Saturday, June 2, 2012

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 39

சாயி பாபா அனுபவம் - 39

(Translated into Tamil by Ramya )


 
அனைவருக்கும் பாபா தின நல்வாழ்த்துக்கள்.ஒரு வாரம் இடைவெளிக்கு பின் எனக்கு பாபா அனுபவங்கள் குவிந்துள்ளன . பகிர்ந்துக் கொள்ளப்பட்ட அனுபவங்கள் பல சூழலையும்,பல உணர்வுகளையும் காட்டுகின்றன.அனுபவங்கள் பல வகை இருந்தாலும், அது முற்றிலுமாக பாபா தன் குழந்தைகள் மீது கொண்டுள்ள அன்பையும், அரவணைப்பையும் மட்டுமே காட்டுகிறது.
எதை பற்றியும் இன்னமும் பேசாமல் நான் பாபாவின் அனுபவங்களை பக்தர்களை படிக்க விடுகிறேன். மேலும் பக்தர்களின் பிரார்த்தனைகளையும் இந்த தளத்தின் மூலமாக நான் பாபாவின் காலடியில் சமர்ப்பிக்கிறேன்.
 
நேற்று கடலின் அடியில் தோன்றிய பூகம்பத்தால் பாதிப்படைந்த இந்தியாவின் கடலோர பகுதி மற்றும் இந்தோனேஷியாவின் பல பகுதிகளை சேர்ந்த மக்களுக்காக , அந்த பூகம்பத்தை விடவும் ஆற்றல் கொண்டவரான, நம் அன்புக்குரிய தந்தையும், இந்த உலகை காப்பவருமான, ஸ்ரீ சாய் நாதரை நாம் அனைவரும் ஆத்மார்த்தமாக பிரார்த்திப்போமாக.அந்த பூகம்பத்தின் தாக்கத்தை குறைத்து, உங்களின் விவரிக்க முடியாத சக்தியின் மூலம் பூமியின் அனைத்து உயிரினங்களையும் இயற்கை சீற்றத்தில் இருந்து காத்து அருளும்படி வேண்டுகிறோம் .பாபா நீங்கள் தான் இந்த உலகத்திலேயே மிகவும் ஆற்றல் வாய்ந்த அன்புக்குரிய கடவுள் .இந்த உலகத்தை நீங்கள் தான் மனிதனால் உருவாக்கப்பட்ட சீற்றத்தில் இருந்து காத்து அருள வேண்டும்.

ஓம் சாயி ராம், ஸ்ரீ சாயி ராம், ஜெய் ஜெய் சாயி ராம்.
ஓம் ஷீரடி வாசாய வித்மஹே
சச்சிதானந்தாய தீமஹி
தன்னோ ஹனுமத் ப்ரசோதயாத்
ஓம் சுதர்சனாய வித்மஹே
மஹா ஜ்வால சக்ராய தீமஹி
தன்னோ சக்ர ப்ரசோதயாத்
மனிஷா


 ---------------------------------




 சாயிபாபாவுடன்  எனது  அனுபவம்
 
மனிஷா அவர்களே, பாபா உண்மையாக உங்கள் சேவையை வேண்டுகிறார்.நான் ஏதும் தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும். நான் இதை பகிர்ந்துக் கொள்ள நினைத்ததின் காரணமும் பாபா தான்.எப்போது, எது,எப்படி சொல்ல வேண்டும் என பாபா தான் உணர வைத்தார். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்பதால் நேரிடையாக நான் அனுபவத்தை சொல்கிறேன்.
ஒரு நாள் மாலை நான் சாலை விதி குறியில் இரு சக்கர வாகனத்தில் நின்று இருந்தேன்.என் முன் மிக பெரிய லாரி ஒன்று இருந்தது.எனவே நான் இடப்பக்கம் சிறிது நகர்ந்து காத்திருந்தேன்.அப்போது தான் கவனித்தேன்.லாரி ஓட்டுனருக்கு உதவியாளர் இல்லாமல் , இரண்டு பக்கமும் அவரே பார்த்து ஒட்டுக் கொள்கிறார் என.எனவே நான் நிற்பதை ஓட்டுனர் பார்க்க முடியாது.
எனவே நான் கவனமாக இருக்க வேண்டும். நான் நிற்பதை பார்க்காமல் வண்டியை ஓட்டுனர் இடப்பக்கம் எடுத்தால் ஆபத்து என நினைத்தேன்.அப்போது அருகில் நின்று இருந்த இன்னொருவர் என்னை அழைத்து என் வண்டியில் நான் பக்கவாட்டில் இருக்கும் ஸ்டேண்டை எடுக்கவில்லை என உணர்த்தினார். எனவே நான் சைட் ஸ்டேண்டை எடுக்க முற்பட்டேன்.
அந்த இடைவெளியில், லாரி ஓட்டுனர் வண்டியை நினைத்தபடியே, இடது பக்கமாக எடுத்தார்,வண்டியின் பின் சக்கரம் என் பாதங்களில் ஏறியது.செருப்பு அணிந்து இருந்ததால் கடுமையான வலி உண்டாகியது.
உடனடியாக நான் வண்டியில் இருந்து இறங்கி பாபாவை அழைத்தேன்.பாபா வலி தாங்க முடியவில்லை. எலும்பு உடைந்துவிட்டதா இல்லை எனக்கு காலே போய்விட்டதா என ஏதும் அறியாமல் பாபாவை பிரார்த்தித்தேன். அடுத்த நொடியில் என் வலி காணாமல் போய்விட்டது.
 
என நடந்தது என புரியாமல், வீட்டிற்கு வந்ததும் நான் என் கால்களை பார்த்தேன்.நம்புங்கள் சக்கரத்தின் தடம் என் காலை முழுமையாக ஆட்க் கொண்டு இருந்தது.ஆனாலும், எந்தவித பாதிப்பும் இல்லாமல் போனதை பற்றி ஆச்சர்யப்பட்டேன்.ஆப்போது நான் பாபாவை அழைத்ததை நினைத்தேன்.பாபா தான் என்னை தக்க சமயத்தில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் காத்தார்.எல்லாமே என் வாழ்க்கையில் பாபாவின் கருணையே.
இன்னொரு முறை, சாலையில் நான் பேருந்துக்கு அடியில் ஒரு விபத்தின் காரணமாக சென்றும் உயிர் பிழைத்தேன்.அதன் காரணமும் என் பாபாவின் இனிய லீலைதான் .
நான் என் வேலையை மாற்ற எண்ணி வேலை தேடிக் கொண்டிருந்த போது, ஒரு நாள் வியாழன் மாலை, கோவிலில் இருந்து வீடு திரும்பியதும், ஒரு கம்பெனியில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது.நான் நல்ல முறையில் நேர்முக தேர்வை முடித்து, நான் எதிர்ப்பார்க்காத நல்ல சம்பளமும் கிடைத்தது.அதற்கு முழுக்க காரணம் பாபா தான்.அப்போது என் மனதை வாட்டிய ஒரே விஷயம் புது ஊரில் எனது அலுவலகம் அருகில் பாபா கோவில் இருக்குமா என்று தான்.ஏனெனில் தற்போது நான் வேலை செய்த நிறுவனத்தின் அருகில் பாபா கோவில் உள்ளது.இதை நினைத்துக் கொண்டே நான் புது ஊருக்கு சென்றேன்.நம்புங்கள் , அங்கேயும் எனது அலுவலகம் அருகில் பாபா கோவில் என் வீட்டிற்கு செல்லும் வழியிலேயே இருந்தது.
நான் பார்க்கும் பல பக்தர்கள் வாழ்வில் பல நிலையின் காரணமாக கஷ்டபடுகிறார்கள்.என்னை சேர்த்து அவர்களும் இந்த மோசமான நிலையில் தான் இருக்கிறார்கள் .பாபா ஒருவரால் மட்டுமே எந்தவித மோசமான நிலையையும் மாற்றி வாழ்விற்கு தேவையான அமைதியை கொடுக்க முடியும் .
சாயி ராம்
சரத்
----------------------------------------------





பாபா ராம நவமி அன்று எனது 
பிரசாதத்தை ஏற்றுக் கொண்டார்


சாய் ராம் !
மனிஷா அவர்களே உங்களின் உயரிய சேவைக்கு மிக்க நன்றி.பாபா உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசிர்வதித்து , நிம்மதியான வாழ்வையும்,மகிழ்ச்சியையும் அளிக்கட்டும்.ராம நவமியில் எனக்கு கிடைத்த அனுபவத்தை இங்கே பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.இதை உங்கள் தளத்தில் போடும்படி கேட்டுக் கொள்கிறேன்.
நான் வழக்கமாக பாபாவிற்கு நீரையும் , உணவையும் அளிப்பேன்.ராம நவமி அன்று, பாபாவின் அருகில் ராம், லட்சுமணன், சீதை மற்றும் ஹனுமான் சிலைகளை வைத்து துடைத்து, அலங்கரித்து , பூக்கள், சந்தனம் குங்குமம் வைத்தேன்.பின் ஒரு வெள்ளி கிண்ணத்தில் பாபாவிற்கு பாலை வைத்து சற்று நேரம் கழித்து உணவையும் வைத்தேன்.
உணவை வைக்கும் போது பாபாவிடம், இந்த நல்ல நாளில் நான் வைக்கும் இந்த சிறிய உணவை ஏற்றுக் கொள்ளுங்கள் பாபா எனக் கூறி, மற்ற கடவுள்களுக்கு மலர் வைக்க என் அம்மாவிடம் சென்றேன்.
பின் திரும்பி வந்து பார்க்கும் போது, அந்த டம்ப்ளரில் நான் வைத்திருந்த பால் குறைந்து இருந்தது.நான் எத்தனை பால் வைத்து இருந்தேன் என எனக்கு நன்றாக நினைவில் உள்ளது.முழு டம்ப்ளரில் இருந்த பால் குறைந்தும், அதை குடித்ததன் தடமும் அதில் இருந்தது. பாபாவும் ,ராமரும் நான் வைத்த சிறிய உணவை ஏற்றுக் கொண்டனர் என்பதில் எனக்கு அளவில்லாத மகிழ்சி.நான் பாபாவிற்கு மனதார நன்றிக் கூறினேன்.
பகவத் கிதையில் ராமர் கூறியதாவது, எவர் ஒருவர் எனக்கு இலை,பழம், பூ, நீர் என எதுவேண்டுமெனில் உண்மையான அன்புடனும், பக்தியுடனும் கொடுப்பாராயின், அதை எந்தவித தாமதமும் இன்றி உடனே ஏற்றுக் கொள்ள நான் ஆர்வம் மிகுந்தவனாக உள்ளேன்.அதை நான் நினைத்து பார்த்து அது எத்தனை உண்மை என புரிந்துக் கொண்டேன்.பாபா என்னை ராம நவமி அன்று ஆசிவதித்தார் .அது கண்டிப்பாக என்னால் வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒன்று.
மேலும் பாபா என்னை இன்னொரு விதத்திலும் ஆசிர்வதித்தார்.சாயி சரித்தரத்தில் நாம் படித்திருப்போம்.எந்த ஒரு நல்ல காரியம் தொடங்கும் முன்னும், பாபா மிகுதியான கோபம் அடைந்து சத்தம் போடுவார் என.ராம நவமி அன்றும் எனக்கு மிகுதியான திட்டு கிடைத்தது.அதை நான் பாபாவின் ஆசியாகவே நினைத்தேன்.எந்த வேலையை நான் தொடங்கினாலும், முடித்தாலும்,அதற்கு காரணம் பாபா என்றே கூறுவேன்.ஏனெனில் அவ்வாறு சொன்னதும் பாபாவே தான்.
சாயி ராம்
கீதா
-------------------------------------------




சிவராத்தரி அன்று மயிலை சாயிபாபா ஆலயத்தில் 
அமைக்கப்பட்டு இருந்த கைலாஷ் ,மலை (20 -02 -20112)

உங்கள் வாழ்க்கையை உயர்த்த பாபாவின் படங்களுடன் தொடர்பில் இருங்கள் :
அனைவருக்கும் பாபா தின நல்வாழ்த்துக்கள்,
மனிஷா அவர்களே.. இந்த லீலையை உங்கள் தளத்தில் பகிருங்கள்.போன வியாழன் நான் பாபா சேவையை ராம நவமியில் செய்ய விடுப்பு எடுத்தேன்.பல நாட்கள் என் அலுவல் வேலையின் காரணமாக பாபா என்னை அவருக்கு வேலை செய்ய அனுமதித்ததில்லை. அன்று மிகவும் நல்ல நாள்.நான் பாபா கோவிலுக்கு சென்று மாலை ஆரத்தியில் கலந்து கொள்ள நினைத்தேன்.அது வாழ்க்கையில் ஒரு பயத்தை கொடுத்த அனுபவம் ஆனது.
எனவே நான் ஒரு கட்டணத்தை பகிர்ந்து கொள்ளும் வண்டியில் ஏறினேன்.அதில் பாபா படம் ஒன்று இருந்தது.அதில் ஐந்து பாபா ரூபங்கள் இருந்தது.எனக்கு கிடைத்த ஆசியை எண்ணி நான் மனம் மகிழ்ந்தேன்.என் அளவிட முடியாத மகிழ்ச்சி , குறைந்து போனது போல ஒரு சம்பவம் நடந்தது.
நாங்கள் வண்டியில் 7 மற்றும் ஒருவர் பயணித்தோம்.திடிரென மிக பெரிய சத்தம் கேட்டு, நாங்கள் மூவரும் தூக்கி வாரி போடப்பட்டு எங்களின் எதிரில் அமர்ந்தவர்களின் மீது விழுந்தோம். ஒரு நிமிடம் ஆசுவாசப்படுத்தி திரும்பி பார்த்தால், ஒரு கல்லூரி பேருந்து, எங்கள் வண்டியில் பின் புறம் மோதி, வண்டி பழுதாகி போயிருந்தது.
இந்த பெரிய இடியினால் , வண்டிக் கதவுகள் தானாக திறக்கப்பட்டு, நாங்கள் அனைவரும் எங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு சட்டென வண்டியில் இருந்து இறங்கினோம்.வண்டி ஓட்டுனர் எந்தவித பாதிப்பும் இல்லாமல், வெளியே இறங்கி பேருந்து ஓட்டுனரிடம் சண்டை போட ஆரம்பித்தார்.
நாங்கள் அனைவரும் எந்தவித பாதிப்பும் இன்றி, பாபாவினால் காப்பாற்றப்பட்டோம்.ஆக, என்னுடன் சேர்ந்து மொத்தம் 8 சாய் பக்தர்கள் வண்டியில் பயணித்து இருக்கிறோம்.மோசமான நிலைமையில் இருந்து ,பாபா அனைவரையும் ஹனுமான் போல காத்தார் :).பாபா ஆரத்தி முடிந்ததும், என்னை சீக்கிரமாகவே வீட்டிற்கு போக வைத்தார்.நான் பாபாவிடம் நன்றி கூறினேன்.காரணம் நான் மனிஷா அவர்களிடம் ஒலியுடன் கூடிய pdf file தயார் செய்து கொடுப்பதாக கூறியிருந்தேன்.
பாபாவிற்கும், மனிஷாவிற்கும் மிக்க நன்றி. ஒவ்வொரு வியாழனும் எனக்கு ஆன்மிக வேலை கொடுத்து நான் ஹனுமான் சல்சாவில் தற்சமயம் வேலை செய்து கொண்டிருக்கிறேன்.நான் விடுப்பு எடுக்காமல் இருந்து இருந்தால், நிலைமை வேறு மாதிரி கூட ஆகி இருக்கலாம்.பாபா சிறிய இடிகளுடன் அனைவரையும் காத்தார்.அனைவரும் பாபா படத்தை வண்டியில் ஒட்டுவதன் மூலம் சாலை விதிகள் காக்கப்படும். இங்கே சாலை விபத்துக்கள் அதிகம்.எனவே பாபாவை அதற்காகவும் வேண்டினேன்.
பாபா உங்களின் அனைத்து குழந்தைகளையும் காப்பாற்றுங்கள்.
ஜெய் ஜெய் சாய் ராம்.


------------------------------------------------------
 



ராம நவமியில் சாயி மாதாவின் எதிர்பாராத ஆசிகள்
 
என்னுடைய இரண்டாவது அனுபவத்தை இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன்.ஒரு ஞாயிறு இரவு நான் சென்னையில் உள்ள வெஸ்ட் மாம்பழத்தில் உள்ள பாபா கோவிலுக்கு ராம நவமிக்காக சென்றேன்.பாபாவிற்கு ஆரஞ் பழங்களை கொடுத்து,அதில் பிரசாதமாக குருக்கள் ஒரு பழத்தை எனக்கு திருப்பிக் கொடுத்தார்.
சேஜ் ஆரத்திக்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன.நான் பாபாவிடம் சாதாரணமாக, உங்களுடைய விஷேசமான இந்த நாளில் இந்த எளிமையான பிரசாதம் எனக்கு கொடுக்க முடிந்தது.இது என் தவறு தான்.நாள் பகலில் வந்து இருந்தால் ஏதாவது விஷேசமாக கொடுத்திருப்பேன் என்றேன்.
நேற்று மதியம் அலுவலகத்தில் திடிரென என் மனதில் ஒரு எண்ணம் ஓடியது.நாளை செவ்வாய் கிழமை மைலாப்பூரில் உள்ள பாபா கோவிலில் துனி பூஜை.ஆனால் அதற்கு என்னால் முன்னமே பதிவு செய்ய முடியவில்லை.பல பக்தர்கள் தொடர்ந்து அதில் கலந்துக் கொண்டு வருகிறார். அதில் கலந்துக் கொள்ள அவர்கள் புண்ணியமும், ஆசிகளையும் பெற்றவர்கள் என நினைத்துக் கொண்டேன்.
அதை நினைத்துக் கொண்டே இரவு 7 .30 மணி அளவில் வீட்டிற்கு வந்தேன்.எப்போதும் போல 8 . 30 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.அப்போது எனக்கு தொலைபேசியில் வந்த தகவலை கேட்டு எனக்கு அதிர்ச்சி ஆகி, என்னை நானே கிள்ளி பார்த்துக் கொண்டேன்.எனது தோழி ஒருவர், அவரை கோவிலில் பார்ப்பதுண்டு.அவரின் சகோதரர் உடல் நலமில்லாமல் இருக்கிறார் எனவும், அவரை அவர் ஊரில் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் கூறி, அவருடை துனி பூஜை சீட்டை என்னை பெற்றுக் கொள்ளும்படி கூறினார்.மேலும் அவர் சார்பாக நான் அதில் கலந்துக் கொன்டால், அவரும் மாலை பிரசாதங்களை பெற்ற கொள்ள முடியும் என்றார்.அவரின் வீடு என் வீட்டிற்கு அருகில் தான் உள்ளது.
பின் தான் புரிந்தது, ஏன் பாபா மதியம் அப்படி ஒரு எண்ணத்தை என் மனதில் தோன்ற வைத்தார், பின் மாலையே எனக்கு துனி பூஜையில் கலந்துக் கொள்ள வழியும் கொடுத்தார் என.அவருடைய எண்ணத்தைதை யாராலும் புரிந்துக் கொள்ள முடியாது.நாம் சாயி சரித்திரத்தில் படித்தபடி, பாபா பக்தனை கனவில் வந்து அழைப்பார்.அடுத்த நாள் சம்மந்தமே இல்லாத ஒரு நபர் வந்து பக்தனை ஷீரடிக்கு அழைத்து செல்வார் என.அது போல கனவுக்கு பதிலாக என் நினைவில் தோன்ற வைத்து பாபா அழைத்தார்.
மேலும் இந்த சீட்டு எனக்கு தானா? இல்லை நான் வேறு தகுதியுடைய சிலருக்கு கொடுக்க வேண்டுமா? துனி பூஜையில் கலந்துக் கொள்ளும் பல பக்தர்களை எனக்கு தெரியும்.யாரோ ஒருவருக்கு பிரச்சனை என்பதால் பாபா இதை என்னிடம் கொடுத்து , சம்மந்தப்பட்ட நபருக்கு கொடுக்க நினைக்கிறாரா? நான் இதில் கலந்துக் கொள்ள போகிறேனா? என எனக்கு குழப்பம் ஏற்பட்டது.அதுமட்டுமின்றி இது எனக்கு இல்லை எனில், பாபாவே வேறு ஒருவரை என்னை அழைக்க செய்து இந்த சீட்டை வாங்கவும் செய்வார் பாபா என நம்பினேன்.
மேலும் இந்த சீட்டை இன்ன்ருவருக்கு கொடுக்க போதிய நேரமும் இல்லை என்பதால்,பதில் என்ன என தெரிந்துக் கொள்ள , பாபாவின் சாயி சரித்திரத்தின் புத்தகத்தை புரட்டினேன்.அதில் நான் கண்டது,எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது.ஒரு நாணயத்தில், ராம் ,லட்சுமணன், சீதை இன்னொரு புறத்தில் ஹனுமான்.ஷாமாவிடம் இந்த நாணயத்தை வைக்குமாறு சொல்லி, பாபா இதை ஏன் திருப்பி தர வேண்டும் எனக் கேட்கும் என்ற வாசகம்.
நான் ராம் நவமிக்காக பாபா எனக்கு கொடுத்த விஷேச ஆசி என மகிழ்ச்சி அடைந்து, என் பூஜை அறைக்கு ஒடி, பாபா சிலையில் அவரின் கன்னத்தை மகிழ்ச்சியில் கிள்ளினேன்.இந்த அனுபவத்தால் என் தாய் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.ஏனெனில் அவர் ஒரு சிறந்த ராம பக்தை, சுந்தர காண்டத்தை பாராயணம் செய்பவர்.
துனி பூஜையின் பிரசாதமான ரவை கேசரி மிக அளவாகவே கோவிலில் கொடுக்கப்படும்.எங்கள் குடும்பம் பெரிய கூட்டு குடும்பம்.எனவே அம்மா , யாரும் அதை தொடாமல், சீட்டுக்கு சொந்தகாரரிடமே குளிர்சாதன பெட்டியில் வைத்து கொடுத்துவிடலாம் என சொன்னார் .மேலும் என் அம்மா கோவிலில் வழக்கமாக கொடுக்கப்படும் பொங்கலையும் வாங்கி வர சொன்னார்.

 
மகிழ்வுடன் துனி பூஜையை முடித்து விட்டு வந்தேன்.அப்போது பாபா என் அம்மாவின் வார்த்தையையும் கவனித்து இருக்கிறார்.அவர் அமைதியாகவே இருந்து, எங்கள் நேர்மையான முடிவை பார்த்ததால், மேலும் இரண்டு அதிசியங்களை நிகழ்த்தினார்.
முதல் ஒன்று, நான் கோவிலுக்கு சென்றதும், பாபா அருகில் நலம் விசாரிக்கும் போது, பாபாவின் சமாதியில் அணிவிக்கப்பட்டிருந்த புலி தோலின் தோற்றம் கொண்ட துணியை கவனித்தேன்.அது என் அம்மாவினால் போன மாதம் பாபாவுக்கு கொடுக்கப்பட்டது.எனக்கு மகிழ்ச்சியில் துள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்ப்பட்டது. இந்த சீட்டு கண்டிப்பாக எங்களுக்கு தான் என்பதை பாபா இந்த வழியில் காட்டி இருக்கிறார்.
இரண்டாவது, துனி பூஜையின் பிரசாதங்கள் ஒவ்வொருவருக்கும் ஒன்று தான் கொடுப்பார்கள்.எனவே நான் இன்னொரு பெட்டியை எடுத்துக் கொண்டு வழக்கம் போல கொடுக்கப்படும் பொங்கலை அம்மா சொன்னபடி வாங்க எண்ணினேன்.நான் முன்னமே கூறியது போல் பாபா என் அம்மா நினைத்ததையும் அவரின் சக்தி முலம் அறிந்துள்ளார்.என்னை எதோ ஒன்று மீண்டும் பாபாவை காண ஈர்த்தது.நான் மீண்டும் உள்ளே சென்று பாபாவை பார்த்துக் கொண்டிருந்தேன்.அந்த நிமிடம் பொங்கலை வாங்கும் எண்ணமே என் மனதில் இல்லை.
துனி பூஜையில் பிரசாதம் விநியோகிப்பு முடிந்தது,குருக்கள் கர்ப்ப கிரகத்திற்குள் பாத்திரத்தை வைக்க வந்தார்.நான் பணிவாக அவரிடம், இன்னும் கொஞ்சம் துனி பூஜை பிரசாதம் கிடைக்குமா என்றேன்.அவரும் அன்புடன் பாத்திரம் இருக்கிறதா? எனக் கேட்டார்.பாபா அருகில் வைக்கப்பட்ட வாளியில் இருந்து, நான் கொடுத்த பெட்டி நிறைய ரவை கேசரியை போட்டு அவரே அதை மூடியும் அன்புடன் கொடுத்தார்.பாபாவே இந்த பிரசாதத்தை கொடுக்க காத்திருந்ததை போல் இருந்தது.இந்த எண்ணத்தை என் மனதில் தோன்ற வைத்தார் பாபா.
இது நாள் வரையில் இது போல அதிகப்படியான பிரசாதத்தை வாங்க முடியும் என நினைத்ததில்லை. கோவில் அலுவலக முறைப்படி அவர்கள் கொடுக்கக் கூடாது என நினைத்தேன்.அந்த குருக்கள் இந்த பிரசாதம் பாபா உங்களுக்காக ராம நவமிக்கு கொடுத்தது என்றார்.நான் தனியாக வந்து மகிழ்ச்சியில் அழுது, பாபாவை மனதார நினைவில் கட்டி அணைத்தேன்.எங்கள் மேல் இந்தனை பாசம் காட்டிய பாபாக்கு நன்றி.என் அம்மாவும் பாபாவின் கருணையை நினைத்து ஆனந்த கண்ணீர் வடித்தார்.
அனைவரும் பாபாவை தொடர்ந்து முழுமையாக நினைத்து உங்கள் அன்பை காட்டுங்கள்.அவர் அறிவிறுத்திய மொழிகளை பரப்புங்கள்.அவர் இருப்பதை உங்கள் குடும்பத்திற்கு உணர்த்தி வாழ்நாள் முழுதும் ஆச்சர்யபடுத்துவார்.பாபா அற்புதமானவர் .
அவருடன் நீங்கள் கொண்டுள்ள உறவையும், அவரின் உணர்வையும் அளவிட முடியாது
சச்சிதானந் சத்குரு சாயிநாத் மகராஜ் கி ஜெய்
என் சகோதரி முலம் சாய் பாபா பிரார்த்தனை :
கடவுள் சாயி நாத் பல சுழலில் நமக்கு உதவுவார்.அது எறும்பை போல சிறிய பிரச்சனை ஆனாலும் சரி, யானையை போல பெரிய பிரச்சனை ஆனாலும் சரி.பாபாவின் அனுபவத்தை இங்கே பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 நன்றி மனிஷா சகோதரி.
 
---------------------------------
 
 

சகோதரி மனிஷா.. எனது அனுபவத்தை கூறும் முன் மற்ற பக்தர்களுக்காக,முக்கியமாக வெளிநாட்டில் வாழும் மக்களுக்காக செய்யும் உங்களின் மகத்தான சேவைக்காக என் இதயபூர்வமான நன்றியை கூறிக் கொள்கிறேன்.எனது முகவரியை இங்கே சொல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.இது எனக்கு போன வாரம் நடந்த அனுபவம், இங்கே பகிர்ந்து கொண்ட இது தான் எனக்கு முதல் அனுபவம் .இதில் ஏதாவது தவறு இருந்தால் அதை மாற்றிக் கொள்ளுங்கள்.
எனது அனுபவத்தை கூறும் முன் , நான் பாபாவை 2012 ல் நான் வணங்க ஆரம்பித்தேன் .இந்த வருடத்தின் ஆரம்பத்தில் என் திருமண விஷயங்களாக எனக்கு சில பிரச்சனைகள் இருந்தன.பாபாவின் அருளால் எனக்கு வேலை கிடைத்தது.இல்லையெனில் என் விசா முடிந்ததால், நான் அமெரிக்காவில் இருந்து கிளம்பி இருக்க வேண்டும் மேலும் எனக்கு வேலை கிடைத்து இருக்காது.ஆனால் பாபா எனக்கு உதவினார்.
நான் ஒருவரை மன பூர்வமாக விரும்பினேன்.அவர் என் ஜாதி இல்லை என்பதால், அவர் வீட்டில் எங்கள் காதலுக்கு எதிர்ப்பு இருந்தது.ஆனால் இருந்தாலும் கடவுளிடம் எங்கள் இருவருக்கும்,உதவுமாறு வேண்டுனேன்.எனது தோழி ஒருவர் மூலம் சாயி விரதத்தை பற்றி கேள்விப்பட்டேன்.ஆனால் ஜனவரியில் என்னால் அந்த விரத்தை தொடங்க முடியவில்லை. எப்படியோ எல்லாவற்றையும் சரி செய்து பிப்ரவரியில் விரதத்தை தொடங்கினேன்.
இந்த விரதத்தை பற்றி, ஒரிசாவில் இருக்கும் என் அம்மாவிடம் நான் சொல்லவில்லை.ஆனால் முதல் வாரம் செய்ததுமே, நான் பாபாவின் அருமையை எனது வீட்டில் உணர்ந்தேன்.பல நாட்களாக முடிவுக்கு வராத எங்கள் வீட்டு பிரச்சனை ஒரே வாரத்தில் முடிவுக்கு வந்தது.பல நாட்களுக்கு பின் என் அம்மாவின் மகிழ்ச்சியை தொலைபேசியிலேயே நான் உணர்ந்தேன்.அதற்காக பாபாவிடம் தலைவணங்குகிறேன்.நன்றி பாபா.
பிரச்சனை முடிந்ததும், என் அம்மாவிடம் நான், ஷீரடி சாயி பாபாவிற்கு பிரசாதம் வைக்க சொன்னேன்.அதற்கு அம்மா,ஏன் பாப்பாக்கு மட்டும் என கேட்டார்.அதற்கு நான் சாயி விரதத்தை கடைபிடித்துக் கொண்டிருக்கிறேன் என்றேன்.என் அம்மாவிற்கு ஒரே ஆச்சர்யம், ஏனெனில் எனது அம்மாவும் அடுத்த வாரம் முதல் விரதம் தொடங்க எண்ணியிருப்பதாக சொன்னார்.மும்பையில் இருக்கும் எனது சகோதரியும் போன வாரம் விரத்தை தொடங்கி இருப்பதாக என் அம்மா சொன்னார்.நானும் என் சகோதரியும் ஒரே சமயத்தில் விரதத்தை தொடங்கி இருக்கிறோம்.என் அம்மாவும் அடுத்த வாரம் தொடங்க இருக்கிறார். நாங்கள் முவரும் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளாமலே ஒரே விஷயத்தை நினைத்திருக்கிறோம்.நான் அவர்களிடம் இருந்து பல மைல்கள் தனித்து இருந்தாலும், பாபா எங்கள் குடும்பத்தினரின் முடிவுக்கு தகுந்தாற் போல என்னை மாற்றியுள்ளார்.
என்னுடைய பிரச்சனை முடிந்தபாடு இல்லை.போன வாரம் ஏப்ரல் 25 ம் தேதி ஷீரடிக்கு அனுப்பப்படும் பிரார்த்தனை பற்றி படித்தேன். உங்கள் தளத்தில் எனது பிரார்த்தனை அனுப்ப முடியாமல் போனதிற்கு நாம் மிகவும் வருந்தினேன்.நான்கு முறை எனது வேண்டுதல்களை அனுப்ப முயன்றும் என்னால் அனுப்ப முடியாமல் போனது.நான் மிகவும் வருந்தி,அடுத்த நாள் காலை ஏனோ எனக்கு பல தேவையில்லாத விஷயங்கள் என் மனதில் ஒடி வாட்டம் தந்தது.என் அம்மாவை அழைத்து நான் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் என் சகோதரி விரதத்தை முடிந்தது விட்டு இன்னும் இரண்டு நாளில் ஷீரடிக்கு செல்ல போவதாக கூறினார்.
நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, என் சகோதரியை அழைத்து எனது பிரார்த்தனையை அவர் மூலம் ஷீரடிக்கு அனுப்பினேன்.பாபா என் சகோதரி மூலம் என் பிரார்த்தனையை கொண்டு செல்ல அருளினார்.இன்று நான் அவரிடம் பேசினேன்.அவர் ஒரு அழகான பாபா தரிசனத்தையும், அபிஷேகத்தையும் ஷீரடியில் கண்டு கழித்துள்ளார்.அதை கேட்கவே எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.பாபா ஒவ்வொரு உயிரையும் ஆசிர்வதிக்கிறார்.எங்களின் குடும்பத்தாரின் பிரச்சனையை முடிக்க வேண்டுதலையும் நாங்கள் வேண்டினோம்.
போன வாரம் http://www.yoursaibaba.com/import.php. இந்த தளத்திற்கு சென்று மனதில் தோன்றும் எண்ணை தட்டினால் , அதில் பாபாவின் ஆலோசனை கிடைக்கும் என நானும் ஒரு ஆசையில் என் மனதில் தோன்றிய எண்ணை போட்டு பார்த்தேன். அதில் எனக்கு ஒரு சிறிய விபத்து உள்ளது என்றும்,என்னை ஒரு கடிதம் பாதுக்காக்கும் எனவும் வந்தது.எனக்கு அப்போது ஒன்றும் புரியவில்லை . அதே போல அலுவலக சோதனை கூடத்தில் ஒரு விபத்து ஏற்பட்டது.அதற்கு காரணம் நான் தான்.எனது மேலதிகாரிக்கு நான் இதை பற்றி மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தினேன். பயத்துடன் அவரிடம் இருந்து பதில் கடிதத்தை எதிர்பார்த்தேன்.ஆனால் அவர் ஒன்றும் கலவைபடாதே.பரவாயில்லை .எல்லாம் சரி ஆகிவிடும் என பதில் அனுப்பினார்.நான் மாலை வீடு திரும்பியதும் பாபாவை வணங்கி நன்றி கூறினேன்.
சாயி நாதா.நீங்கள் பல வழிகளில் எனக்கு உதவி புரிந்துள்ளீர்கள். இன்னும் பல நிகழ்ச்சிகள் உள்ளன.என் திருமணத்திற்கும், எனது சகோதரிக்கும் உதவுகள்.ஏதாவது அற்புதம் நிகழ்த்துங்கள் . நான் இறக்கும் வரை உங்களுக்கு கடன்பட்டவளாய் இருப்பேன்.
சகோதரி மனிஷா அவர்களே, நான் இந்த தளத்திற்கு எப்போதும் வருவேன். சாயி மீது உள்ள நம்பிக்கையை அதிகரிக்க இந்த தளம் உதவுகிறது.நான் சாயி நாதரை பற்றி மிகவும் தாமதமாக தான் புரிந்துக் கொண்டேன்.ஆனால் பாபா நினைக்காமல் யாரும் அவருடைய பக்தர்களாக ஆக முடியாது.எங்கள் முவரையும் ஒரே நேரத்தில் பக்தி மையத்தில் ஈர்த்தார் பாபா.பல மைல்களுக்கு அப்பால் நாங்கள் இருந்தாலும் , குடும்பம் என்ற சொந்தத்தை தவிர வேறொரு உன்னதமான முறையில் எங்களை இணைத்தார் பாபா.எனக்காக பிரார்த்தியுங்கள்.
ஸ்ரீ சாயிநாத் சச்சிதானந்த மகராஜ் கி ஜெய்
நான் வணங்கும் பாபாவை இதில் பதிவிறக்கம் செய்துள்ளேன்.
சௌமியா

----------------------------------

 



 
பாபாவின் கிருபை

அனைவருக்கும் மற்றும் மனிஷா அவர்களுக்கும் ஜெய் சாயி ராம்
நவராத்திரியின் முன் தினமான அஷ்டமி காலை நான் பாபாவை முழு தெய்வீகத்தோடு தொழுதுக் கொண்டிருந்தேன்.அப்போது பாபாவிடம், பாபா எனக்கு நீங்கள் தரிசனம் தாருங்கள். உங்களை கட்டியணைத்து, உங்களின் பாதங்களை தொட வேண்டும் என்றும்,ஏதாவது ரூபத்தில் காட்சி கொடுங்கள் எனவும் வேண்டினேன். நாங்கள் ஏதும் அறியாதவர்கள் ஆதலால் எங்களுக்கு உங்களை கண்டறிவது கடினம் என்று எங்கள் வீட்டு சிறிய கோவிலில் உள்ள அழகான சிகப்பு நிற ஆடை அணிந்த பாபாவின் முகத்தை நெருக்கமாக பார்த்து வேண்டினேன்.
நான் பாபாவை பார்த்துக் கொண்டிருந்த போது, பாபாவின் காதின் வழியாக கருமையான புழு ஒன்று வெளிய வந்தது.அந்த வகை புழு சமமான தளத்தில் இருக்கலாம்.ஆனால் இந்த இடத்தில் இருந்து எப்படி வந்தது என எனக்கு ஆச்சர்யமாகவும்,அதிர்ச்சியாகவு
ம் இருந்தது.
இது ஒரு அதிசியம்.பின் நகர்ந்து வந்த புழுவின் அருகில் நான் ஒரு பாலிதீன் தாளை வைத்து பிடிக்க முயன்றேன்.அது பாபாவின் முகத்திற்கு அருகில் ஊறி சென்றது.பிடிக்க முயலும் போது அடுத்த வினாடி, எனது வலது கையில் அது விழுந்து ஊறுவதை நான் உணர்ந்தேன். பின் அதை தட்டி விட முற்பட்ட போது அது தரையில் விழுந்தது.அதன் பின் எத்தனை தேடியும் தரையில் அதை காணவில்லை.
பாபாவின் பாதங்களை நான் தொட்டு பார்க்க வேண்டும் எனக் கேட்ட ஆசையை பாபா புழுவின் ரூபத்தில் வந்து உண்மையாக்கினார். நன்றி பாபா.
பின் பாபா வந்தவுடன் இப்படி சென்றுவிட்டாரே என நினைத்து விட்டு அலுவலகத்திற்கு சென்றுவிட்டேன். பின் சராசரி மனம் கொண்ட நான் மாதாவிற்கு நவராத்திரி அன்று வைத்த தேங்காயில் இருந்து உண்மையாக புழு தான் வந்திருக்குமோ என நினைத்தேன்.
அலுவலகம் சென்றவுடன் நான் செய்யும் முதல் வேலை பாபாவின் சரித்திரத்தில் ஏதாவது ஒரு பக்கத்தை புரட்டி படிப்பது ஆகும்.எனக்கு வந்த பக்கத்தில் எழுதி இருந்தது,எவன் ஒருவன் உண்மையாக என்னை நினைக்கிறானோ, அவனிடம் என்னை கொண்டு சென்று வெளிப்படுத்த எனக்கு எந்த வாகனமோ, ரயிலோ விமானமோ தேவையில்லை.என்னை அன்புடன் அழைப்பவர்களிடம் நான் ஓடி சென்று அருள் புரிவேன் என்பதாகும்.
அதை படித்ததும் எனது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.பாபா நமக்கு அற்புதங்களை நிகழ்த்துவது மட்டுமின்றி, அதில் நமக்கு சந்தேகம் ஏற்பட்டால் அதை தெளியவும் வைக்கிறார்.
மேலும் இந்த அனுபவத்தை நான் எழுதிக் கொண்டிருந்த போது, எனது கணவர் என் அலுவலகத்திற்கு, நான் முடிக்க முடியாத சில வேலைகளை முடிப்பதற்காக வந்திருந்தார்.எனவே அதை பாதியிலேயே எழுதாமல் வைத்துவிட்டேன்.அன்று மாலை எனது தோழி ,அவர் ஒரு சாய் பக்தை.சாய் பற்றிய தகவல்களையும், வரிகளையும் எனக்கு அனுப்புபவர்.அவர் எனக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பி இருந்தார்.அதில் நான் கண்டது,சரித்திரத்தில் உள்ள, எவன் ஒருவன் உண்மையாக என்னை நினைக்கிறானோ, அவனிடம் என்னை கொண்டு சென்று வெளிப்படுத்த எனக்கு எந்த வாகனமோ, ரயிலோ விமானமோ தேவையில்லை.என்னை அன்புடன் அழைப்பவர்களிடம் நான் ஓடி சென்று அருள் புரிவேன் என்பதாகும்.
இதுவும் பாபாவின் ஒரு அனுபவமாகும். என் தோழி மூலம், அந்த தகவலை அனுப்பி, பாபா நான் அவர் லீலையை முழுமையாக முடிக்கவில்லை எனவும், அதை முடிக்குமாறும் கூறி இருக்கிறார்.
ஜெய் சாயி ராம்
அஞ்சு கவுள்
-----------------------------------------------






பாபாவின் படத்திற்கு அடிமை
 
முதலில் மனிஷா அவர்களுக்கு ,நாங்கள் பாபா பற்றி பகிர்ந்துக் கொள்ள ஒரு வாய்ப்பு அமைத்துக் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.ஒவ்வொரு முறையும் மனிஷா அவர்களிடம் இருந்து மின்னஞ்சல் வரும் போது, பாபா எப்படி தன் பக்தர்களை காக்கிறார் எனப் படிக்க மிகவும் ஆவலுடன் காத்திருப்பேன்.
என்னுடையது மிக சிறிய அனுபவம் என்றாலும் இனிமை வாய்ந்தது.8 மாதங்களுக்கு முன் என் அப்பா எனக்கு சாம்சங் வேவ் கைப்பேசி ஒன்றை வாங்கிக் கொடுத்தார்.சிறிய வயதில் இருந்தே எனக்கு புகைபடவியலில் அதிக ஆர்வம்.எனது கைபேசியில் எப்போதும் என்னுடைய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் என் புகைப்படங்கள் அதிகமாக இருக்கும்.
புகைப்படத்தில் அதிக ஆர்வம் இருப்பதால், என்னுடை பலவிதமான புகைப்படங்களை எடுத்து,எனது கணினியில் முன் திரையில் வைத்துக் கொள்வது என் வழக்கம்.நான் வழக்கமாக சாயி பாபாவின் புகைப்படத்தை பதிவிறக்கம் செய்வது உண்டு.ஒருமுறை பாபாவின் படத்தை என் கணினியிலும், கைபேசியிலும் முன் பக்கம் வைத்த பின் தான் இந்த அனுபவம் எனக்கு கிடைத்தது.அந்த நாள் முதல் நான் வேறு எந்த படத்தை அவரை தவிர மாறுவதில்லை .என்னால் மாற்றவும் முடியவில்லை .
நான் வேறு படங்களை மாற்ற முற்பட்டாலும், 2 நிமிடங்கள் கூட என்னால் அந்த படத்தை வைக்க முடியவில்லை. உடனே பாபாவின் படத்தை மாற்றிவிடுகிறேன்.எனது அனுபவம் மிக சிறியதாய் இருக்கலாம், ஆனால் அதை இங்குள்ள பல பக்தர்கள் உணர்ந்திருப்பார்கள்.
ஓம் சாய் ராம்
சாயி வாழ்ந்துக் கொண்டிருக்கும் கடவுள்.எதற்கும் கவலை படாதீர்கள்.பாபா எல்லாவற்றியும் பார்த்துக் கொள்வார்
நன்றி
ஹரிதா தேவினனி
----------------------------
 


 
திருநள்ளாரில் பாபாவின் ஆசிகள் 
 
சாயி ராம்
இந்த மாதத்தின் முதல் வாரம், ஒரு திருமணத்தில் பங்கேற்பதற்காக நான் இந்தியா சென்றிருந்தேன்.மார்ச் 1 2012 ம் வருடம், இரவு காரைக்காலுக்கு சென்னையில் இருந்து கிளம்பி, திருநள்ளாருக்கு சென்றேன்.
நான் சாயி சரித்திரத்தில், படித்தப்படி, பாபா, தன் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டியப்படி ஆசிகள் வழங்குகிறார் .எனவே நான் பாபாவிடம் நான் திருநள்ளாறு சனிபகவான் கோவிலுக்கு செல்கிறேன்.நீங்கள் எனக்கு ஆசிகள் வழங்க வேண்டிமென வேண்டினேன்.இது அலுவல் சம்மந்தப்பட்ட பயணம் என்பதால் நாசாவிற்கும் செல்ல வேண்டியிருந்தது.நம்புவீர்களா எனத் தெரியவில்லை, நான் திருநள்ளாறு செல்லும் வழியில் சாலையின் ஓரத்தில் மிகப் பெரிய பாபாவின் படத்தை பார்த்தேன்.என் வாழ்நாளில் அவ்வளவு பெரிய படத்தை நான் பார்த்ததில்லை.சிறிய அல்லது பாக்கெட் அளவு படத்தை தான் பார்த்து இருக்கிறேன்.
மேலும் கோவிலின் தொட்டியில் குளித்துக் கொண்டிருக்கும் போது எதிரில் பாபாவின் கோவிலை பார்த்தேன்.பாபா எனக்கு திருநள்ளாறில் கொடுத்த தரிசனத்திற்கு வணங்கி நன்றி கூறினேன்.
செல்வம் ஜி.குருசாமி
 ----------------------------------------



 
 
பாபாவின் ஆசியினால் மட்டுமே கிடைத்த வேலை 
 
மகத்தான உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மனிஷா அவர்களே. பாபாவின் ஆசியினால், எனக்கு தற்போது கிடைத்த அற்புதமான அனுபவத்தை இங்கே பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.
பாபாவின் ஆசியை என் வாழ்வில் பல வழிகளில் நான் அனுபவித்துள்ளேன்.அதிலும் தற்போது எனக்கு கிடைத்த அனுபவம் மிகவும் பெரிய ஒன்றாகும்.பாபா எனக்கு நல்ல ஒரு வேலையை ,ஒரு நல்ல சம்பளத்துடன் , நல்ல கம்பெனியில் , வாய்ப்புகள் நிறைந்த பதவியில் வேலை வாங்கிக் கொடுத்தார்.என் கதை மிக நீளமாக இருந்தால் மன்னிக்கவும்,நான் கொஞ்சம் சுருங்க சொல்ல முயற்சிக்கிறேன்.
கடந்த ஒன்றரை வருடங்களாக நான் மனோவியல் சம்மந்தப்பட்ட விஷயத்தில் அதிகப்படியான பணத்தை செலவு செய்து இன்று கடன் நெருக்கடியில் உள்ளேன்.நான் சம்பாதிக்கும் பணத்தை வைத்து என் கடனை அடைப்பது மிகவும் சிரமம். பாபாவை வணக்கினால் கூட, மனோவியல் தொடர்பாக எனக்கு தவறான சில வாக்குறுதிகள் கிடைத்தும், அங்கே செல்வது எனக்கு ஒருவித நிம்மதியை கொடுத்தது.நான் ஏன் இதை செய்கிறேன் எனக் கூட எனக்கு தெரியவில்லை. நான் பாபாவிடம் நான் அங்கே செல்வதை நிறுத்தி விடுகிறேன்.ஆனால் எனக்கு மனோவியல் நிபுணரின் உதவி வேண்டும் என்றேன்.
என் வேலையில் அதிகப்படியான பயணத்தை நான் மேற்கொள்ள வேண்டிய சுழலினாலும் , போதிய அளவு ஊதியம் இல்லாததாலும் எனக்கு வேலையில் அத்தனை திருப்தி இல்லை.எனவே நான் வேறு வேலை தேட ஆரம்பித்தேன்.யாரும் என்னை தேர்விற்கு அழைக்கவில்லை. என் நண்பர் ஒருவர் வேலை சம்மந்தமாக ஒரு இடத்தை பற்றிக் கூறினார்.ஆனால் அது ஒப்பந்தம் மூலம் வேலை பெற்று கொடுக்க கூடிய இடம். இருந்தாலும் நான் சரி என ஒப்புக் கொண்டு, காத்திருந்தேன். இரு வியாழன் முடிந்து, ஒரு பாபா நாளன்று என் வேலை சம்மந்தப்பட்டு நான் எடுத்த முடிவை பற்றி எண்ணி மகிழ்ந்தேன்.
சில மணி நேரங்கள் கழித்து, இந்தியாவில் இருந்து எனது அத்தை அழைத்து, எங்கள் பாட்டி தவறிவிட்ட செய்தியை கூறினார். மிகவும் வருத்தமடைந்தேன்.இருந்தாலும் அவர் என்னுடன் இருந்து ஆசிர்வதிப்பதாகவே நினைத்தேன். இறந்த பின் இரு முறை அவர் என் கனவில் வந்து பேசினார்.
இருந்தாலும் வேலை சம்மந்தப்பட்ட என் தேடலில் நான் மிகவும் விரக்தியடைந்து, yoursaibaba.com தளத்தின் மூலம் என் மனதில் தோன்றிய எண்ணை தட்டி பாபாவின் பதிலை கேட்டேன்.அதில் எனக்கு கிடைத்த பதில், பாபாவை முழுமையாக சரணடைந்ததும் , உனக்கு தேவையான நிம்மதி உன் வேலையில் கிடைக்கும். தேர்வில் வெற்றி பெற்று நல்ல வேலையில் அமர்வாய் என்பது ஆகும்.இது எனக்கு நல்ல அறிகுறியாகப் பட்டது. நான் மனோவியல் நிபுணரிடம் செல்வதை நிறுத்தி பாபாவை முழுமையாக நம்பினால் எனக்கு வேலை கிடைக்கும் என நம்பினேன்.
இதன் பின் நான் பல எண்களை தட்டியும் அதில் வெற்றி கிடைக்கும் என்றே பதிலாக கிடைத்தது.
பின் ஒரு திங்களன்று நான் நேர்முக தேர்வுக்கான நேரத்தை ஒதுக்கி, தேர்வு முடிந்ததும், நல்லபடியாய் முடிந்தது என நினைத்தேன்.அடுத்த நாள் செவ்வாய் காலை 10 .55 மணியளவில் என் ஒப்பந்ததாரரிடம் இருந்து அழைப்பு வந்தது.உடனே பதில் சொல்ல அழைத்ததால், வேலைக் கிடைக்கவில்லை என நினைத்தேன்.ஆனால் பாபாவின் அருளால் வேலை கிடைத்தது.
நான் பாபாவிற்கு இதய பூர்வமாக நன்றி கூறி வியாழன் அன்று கோவிலுக்கு வருவதாக கூறினேன்.ஆனால் என் வேலையில் இருந்து ராஜினாமா செய்வதால், அன்று காலை ஆரத்தியை பார்க்க முடியுமா? என நினைத்தேன்.ஆனால் நான் கோவிலுக்கு சென்ற நேரம் ஆரத்தி சென்றுக் கொண்டிருந்தது. எனக்கு வேலை வாங்கிக் கொடுத்ததற்காக நான் பாபாவை மனதார வேண்டி நன்றிக் கூறினேன்.பாபாவின் அருளால் தான் எனக்கு வேலை கிடைத்தது.
நான் என் கண்களை திறந்து பார்க்கும் போது பாபா புன்னைகைத்தார். நான் ஏதும் அதிகப்படியாய் சொல்லவில்லை .உண்மையாகவே பாபா சிரித்தார்.நான் கிளம்பும் நேரத்தில் அங்கே இருந்த குருக்கள் என்னை அழைத்து பாபாவிற்கு சந்தனம் அரைத்துக் கொடுக்க முடியுமா? என்றார்.நான் அலுவலகம் செல்ல வேண்டும் என கூறினாலும் , பின் சீக்கிரமாக செய்து கொடுத்து செல்கிறேன்.பாபாக்கு செய்யும் சிறு சேவையை தவறவிடுவதில் எனக்கு விருப்பம் இல்லை என்றேன். பின் பலர் இருந்தும் குருக்கள் மூலமாக பாபா என்னிடம் இருந்து இந்த சிறு உதவியை பெற்றுக் கொண்டதற்காக மகிழ்ந்தேன்.
நான் ஒரு கிறிஸ்துவன்.கோவிலுக்கு சென்ற போதும் நான் சிலுவை அணிந்து இருந்தேன்.நான், பாபா எனக்கு ஆசி வழங்கி, எனது தவறான முடிவுகளை நான் விட்டதற்காக மகிழ்வுடன் இருக்கிறேன் என கூறுவதாக நினைத்துக் கொண்டேன்.அவர் என் பிரார்த்தனைகளை கேட்டு என்றும் என்னுடன் இருக்கிறார்.
இருந்தாலும் நான் இன்னொரு தடையை தாண்ட வேண்டியுள்ளது .அலுவலக மேலாளர் என்னை தொடர்பு கொண்டு நான் புதிதாய் அமர போகும் வேலைக்கு தேவையான சில படிமங்களில் எனது கை எழுத்தை பெற வேண்டும்.இதுவரை அவர்கள் என்னை அழைக்கவில்லை.நான் தொடர்பு கொண்டும், பல முறை அழைத்து, இதை பற்றி தொலை பேசியில் பதிவு செய்தும் எனக்கு எந்த தகவலும் இல்லை. இது என்னை மிகவும் வருத்தமடைய செய்கிறது.மீண்டும் நான் பாபாவிடம் இதை பற்றி என் மனதில் தோன்றிய எண்ணை தட்டி கேட்டேன்.அவர் எதை பற்றியும் கவலைபடாமல், அமைதியாய் இரு.பாபாவை நினைத்துக் கொள். ராம்,கிருஷ்ணா மற்றும் பாபா இவர்களுக்கு இடையில் எந்த வேறுபாடும் இல்லை என புரிந்துக் கொள்.எல்லாம் நல்லப்படி நடக்கும் என வந்தது.அவரின் அருட்படி எல்லாம் நல்லவிதமாக நடக்கும் என நான் அறிவேன்.
எனது ஈகோவை விட அருளும்படி நான் பாபாவை வேண்டுகிறேன்.எனக்கு பாபா மற்றும் எனது பெற்றோரின் ஆசிகள் தவிர யாருடைய ஆசியும் தேவை இல்லை.பாபா ஒரு போதும் நம்மை கைவிடுவதில்லை.நமது ஆசைகளை அவர் நிறைவேற்றிக் கொண்டே இருக்கிறார்.பாபாவின் ஆசிகள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.:)
ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய் ஜெய் சாயி
ஐரீன் 
 ---------------------------------
 
 

சாவடி ஆசிர்வாதங்கள்

என் பெயர் ப்ரீதி.நான் என் சிறிய வயதில் இருந்தே சாயி பாபாவின் பக்தை.எனக்கு அவரை எப்படி வழிப்பட வேண்டும் என முழுமையாக தெரியாவிட்டாலும், அவரை மனபூர்வமாக விரும்புகிறேன்.
எனக்கு ஷீரடிக்கு செல்ல வேண்டும் என பல நாட்களாக ஆசை. பல நாட்கள் காத்திருந்து ஷீரடிக்கு மேற்கொண்ட என் பயணம் மிகவும் அருமையாக இருந்தது.
நான் ஷீரடி கோவிலுக்கும் சாவடிக்கும் சென்றேன். சாவடியில் பாபாவின் பாதங்களை பணிந்து வணங்கினேன். .அப்போது ஒரு குரு அவசரமாக உள்ளே வந்து, பாபாவின் காலடியில் இருந்த தேங்காயை என்னிடம் கொடுத்தார்.அங்கே பலர் நின்றிருந்தும் அவர் என்னிடம் கொடுத்தது மகிழ்சியாக இருந்தது.நான் அதை கையில் வைத்து நின்று இருந்தேன்.அதற்கு அவர், கையில் வைக்க வேண்டாம், உனது பையினுள் வைத்து விடு எனக் கூறியது மிகவும் நெகிழ்வாக இருந்தது .நான் மிகவும் மகிழ்ந்தேன்.பாபாவின் ஆசியை என்னால் நம்பவே முடியவில்லை.

ஓம் சாயி
ஜெ சாயி

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.