Wednesday, June 6, 2012

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 41

சாயிபாபாவின் அருள் 
--பக்தர்களின் அனுபவங்கள் --- 
பாகம் - 41.

 (Translated into Tamil by Santhipriya) 


அன்பானவர்களே
அனைவருக்கும் பாபா தின வாழ்த்துக்கள்
பாபாவின் மீதான அன்பும்  பக்தியும் நமக்கு ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மாதமுமாக பெருகிக் கொண்டே போகிறது.  இந்த வலைதளத்தில் வெளியாகும் பாபாவுடனான பக்தர்களின் அனுபவங்களைப் படிக்கும்போது அவரவர்களுடைய மனக் கலக்கம் குறைவது போல உள்ளது என்று எனக்கு வரும் மின் அஞ்சலில் பக்தர்கள் பலரும் கூறுவதைக் கண்டு ஆனந்தமாக உள்ளது. நாம் இன்று மேலும் சில பக்தர்களின் அனுபவங்களைப் படிப்போம்.
ஜெய் சாயி ராம்
மனிஷா
--------------------------

ஒரு திட்டப் பணியில் பாபா எனக்கு உதவி செய்தார்

அன்புள்ள சகோதரி மனிஷா
PG பட்டப் படிக்கும் ஒரு சாயி பக்தர்  எழுதி உள்ளதை படித்ததும் எனக்கும் அது போலவே ஏற்பட்ட ஒரு அனுபவத்தை கூற விரும்புகிறேன். எனக்கு தரப்பட்ட திட்டப் பணி முடிவடைந்ததும், நான் இன்னொரு திட்டப் பணி கிடைக்குமா என தேடிக் கொண்டு இருந்தேன். திட்டங்கள்  மற்றும் வேலை வாய்ப்பு உள்ள இடங்களுக்கு அனுப்பி வைக்க தொகுத்து வைத்திருந்த தகுதியானவர்களின் பெயர்களைக் கொண்ட பட்டியலில்  என் பெயரும் சேர்க்கப்பட்டு  இருந்தது .  எங்களுக்குக் கிடைக்கும்  வாடிக்கையாளர்களின் நிறுவனங்கள்  ஒரே மாதிரியான திட்டப் பணிகளை  கொண்டவை  அல்ல.  ஒவ்வொரு திட்டப் பணியும் சற்று  மாறுதலாக இருக்கும்.  ஆகவே திட்டப் பணியை துவக்கும் முன் வாடிக்கையாளர்களுடன் நாங்கள் இரண்டு அல்லது மூன்று சுற்றுக்கள் விவாதங்கள் செய்ய வேண்டி இருக்கும். கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரே மாதிரியான பணியையே  செய்து கொண்டு இருந்ததினால் நான் மனம் சோர்வடைந்து அடுத்த திட்டப் பணி  தேர்விற்கு என்னை தயார் நிலையில் வைத்துக் கொள்ளாமல் இருந்தேன். அது மட்டும் காரணம் அல்ல, அந்த பட்டியலில் ஏற்கனவே எனக்கு முன்னால்  20 பெயர்கள் இருந்தன.
நான் திட்டப் பணி தேர்வை எதிர்கொள்ள வேண்டும் எனில்,  என்னை முதலில்  தயார் நிலையில் வைத்துக்  கொள்ள  வேண்டும். அதற்கு குறைந்தது ஒரு வாரம் அல்லது பத்து நாள் தேவையாக இருக்கும்.  எனக்கு முன் வரிசையில் காத்துக் கொண்டு உள்ள  20 பேர்களும் தேர்வு செய்யப்பட்டப் பின்னரே நான் அழைக்கப்படுவேன்.
ஆனால் நான் விரும்பிய  திட்டப் பிரிவில் அதிக வாடிக்கையாளர்கள் கிடைப்பதில்லை என்பதினால், அதற்காக நான் வெகு நாட்கள் காத்திருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். அது மட்டும் அல்ல கடந்த நான்கு மாதங்களாக 20 க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே  காத்திருக்கும் பட்டியலில் உள்ளதாகவும் கூறினார்கள். ஆனால் வாய்ப்பு வள பட்டியலில் காத்து இருந்த எனக்கு இந்தப் பின்னணியிலும் எப்படி பத்தே நாளில் நேர்முக தேர்வுக்கு  அழைப்பு வந்தது என்பது புரியாத புதிராக இருந்தது.  ஒரு குறிப்பிட்ட தேர்வுக்குச் சென்ற 20 பேர்களில் சிலர் நிராகரிக்கப்பட்டு விட்டதினால், என்னை அந்த நேர்காணலுக்கு அனுப்பினார்கள். அந்த நேர்காணலுக்கு கிளம்பிச் செல்ல எனக்கு இரண்டே மணி நேர அவகாசமே கிடைத்தது.  நானோ அந்த நேர்காணலை எதிர்நோக்கும் நிலையில் இல்லை என்பதினால், வேறு வழி இன்றி  சாயியின் நாமத்தை ஊச்சரித்தபடியே சென்றேன். அதற்கு முன்னால் ஒரு ஒத்திகைப் போல இருக்கட்டும்  என்பதற்காக என்னுடைய நண்பனிடம் என்னிடம் மாதிரிக் கேள்விகளைக் கேட்குமாறுக் கூறி விட்டு, என்னை 20 அல்லது 30 நிமிடங்களில் தயார் செய்து கொண்டேன்.
அதற்குப் பின் என் மனதில் இடைவிடாது ஓடிக்கொண்டு இருந்தது 'ஓம் சாயி ராம்' என்ற வார்த்தைகள் மட்டுமே. மூன்று மணிக்கு நேர்காணல் துவங்கியது.  சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது. பாபாவின் அருளினால் அங்கும் இங்கும் சில தவறுகளை செய்தாலும் மொத்தத்தில் நன்கு பதில் அளித்திருந்தேன். சில நாட்களாக நான் எந்தப் பணியையுமே செய்யாமல் இருந்திருந்ததினால்  மறந்து விட்டிருந்த பணிக்  குறைபாடுகளை களைந்து கொள்வேன் என்ற நம்பிக்கையை அவர்களிடம் தெரிவித்தேன். ஆகவே இரண்டாவது சுற்று நேர்காணலும் துவங்கியது.
சாயியின் அருள்தான் என்னே. நான் அதில் வெற்றி பெற்றேன். என்னை சுற்றி இருந்தவர்கள் என்னை அதிஷ்டக்காரன் என்றார்கள். ஆனால் எனக்கு மட்டுமே தெரியும், அந்த வேலை கிடைத்ததின்  காரணம் சாயியின் அருளே என்பது. அதில் இருந்து நான் கற்றுக் கொண்டப் பாடம் என்ன என்றால் எப்போதுமே அவரை நினைத்திருந்தபடியும், அவர் நாமத்தை உச்சரித்தபடியும் இருந்தால் அவர் நமக்கு தேவையானதையே  செய்வார்.
நன்றி
ரேவதி
----------------------------------------


பள்ளி இறுதியாண்டில் முதன்மையாக வரவும், கலூரியில்
 இடம் கிடைக்கவும் சாயி உதவினார்

ஓம் ஜெய் சாயிராம்
நான் என்று முதல் அமுதம் போன்ற அவருடைய நாமத்தை உச்சரிக்கத் துவங்கினேனோ அன்று முதலேயே  என்  வாழ்க்கையில் பாபாவுடனான அற்புத அனுபவம் ஏற்படத் துவங்கிற்று. இதை எழுதும்போதே என் கண்களில் நீர் வழிகின்றது. அவரே எனக்கு கலங்கரை விளக்கு. என் அருகிலேயே அமர்ந்திருந்தவாறு நான் மகிழ்ச்சியுடன் இருக்க அனைத்தையும் செய்பவர்.  எனக்கு வர உள்ள இக்கட்டான சூழ்நிலைகளை  எனக்கு முன்கூட்டியே அறிவித்து விடுகிறார். காற்று போல வரும் அவருடன், எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் நான் பத்தாவது வகுப்பு படிக்கும்போதே ஏற்படத் துவங்கிற்று. நான் செட்டி நாடு வித்யாஷ்ராமத்தில் படித்தேன். நான் பரீட்சை எழுத இருந்த இடம் மயிலாப்பூரில் சாயி ஆலயத்தின் அருகில் இருந்த P.S உயர்நிலைப் பள்ளியாகும்.  ஆகவே நான் தினமும் பரிட்ஷை எழுதப் போகும்  முன்னால்  சாயி ஆலயத்திற்குச்  சென்று விட்டே பரிட்ஷை கூடத்துக்குச் செல்வதுண்டு.  இரண்டாவது நாள்  எனக்கு சமூகவியல் பரீட்சை.  முதல் நாளே எனக்கு நான் எழுத உள்ள அந்த பரிட்ஷை பேப்பரில் முதலில் எழுதிய எதையும் திருத்தாமலும், அடிக்காமலும் இருக்குமாறு பாபா தெரிவித்து இருந்தார். ஆலயத்தில் சென்று அவரை தரிசித்துக் கொண்டு இருந்த போது முன் பின் தெரியாத ஒருவர் வந்து எனக்கு பாபாவின் படத்தைக் ஒரு தாயத்தைப் போலக் கொடுத்து விட்டுச் சென்றார். பரிட்ஷை எழுதிவிட்டு வந்தேன்.
அதில் நிலப் படத்தைப் பற்றிய ஒரு கேள்வியில் சற்று தடுமாறினேன். முதலில் நான் கொடுத்து இருந்த பதில் சரியாக இருந்தும் அதை மாற்றினேன். பாபா கூறி இருந்தது மறந்து விட்டது. அதன் பலன் 99 மார்க்குகளே கிடைத்தன (CBSE யில் 99.5 வாங்க வேண்டிய இடத்தில் 99 என்றே குறிப்பிடுவார்கள்). பாபா எனக்கு குரு மட்டும் அல்ல, எனக்கு நல்ல நண்பனும் கூட.
இன்னொரு சம்பவம். 2010 ஆம் ஆண்டு. 12 ஆவது வகுப்பு பரீட்சையில் கணக்கில் நூற்றுக்கு நூறு மார்க் வாங்க வேண்டும் என நினைத்தேன். CBSE யில் பரிட்ஷைக்கான கேள்விகளை வேறு மாதிரியாக மாற்றி கேட்டு இருந்தார்கள். ஆனால் அதிகாலையில் என் கனவில் வந்த பாபா அதைப் பற்றி முன்கூட்டியே கூறியதும் அல்லாமல்,  கேட்க இருந்த அந்தக் கேள்வியை எனக்குக்  கனவில்  காட்டினார்.
பரிட்ஷை முடிவு வந்தது. 96% மார்க்குகள் எடுத்து இருந்த நான்தான் பள்ளியில் முதன்மை மாணவராக இருந்தேன். இத்தனைக்கும் போர்டு பரிட்ஷைக்கு தயார் செய்து கொள்ள போதனை வகுப்புக்களுக்கும் செல்லவில்லை. அதன் பின் வடநாட்டு பல கல்லூரிகளில் இடம் கிடைத்தும், அங்கு செல்ல விரும்பாமல் இருந்த என்னை பெற்றோர்கள்  SSN,SVCE அல்லது அம்ரிதாவில் சேர முயற்சி செய்தாலும் எனக்கு அமிர்தாவில் சேர  விருப்பம் இல்லை. ஆகவே நான் SSN க்கு  விண்ணப்பித்தேன். அதன் நுழைவுத் தேர்வில் நன்கு எழுதவில்லை எனவே நினைத்து இருந்தேன். ஆனால் தேர்வு முடிவு தாமதமாக வந்தாலும் அதிலேயே எனக்கு இடம் கிடைத்து விட்டது.
அதன் பின் நான் பெரும் ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும், நான் செய்யும் ஒவ்வொரு காரியத்தின் பின்னாலும் பாபாவே இருந்து எனக்கு வழிகாட்டுகிறார். நன்றி பாபா, உனக்கு நன்றி. நீதான் எனக்கு வழிகாட்டியாக இருந்து எனக்கு துணை நிற்க வேண்டும்.
சாயிராம்
அருணா
--------------------------------------------


பாபாவின் தடை இல்லா அன்பைக் காட்டிய சிறப்புப் பரிசு

சகோதரி மனிஷா
பாபாவின் அருளினால் உங்கள் வீட்டில் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். பாபா உங்களுடன் எங்களுக்கு தொடர்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு நாங்கள் அவருக்கு நன்றி கூறுகிறோம். இன்று எனக்கு ஏற்பட்ட அற்புதமான அனுபவத்தை அனைவருடனும் பங்கிட்டுக் கொள்ள நினைக்கின்றேன். .
இரவும் பகலும் பாபா தன்னுடைய பக்தர்களுடன் இருப்பதாக  அனைத்து இடங்களிலில் இருந்தும் அறிந்து கொள்கின்றோம். ஆனால் நான் அதை நம்பாமல் இருந்ததின்  காரணம் நான் அவருடைய பக்தனா என்ற சந்தேகம் எனக்கு எப்போதுமே இருந்ததுதான். நான் அவருடைய அறிவுரையை நிபந்தனை இன்றி கடைபிடிப்பது இல்லை என்பதினால் என்னுடைய கர்மாக்களினால் என்ன விதத்தில் துன்பங்களை அனுபவிக்க வேண்டி இருக்குமோ என நான் கவலைப்படுவது உண்டு. போன வாரத்தில் எனக்கேற்பட்ட பலவிதமான பிரச்சனைகளினால் மிகவும் கவலையுடன் இருந்து வந்தேன்.
ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி எனக்கொரு முக்கியமான நாளாக அமைந்ததின் காரணம் அன்று என்னுடைய மகனின் பிறந்த நாள் என்பது மட்டும் அல்ல எனக்கு தான் யார் என்பதையும் பாபா காட்டிய நாளாகும். சுமார் 2.59 p.m மணி இருக்கும், என்னை அருகில் அழைத்த அவருடையக் கைகளில் நான் புதையுண்டு இருப்பது போல உணர்ந்தேன். அதன் பின் என்னுடைய வாழ்க்கையில் பல அனுபவங்கள் ஏற்பட்டன. அவை அனைத்தையும் நல்ல முறையில் என்னால் கையாள முடிந்தது என்றால் அதற்குக் காரணம் அவருடைய அருளே.
இன்றோடு ஐந்து வருடங்கள் கடந்து விட்டன. நான் அவரை சுற்றி வந்த சிட்டுக் குருவி போல இருந்தாலும் அவர் என்னுடன் இருப்பதைக் என்று எனக்கு உணர்த்துவார் என்பதை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஜப்பானில் உள்ள என்னிடம் அவர் எப்படி வர முடியும்?  நான் நினைப்பதின்படி நடக்கக் கூடிய காரியமா என்பது கூடத் தெரியாமல், என் வீட்டிற்கு அவர் வந்து எனக்கு உடியை தர வேண்டும் என எதிர்பார்த்தேன். அன்று விடுமுறை நாள் அல்ல என்பதினால் வெகு தொலைவில் உள்ள அவருடைய ஆலயத்திற்குக்  கூட என்னால் செல்ல முடியாது.
ஆனால் பாபா வேறு வகையில் திட்டம் போட்டு இருந்திருக்க வேண்டும். திடீர் என்று நேற்று மாலை என்னுடைய ஒரு நண்பர் வந்து மறுநாள் சத்ய சாயிபாபாவின் மகா சமாதி நாள் என்பதினால் அன்றைக்கு நாம் ஏன் ஒரு பஜனைக்கு  செய்ய ஏற்பாடு செய்யக் கூடாது என்றார். மெய் சிலிர்த்துப் போன நானோ, அதை என் வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாம் என்று கூறினேன். விரைவாக அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு கேசரி பிரசாதத்தையும் தயார் செய்து வைத்திருந்தேன். அதில் கலந்து கொள்ள என்னுடைய சில நண்பர்கள் வந்தார்கள். அவர்களில் ஒருவர் பாபாவின் அற்புதமான படத்தையும், பாதுகையையும் கொண்டு வந்திருந்தார். அது மட்டும் அல்ல, அவர் வரும்போது பாபாவின் உடியையும் கொண்டு வந்தார். அதை விட நான் பாபாவிடம் கேட்பதற்கு வேறு  என்ன உள்ளது?
இந்த நிகழ்ச்சியைக் குறித்து அதிகம் கூற ஒன்றுமே இல்லை. ஆனால் என் வாழ்க்கையைப் பொறுத்தவரை எனக்கு அது அற்புதமான நாள். எனக்கு ஒன்று புரிந்தது. சில சமயங்களில் அவர் நமது கனவுகளில் வருவது இல்லை. நம்மை  விலக்கியே வைத்துள்ளது போலவும், நம்முடன் விலகி நிற்பது  போலவும் நமக்குத் தோன்றலாம். ஆனால் அவை அனைத்துமே நமது மனப் பிரமைகளே. அவர் நம்மை விட்டு விலகுவதில்லை. அவர் நம்மை உதாசீனப் படுத்துவதே இல்லை.
நான் பாபாவை நேசிக்கின்றேன்.
சமஸ்தலோக சுகினோ பவ வன்து
சாயி ராம் ராதா


பாபா என்றும் நம்முடனே இருந்து கொண்டு அருள் புரிகிறார்

சாயிராம் மனிஷாஜி
என் பெயரையும் முகவரியையும் வெளியிட வேண்டாம்.
நான் பாபாவின் காலடியில் எப்போது சரண் அடைந்தேன் என்பது தெரியாது. ஆனால் சுமார் 8 அல்லது 10 வருடங்களுக்கு முன்பு நான் மும்பையில் இருந்த என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரரின் வீட்டிற்குச் சென்றபோது அவர் அவர்களுடன் எங்களையும் சீரடிக்கு அழைப்பார் என்று நினைக்கவே இல்லை. ஒன்று நிச்சயம். பாபா யாரை சீரடிக்கு அழைக்கின்றார்களோ அவர்கள் அங்கு சென்று பேரானந்தமான அவருடைய தரிசனத்தை பெறுகிறார்கள். அது முதல் என் வாழ்வின் அனைத்திலும் -அலுவலகமோ, வீடோ- எதுவாக இருந்தாலும் அவருடைய அருளைப் பெற்று வரும் நான்  பாபாவின் சாதாரண பக்தர்தான். நான் தினமும் பாபாவின் இணையதளங்களில் வெளியாகும் பக்தர்களின் அனுபவங்களைப் படித்து ஆனந்தம் அடைவது மட்டும் இன்றி பாபாவைப் பற்றி அறிந்து கொள்வதற்காக மேலும் புது இணையதளங்களையும் தேடுவது உண்டு. அப்போதுதான் ஒருமுறை இந்த வலை தளத்தைப் பார்க்க நேரிட்டது.
நானும் மற்றவர்களைப் போல என்னுடைய வாழ்க்கையில் சில பிரச்சனைகளுடன்தான் வாழ்ந்து வருகிறேன் என்றாலும், என்னுடையக் கர்ம வினைகள் தீர்ந்தப் பின்  அவருடைய பூரண அருளைப் பெறுவேன் என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஒரு மாதத்துக்கு முன்னர்தான் நான் சாயி விரதப் பூஜையை செய்து முடித்து இருந்தேன். ஒவ்வொருவதும் கடவுளிடம் இருந்து எதையாவது ஒன்றை எதிர்பார்ப்பார்கள். அது மனித சுபாவம். கடந்த 2 அல்லது மூன்று வருடங்களாக பிரச்சனைகள் விடுபடாமல் இருந்த எங்களுடைய வீட்டு சம்மந்தமாக என்னுடைய பெற்றோர்களுக்கும் பிரச்சனை இருந்தது. என்னுடைய தந்தையின் வயதும் எண்பதிற்கும் மேல் ஆகி விட்டதினால் சின்ன விஷயங்களினால் கூட கஷ்டப்பட்டு வந்த அவருக்கு இனியும் சிரமம் இல்லாமல் அவருடைய பிரச்சனைகள் முடிவுக்கு வர வேண்டும் என பாபாவிடம் வேண்டிக் கொண்டேன். அந்த சூழ்நிலையில்  19.4.2012  அன்று நான் பல இணையதளங்களில் வெளியாகி இருந்த பக்தர்களுக்கு பாபாவுடன் ஏற்பட்டிருந்த அற்புதமான அனுபவங்களை படித்துக் கொண்டு இருந்தபோது, பாபாவைக் கேளுங்கள் என்ற தளத்துக்குச் சென்று பாபாவின் அறிவுரையைக் கேட்க எண்ணினேன். அப்போது திடீர் என என் தந்தையிடம் இருந்து வீட்டு பிரச்சனை தீர்ந்து விட்டது என்ற செய்தி கிடைத்தது. பாபாவிடம் அந்தப் பிரச்சனையைக் குறித்து கேட்க நினைத்தபோதே அதற்கு அவர் பதிலும் அளித்து விட்டாரே என மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
இப்படியாக பல வகைகளிலும் அவர் என்னுடைய வாழ்கையில் இருந்து கொண்டு என் கஷ்டங்களை நிவர்த்தித்து இருக்கின்றார். பாபா நீங்கள் மகத்தானவர். ஒவ்வொரு பக்தரின் வேண்டுகோட்களையும் பாபா நிறைவேற்றித் தர வேண்டும் என்பதே பாபாவிடம் என்னுடைய வேண்டுகோள்.
விரைவில் என்னுடைய தனிப்பட்ட வாழ்கையின் கர்மாக்களையும் விலக்கி விட்டு என் வாழ்வில் வசந்தம் தருவார் என்று நம்புகிறேன்.
ஓம் சாயிராம்

----------------------------------------


பாபாவின் உறுதிமொழி

சகோதரி மனிஷா மற்றும் பிற சாயி பக்தர்களே
சாயி சரித்திரத்தில் உள்ள பொன்மொழியான ''நான் கூறுபவை அர்த்தமற்றவை அல்ல '' என்பது மிகவும் சரியான வார்த்தை என்று நம்புகிறேன். பாபா நடக்க உள்ளவற்றை முன்கூட்டியே நமக்கு  பூடகமாக தெரிவிக்கின்றார். கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதியன்று இரவு 10.45 மணிக்கு என்னுடைய வீட்டில் பூஜை அறையில் அமர்ந்து கொண்டு 'பாபா எனக்கு எப்போது தரிசனம் தருவாய்' என அவரிடம்  வேண்டிக் கொண்டு இருந்தேன். கண்களை மூடிக் கொண்டு அமர்ந்து  இருந்த நான் அதில் ஏப்ரல் 13 என்ற வார்த்தைகள் தோன்றுவதைக் கவனித்தேன். சட்டென்று கண்களைத் திறந்த நான் அன்று ஏப்ரல் 13 ஆம் தேதி என்பதை உணர்ந்தேன். இரவு பதினோரு மணி ஆகி விட்டது எனும்போது இன்று எப்படி பாபாவின் தரிசனம் கிடைக்கும்?
அதை நினைத்துக் கொண்டே நான் உறங்கச் சென்றேன். திடீரென தொலைபேசி மணி அடித்தது. நான் எடுக்கும் முன்னரே அது நின்று விட்டது. அதில் பதிவாகி இருந்த எண் ரூர்கீ நகரத்தில் இருந்த என்னுடைய சாயி பக்தரான ஒரு நண்பருடையது. அவர் ரூர்கீயில் சாயி ஆலயத்தைக் கட்டி அதை நிர்வாகித்து வருபவர். அடுத்த  சில நிமிடங்களில் இருந்து அவரிடம் இருந்து ஒரு குறும்  செய்தி வந்தது (SMS). அதில் 'நாம் பாபாவை சந்திரனில் காண்போம்' என்ற வாசகம் இருக்க நான் உடனே மாடிக்கு ஓடிச் சென்று சந்திரனைப் பார்த்தேன். அதில் எனக்கு பாபா தெரிந்தார். என் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. பாபா எனக்கு இன்று தரிசனம் தருவதாகக் கூறினார். நான் அதை நம்பவில்லை. ஆனால் அதை நடத்திக் காட்டி விட்ட பாபா உண்மையிலேயே மாபெரும் தெய்வமே. தான் கூறியதை செய்து கட்டிய பாபாவிற்கு நன்றி தெரிவித்தேன்.
ஜைசாயிராம்
அஞ்சு கோல்

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.