்.இது பாபாவின் லீலையே தான்.நான் கேட்ட கேள்விக்கு,நான் மறந்தே போயி இருந்தாலும்,பாபா உடன் இருப்பதை உணர்த்திவிட்டார்.எனக்கு சில கஷ்டங்கள் இருந்தாலும் , பாபா அவருடன் என்னை வைத்து காப்பார் என நம்புகிறேன்.நமக்கு ஏற்படும் துன்பங்கள், நம் கர்ம வினை காரணமாக, அதிகரித்தாலும், பொறுமையுடன் நாம் இருந்தால் பாபா அவரிடம் நம்மை இதை போன்ற பல வழிகளில் ஈர்த்து அருள் புரிவார்.நான் தலை குனிந்து பாபாவிடம், நான் உங்களை சோதிக்கவில்லை, நீங்க அருகில் இருப்பதை உணர வேண்டும் என்றே கேட்டேன் என வேண்டினேன்.
பின் அந்த நபர் எனக்கு பாபாவின் எந்திரம், சாவி கொத்து படம்,மோதிரம் ஆகியவற்றை அனுப்பி வைத்தார்.எப்படி இது நான் பாபாவை வேண்டிய நாளிலேயே நடந்தது என இன்னும் நான் எண்ணி மகிழ்கிறேன்.எப்படி எனது தோழி, விடை பெற்று சென்றும், திடிரென என்னை அழைத்து அவரை சந்திக்க வைத்தாள். இது முற்றிலும் பாபாவின் லீலையே.நம்மை சுற்றிலும் நம் பாபா குடிக் கொண்டிருக்கிறார்.

 ------------------------------------------------------------------------------------------

இன்று காலை பாபா என் இல்லம் தேடி வந்தார்

சாய் ராம் மனிஷா அவர்களே
பறவையை சாய் பாபா தன் பால் ஈர்த்ததும், அந்த பறவை பல அனுபவங்களை கண்டுக் கொண்டிருக்கிறது. அந்த பறவைகளில் நானும் ஒரு பறவையே.பாபா ஒருவர் மட்டுமே நம் ஆழ்மனத்தின் எண்ணங்களை சரியாய் அறிந்து, அதற்கு மதிப்பும் கொடுத்து, அதற்கு தகுந்த பதிலையும் கொடுப்பவர்.இந்த அனுபவத்தை சொல்ல எனக்கு வார்த்தைகளே இல்லை. இது எனது மூன்றாவது அனுபவம் ஆகும். முதல் அனுபம் ( பாபா வங்கி கடனை பெற்று தந்தது) இரண்டாம் அனுபவம் ( ஷீரடியில் நடந்தது அனுபவம் 36 )
இரண்டு நாட்களுக்கு முன், நான் எதோ வேலை செய்து கொண்டிருக்கும் போது, திடிரென, பாபா என் வீட்டிற்கு வந்து, முன் வாசலில் அமர்ந்து என்னிடமும் ,எனது பக்கத்துவீட்டாரிடமும் பேசிக் கொண்டிருப்பதாகவும், என் வீட்டில் இருந்து சில உணவு பதார்த்தங்களை பெற்றுக் கொண்டதாகவும் நானே நினைத்துக் கொண்டேன்.
பின் அந்த நினைவில் இருந்து என்னை விடுவித்து, இது என்னவோ பகல் கனவு என நினைத்து விட்டுவிட்டேன்.
முன் தினம் ( மார்ச் -19 ) எனது வீட்டில் ஒரு துயர சம்பவம் நிகழ்ந்து நான் மிகுதியான வருத்தத்தில் இருந்தேன். பின் நள்ளிரவில் பாபாவின் சிலை முன் அமர்ந்து, எனது துக்கங்களை பாபாவிடம் கூறினேன்.பாபா என்னுடை பிரார்த்தனையை ஏற்காததை நினைத்து வருத்தமடைந்தேன்.மேலும் எனக்கும், பாபாவிற்கும் ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டதாக நினைத்தேன். ஏனெனில் பாபா என்னை ஆசிர்வதிக்காமல் எல்லா வழிகளிலும் சோதித்துக் கொண்டிருந்தார்.பின் நான் உறங்க சென்றுவிட்டேன்.
அடுத்த நாள் காலை ( மார்ச் - 20 ) எனது வீட்டிற்கு அருகே பாட்டு சத்தம் ஒன்றை கேட்டேன்.அது பக்கத்து வீட்டில் இருந்து வருகிறது என நினைத்தேன். பின் சில நிமிடங்களில் சத்தம் அதிகரித்தது, பின் தான் அது பாபா பாடல் என உணர்ந்து நான் உடனடியாக வெளியே சென்று பார்த்தேன்.அங்கே கண்ட காட்சி எனக்கு அதிர வைத்தது.பாபா பக்தர்கள் யாத்திரை சென்றுக் கொண்டிருந்தனர்.அந்த வண்டியில் பாபா பாட்டுகளை ஒலிக்க செய்தும்,பாபாவின் படங்களை வைத்துக் கொண்டும் இருந்தனர்.
அவர்கள் சரியாக என் வீட்டிற்கு முன் நின்றனர்.நான் அவர்களிடம் சென்று விசாரித்த போது, அவர்கள் ஷீரடியில் இருந்து யாத்திரை செய்து வருவதாக சொன்னார்கள்.அதில் ஆச்சர்யப்படும் வகையில் ஐந்து பேர்களில் ஒரு பாட்டி மட்டும் தமிழ் பேசினார்.அவராகவே என்னை நோக்கி வந்து எல்லாவற்றையும் கூறினார்.இடையில் ஹிந்தியும் பேசினார்.
அந்த யாத்திரை ஷீரடியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ஆனதாக இருந்தது.அவர்கள் ராமேஸ்வரத்தில் நடக்கும் அன்னதானத்திற்காக வழியில் அரிசி,நீர் மற்றும் வாழை பழங்களை தக்சனையாக பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.நாங்களும் அவர்களுக்கு பணம் , தேங்காய் மற்றும் வாழை பழங்களை கொடுத்தோம்.மேலும் அவர்களை நிழலில் சற்று அமர வைத்து எலுமிச்சை பழ ரசத்தை கொடுத்தோம்.
அந்த பாட்டி எனது கைகளில் அவர் கையை வைத்து, பாபாவின் ஆசிர்வாதங்கள் உனக்கு என்றும் உண்டு ,கவலை படாதே என்று பல முறை கூறினார்.அவர் மிகவும் மகிழ்வடைந்து, என்னை வாழ்த்தினார்.உண்மையாகவே அவர் 10 முறைக்கும் மேல் என்னை வாழ்த்தி இருப்பார்.
அவர் என் திருமணத்தை பற்றி கேட்டார். நான்,எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை,வீட்டில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என கூறினேன்.அவர் என் தலையில் கை வைத்து, பாபா விரைவில் ஒரு நல்ல பையனை அனுப்பி வைப்பார்.பாபாவின் ஆசியில் கூடிய விரைவில் உனக்கு திருமணம் நடக்கும் என கூறினார்.(இந்த திருமண பேச்சு காரணமாக 3 ,4 மாதங்களாக எங்கள் வீட்டில் பிரச்சனை நடந்துக் கொண்டிருக்கிறது.குறிப்பாக நானும், என் தந்தையும் 2 மாதங்காளாக சரியாக பேசிக் கொள்வதும் இல்லை.) ஆனால் இவர் இப்படி கூறியதும் எனது வீட்டில் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.அவர் எனது சகோதரனை பற்றி கேட்டு,அவரையும் ஆசிர்வதித்தார்.
எனது பக்கத்து வீட்டாரும் வந்து பணத்தை கொடுத்தனர்.ஆனால் என்னைத் தவிர அந்த பாட்டி யாரிடமும் பேசவில்லை. எனக்கு பாபாவின் படம்,உதி, குங்குமம் மாறும் பூக்களை கொடுத்தார்.
நாங்கள் இந்த வீட்டில் 23 வருடங்களாக இருக்கிறோம். முக்கிய சாலையில் இருந்து,எங்கள் வீடு மிகவும் உள்ளே இருப்பதால், இது வரை யாரும் இப்படி வந்து நன்கொடை கேட்டதில்லை.இது தான் முதல் முறை இந்த பகுதியில் இவ்வாறு வந்தது. அதுவும் எங்களின் பகுதியில் பல வீடுகள் இருந்தும், அவர்கள் எங்கள் வீட்டின் முன் வந்து நின்றனர்.அது எப்படி நடந்தது என எனக்கு தெரியவில்லை.திரும்பி செல்லும் போதும் அவர்கள் எங்கேயும் நிற்காமல் நேராக சென்றனர்.
நான் எனது பகல் கனவை நினைத்துக் கொண்டேன்.அது உண்மையானது என நினைத்து மிகவும் மகிழ்வடைந்தேன்.இதுவரை நான் கண்டிராத அற்புத அனுபவம் ஆகும்.பாபாவிற்கும் எனக்கும் இடையிலான இடைவெளியை பாபா உடைத்தார்.அவர் பால் நான் கொண்ட பக்தி 200 சதவிகிதம் அதிகமானது.
திரும்பி செல்லும் போதும் அந்த பாட்டி என்னை நோக்கி, பாபா ஆசிர்வதிப்பார்,கவலை படாதே எனக் கூறி சென்றார்.நான் பாபாவின் சிலை முன் நின்று மகிழ்ச்சியில் அழுதேவிட்டேன்.
மேலும், ஒரு சாய் லீலை அன்றே எனக்கு ஏற்பட்டது.என் அம்மா, அந்த பாட்டிற்கு தேங்காய் கொடுத்தார் எனத் தெரியாமல், நானும் ஒரு தேங்காயை கொண்டு வந்து கொடுத்தேன். அப்போது என் அம்மா நான் ஏற்கனவே கொடுத்துவிட்டேன் என நான் கொடுப்பதை தடுத்து, என் கையில் இருந்த தேங்காயை எடுத்துக் கொண்டார் .நான், அம்மா ஏன் இப்படி செய்கிறார் என நினைத்து, மிகுந்த கோபம் அடைந்து, அங்கே எதுவும் பேசவில்லை.பின் அம்மாவிடம் ஏன் இப்படி செய்தீர்கள் என கேட்டதற்கு, ஏற்கனவே கொடுத்த பின், ஏன் திரும்பவும் கொடுக்க வேண்டும் என்றார்.எனக்கு கோபம் வந்தாலும், சண்டை போட விருப்பம் இன்றி அமைதியாகிவிட்டேன்.பின் பாபாவிடம் சென்று அம்மா அவ்வாறு செய்ததற்கு மன்னிப்பு கேட்டேன்.
சிறிது நேரம் கழித்து, என் வீட்டில் வேலை செய்யும் பெண் ( அவரும் பாபா பக்தை) என்னை அழைத்தார். நீ இந்த தேங்காயை கொடுக்காதது நல்லது தான். இது கெட்டுவிட்டது என கூறி உடைத்த தேங்காயை காட்டினார்.சமைப்பதற்காக அது உடைக்கப்பட்டு இருந்தது.நல்ல வேலை கெட்டு போனதை கொடுப்பதை பாபா தடுத்துவிட்டார் எனக் கூறினார்.பின் நான் என் அம்மாவிற்கும்,பாபாவிற்கும் மகிழ்வில் நன்றி கூறினேன்.பாபா என்றும் என்னை தவறான செயல்களை செய்ய விடுவதில்லை.மேலும் துன்பங்களில் இருந்து காக்கிறார்.
நன்றி பாபா
உங்கள் அன்பையும்,ஆசியையும் பெற நான் ஆசிர்வதிக்கப்படிருக்கிறேன் அன்பர்களே, என் அனுபவத்தை நீளமாக கொடுத்ததற்கு மன்னித்துவிடுங்கள்.
ஓம் சாய் ராம்
கிரதா

------------------------------------------------------------------------------------


என் அன்னையை பாபா ஆசிர்வதித்தார் 

மனிஷா அவர்களே,
எனக்கு எப்படி என் அனுபவத்தை சொல்ல தொடங்குவது என்றே தெரியவில்லை.நான் பாபாவை பற்றி முதன் முதலில் என் அண்ணன் மூலம் பள்ளி பருவத்தில் தெரிந்துக் கொண்டேன்.அவர் ஷீரடிக்கு சென்று வந்ததன் காரணமாக நானும் பாபாவை பற்றி அறிய பெற்றேன்.ஷீரடிக்கு சென்று வர வேண்டும் என எப்போதும் என் மனதில் தோன்றினாலும் , அது பல நாட்களாக நிறைவேறவில்லை.கடைசியாக பாபா எனக்கு 2009 பிப்ரவரி மாதம் ஷீரடிக்கு வரும் பாக்கியத்தை நல்கினார்.
கடந்த வருடம் 2011 ல் என அன்னைக்கு மார்பக புற்று நோய் ஏற்பட்டது.அனைவரும் மிகவும் பயந்து போன நேரம்.அவரின் மார்பகத்தில் புற்று நோயின் காரணமாக முடிச்சு (கட்டி ) ஒன்று ஏற்பட்டது.மருத்துவ சோதனை நடக்கும் போது நான் அவருக்கு உதி கொடுத்து, கட்டியின் மீது வைக்க சொன்னேன்.
அந்த சோதனை முடிவில் அவருக்கு புற்று நோய் என் உறுதியானது. அந்த கட்டியை எடுத்து பயாப்சி(Biopsy ) பார்த்து தான் அடுத்தகட்ட மருத்துவ நடவடிக்கையை தொடர முடியும் என மருத்துவர் கூறினார். அறுவை சிகிச்சை போதும் நான் அவருக்கு உதியை பாதிக்கப்பட்ட இடத்தில் வைக்குமாறு சொல்லி, சிறிது தண்ணீரில் கலந்து குடிக்க கொடுத்தேன்.நாங்க இருவரும் ஏன் இத்தனை நம்பிக்கை வைத்தோம் எனத் தெரியவில்லை. பாபாவின் ஆசியின் காரணமாக வந்த முடிவு ஆச்சர்யத்தை கொடுத்தது.. என் அம்மாவிற்கு வந்தது மிகவும் ஆரம்பக்கட்டமான புற்று நோய்.அந்த பகுதியையும் எடுத்துவிட்டதால், அவருக்கு குணமாகிவிட்டது.இனி எந்த மருத்துவமும் தேவை இல்லை எனக் கூறினார்.எங்களது கண்களில் நீர் சொரக்க அனைவரும் பாபாவிற்கு நன்றி கூறினோம். அவரில்லாமல் இது கண்டிப்பாக நடந்து இருக்காது.
ஓம் ஸ்ரீ சாய் நாதாய நமக
அஸ்மா

---------------------------------------------------------------------------------------------


சாய் சம்பவம் எதனுடமும் ஒன்றிய சம்பவம் இல்லை

மனிஷா அவர்களே,
அனைவரும் நலம் என் நம்புகிறேன்.பாபா அவருடைய பக்தர்களின் சிறி சிறு நலனிலும் அக்கறைக் கொண்டு,அவரின் மீதான நம்பிக்கையை பெருக செய்ய, மிகவும் வேலையாய் இருப்பார் என் புரிந்துக் கொள்கிறேன்.நம் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் பாபா இருக்கிறார். சொல்ல இயலாத பொருள் ஒன்று அந்தரத்தில் பறப்பதை பார்ப்பதை போல, பாபாவை பார்க்கும் போதும்,பல இடங்களில் அவர் நம்மை பல இனிய அதிசியத்தைக் கொடுத்து சிலிர்க்க வைக்கிறார். பாபாவும், அந்தரத்தில் மிதக்கும் பொருளும் நம் அறிவுக்கு அப்பாற்பட்டது.பாபா புரிந்துக் கொள்ள முடியாத அவதார புருஷன்.பாபாவை பற்றி தெரியாதவர்களுக்கும், பாபாவின் மீது சிறிது மட்டுமே நம்பிக்கை கொண்டவர்களுக்கும் பாபா நம்பிக்கையை ஏற்படுத்தி, அவரின் பாதங்களில் பக்தர்களை பணிய செய்யட்டும்.
இந்த நுண்ணிய பாபாவில் லீலையை பகிருமாறு கேட்டுக் கொள்கிறேன்.இந்த இனிய லீலைக்கு நன்றி பாபா.பாபாவை மிகுதியாக நம்புபவர்களுக்கு இந்த முன்று சம்பவங்களும் தெரிந்துக் கொள்ள வேண்டிய ஒரு வரம்.நம் பாபா, அவரை எப்போதும் நாம் பயம் கலந்த பக்தியில் நினைத்திருக்க,தேவையான இடங்களில் நமக்கு அருள்கிறார்.கீழே நான் கொடுத்துள்ளது, பாபாவின் விரையில் பரவக் கூடிய லீலைகளுக்கு ஒரு சாட்சியாகும்.
1 .எனது தந்தைக்காக நான் மாத்திரைகள் வாங்கி வந்தேன்.திடிரென மருத்துவர் கொடுத்த சீட்டில் மாத்திரையின் ஆற்றல் அளவு எண் என்ன என பார்க்க முயன்றேன்.அவர் சீட்டில் எதுவும் எழுதித் தரவில்லை.இருந்தாலும் நான் விடாமல் ஒரு பூத கண்ணாடியை எடுத்து மாத்திரை அட்டையில் இருக்கும் ஆற்றல் அளவு எண்ணை காண தேடினேன்.என்னை தேட வைத்தது எண் அல்ல பாபா தான் என பின் புரிந்தது.பின் நான் மாத்திரைக்கு மேல் பார்த்ததும் என கண்களில் தென்பட்டது மாத்திரையை உற்பத்தி செய்த இடமான சாய் சாலை.கீழே நான் இணைக்கப்பட்டுள்ள படம் தான் பாபாவின் லீலைக்கு ஆன படம்.பாபாவின் ஆற்றல் சிறு அணுவையும் பிளக்க தக்கது என எங்களை புரிய வைக்க அவ்வாறு செய்திருக்கிறார்.


2 .எனது அண்டை வீட்டார் கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலுக்கும், மற்றும் பல கோவிலுக்கு புனித பயணம் மேற்கொண்டனர்.அந்த கோவிலில் உள்ள கிருஷ்ணர் பல நோய்களை தீர்க்க வல்லவர்.பாபாவின் ஆணைப்படி எனது தாயார் அவர் வயிற்று வலி அகல,இரண்டு மாதங்களாக நாராயண நாமத்தை பாராயணம் செய்துக் கொண்டிருக்கிறார்.
இந்த பாராயணம் குருவாயூர் அப்பனுக்கானது. இதன் மகத்துவம் இந்த தளத்தில் உள்ளது.அதை கொடுத்துள்ளேன். (http://en.wikipedia.org/wiki/ Melpathur_Narayana_Bhattathiri#The_Narayaneeyam) இந்த பயணத்தை பற்றி கேள்விப்பட்ட என் தாயார் மகிழ்ச்சியடைந்து, அவர்களுக்கு தக்ஷனை கொடுத்து குருவாயூர் கோவிலின் உண்டியலில் போட சொன்னார்.பாபா அண்டை வீட்டார் மூலமாக என் தாயாரை தக்ஷனை கொடுக்க வைத்தார்.
பாபாவின் ஆசியால், இரண்டு நாட்களுக்கு முன் நான் சென்னையில் உள்ள மைலாபூர் பாபா கோவிலுக்கு சென்றிருந்தேன்.அங்கே தரிசனத்தை முடித்து, நேரமாகிவிட்டதால், சீக்கிரம் கிளம்ப நினைத்தேன்.பாபாவின் பொருட்கள் விற்கும் கடையில் எதையும் வாங்க நினைக்கவில்லை எனினும் எதோ ஒன்று என்னை கடைக்குள் இழுத்தது. புதிதாக விற்பனைக்கு வந்துள்ள பொருட்களை பார்த்துக் கொண்டிருந்தேன்.எப்போது சாதரணமாக 3 டி படம் தான் வைத்து இருப்பார்கள்.ஆனால் கடையில் நான் கண்ட காட்சி , எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்து நான் ஆ என் சத்தம் போட்டுவிட்டேன்.சுற்றி இருந்தவர்கள் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள். அந்த படத்தில் ஒரு புறம் பார்த்தால் பாபாவும், இன்றோ புறம் பார்த்தால் சாட்சாத் குருவாயுரப்பன்.சில படங்களை வாங்கி நான் என் தாயாரிடம் கொடுத்தேன்.அவர் கண்கள் மகிழ்ச்சியில் கலங்கிவிட்டது.அவரது காணிக்கையை பாபா ஏற்றுக் கொண்டதாக நினைத்தார்.பாபாவின் அருளால் அவரது வலி சிறிது சிறிதாக குறைந்து, சுத்தமாக குணமாகிவிட்டது.பாபா எல்லா கடவுள் ரூபத்திலும் இருக்கிறார் என் நிருபித்துவிட்டார்.படங்களை கீழே இணைத்துள்ளேன்.





3 .சமீபத்தில் துணி தைப்பதற்காக நூர்கந்து வாங்க கடைக்கு சென்றேன்.கடைக்காரர் ஒரு பொட்டலத்தை எடுத்து வைத்தார். அதில் அச்சடிக்கப்பட்ட படத்தை பார்த்த பின்னும் எப்படி அந்த கண்டை வாங்காமல் வர முடியும் ? அதன் படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
தேவையான நலன்களை கொடுத்து பாபா அனைவரையும் ஆசிர்வதிக்கட்டும்

நன்றி பாபா
சாய் ராம்
----------------------------------------------------------------------------------------------


பாபா எனக்கு உதவினார் 


அனைவருக்கும் ஓம் சாய் ராம்
எனது அனுபவத்தை பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.எனது கைப்பேசி சிம் அட்டை திடிரென வேலை செய்யாமல் போனது.என்னுடை தொடர்பு எண்களை நான் எங்கும் எழுதி வைக்காததால், எப்படி அதை திரும்ப எடுக்க முடியும் என் மிகவும் கவலை அடைந்தேன்.
முழு மனதுடன் நான் பாபாவை வேண்டினேன்.அடுத்த நாள் காலை திடிரென எப்போதும் போல என் சிம் வேலை செய்தது.அது எப்படி என் தெரியவில்லை. இன்று வரை சரியாக இருக்கிறது. ஏற்கனவே அதை இன்னொருவர் உபயோகிக்க நான் அவரிடம் இருந்து 4 , 5 வருடங்களுக்கு முன் வாங்கியது. இது பாபாவின் அற்புத செயலே.தேவையில்லாத பிரச்சனையில் இருந்து பாபா என்னை காத்தார்.
இன்னொரு சம்பவம் எனது வேலை சம்மந்தப்பட்டது.நாங்கள் ஒரு அலுவலகத்தில் ப்ராஜக்ட் விஷயமாக மட்டுமே சென்று வேலைகளை செய்துக் கொண்டிருந்தோம். கல்லூரியில் ப்ராஜக்ட்க்காக சில ஆலைகளுக்கு செல்ல வேண்டும். என் ப்ராஜக்ட் வேலையை பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கேயே வேலை கிடைக்க போகிறது என எனக்கு தெரியாது. கடைசி நாள் திடிரென அந்த அலுவலகத்தில் இருப்பவர் யாரெல்லாம் இங்கே வேளையில் அமர ஆர்வம் இருக்கிறதோ அவர்கள் சேரலாம் என்றார்.எனக்கு அங்கே வேலை கிடைத்தது.அதில் ஆச்சர்யம் என்னவெனில், அதற்கு முன் தினம் தான், பொருளாதார நிலைக் காரணமாக, நான் பாபாவிடம் இங்கேயே வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும் என் வேண்டினேன் .அது போலவே நடந்தது, நேர்முக தேர்வு, குழு தேர்வு இவை எல்லாம் இல்லாமல் வேலை கிடைப்பது மிகவும் சிரமம். எனவே இது பாபாவின் ஆசியே.
நான் மிகவும் மகிழ்வாக இருக்கிறேன்.எனவே அன்பு நெஞ்சங்களே.பாபாவின் மீது நம்பிக்கை வையுங்கள். தேவையானதை அவரே தக்க சமயத்தில் செய்வார்.
நல்ல எதிர்காலம் அமையட்டும் !!
சுவாதி
-----------------------------------------------------------------------------

சாய் பாபாவின் அற்புதம் 


நான் சுஜெடா . குஜராத்தில் வசிக்கிறேன்.
என் தாத்தாவை நான் மிகவும் நேசிக்கிறேன்.அவர் மரணமடைந்த போது தான் இந்த சம்பவம் நிகழ்ந்தது.நான் மிகவும் வருத்தத்தில் இருந்தேன். நானும் அவரும் மிகவும் நெருக்கமாக இருப்போம்.நான் பாபாவை தாத்தாவை திரும்ப கொடுக்குமாறு வேண்டினேன்.இரவு 8 .30 மணி அளவில், நான் தாத்தாவின் படத்திற்கு முன்னால் சென்று என்னிடம் இருந்த 5 ரூபாயை அவருக்கு கொடுத்தேன்.
எனது தாயும்,தந்தையும் வியாழன் என்பதால் கோவிலுக்கு சென்றிருந்தனர்.நான் தாத்தாவிற்கு கொடுத்த 5 ரூபாய்,உடனடியாக மாயமாக மறைந்து போனது.பாபாவின் அருளால் என் தாத்தா எனக்கு ஆசி வழங்கினார்.
அனைவருக்கும் ஜெய் சாய் ராம்
கடவுள் அனைவரையும் ஆசிர்வதிக்கட்டும்.

( Uploaded by Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.