Friday, August 3, 2012

Sai Blessed My Daughter -Experience By Sai Devotee.

சாயி பாபா என்னுடைய  


(Translated into Tamil by Santhirpriya)

அனைவருக்கும் சாயிராம் வணக்கங்கள்
நம்முடைய பக்தியை அதிகரிக்க வைக்கும் மற்றொரு அனுபவமிது.
மனிஷா

அன்பு சகோதரி,
என்னுடைய முகவரியை வெளியிட வேண்டாம்.
எனக்கு ஏழு வயதில் ஒரு மகள் இருக்கிறாள் . அவள் மூளைக் கோளாறினால் பாதிப்பட்டு உள்ளாள். அவள் எட்டு மாதக் குழந்தையாக இருந்தபோதே அதற்கு நாங்கள் மருத்துவ சிகிச்சையை  துவக்கி இருந்தோம். ஆனால் அது எந்தப் பலனையும் கொடுக்கவில்லை. அவள் இரண்டரை வயதானபோது ஒரு வார்த்தை பேசத் துவங்கினாள். மூன்று வயதானபோதுதான் சற்றே நிற்கத் துவங்கினாள். கடந்த நான்கு வருடங்களாக நான் அவளை பள்ளிக்கு அனுப்புகிறேன். அவளுடைய அறிவுத் திறன் சாதாரண நிலையிலேயே உள்ளது.
அவளுடைய ஒரே ஒரு குறை அவளால் எழுத முடியாது என்பதே. அவள் படித்த அனைத்தையும் நினைவில் வைத்துக் கொள்ள முடிந்தாலும் எழுதும்போது அவளால் எதையுமே நினைவில் கொண்டு வர முடியவில்லை என்பதினால் மதிப் பெண்கள் கிடைக்காமல் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக அவள் KG-I வகுப்பைத் தாண்ட முடியாமல் இருக்கிறாள். அதனால் நான் மிகவும் விரக்தி அடைந்தேன்.
அவளுடைய இடதுபுறம் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. ஆகவே அவளுடைய அறிவுத் திறனை அதிகரிக்க அவளுக்கு நாங்கள் உடற்பயிற்சி மருத்துவ சிகிச்சை கொடுக்க வேண்டி இருந்தது . அவளைத் தவிர எனக்கு மூன்று வயதில் இன்னொரு குழந்தையும் உள்ளது. ஆகவே இரண்டையும் சமாளிக்க முடியாமல் சோர்ந்து போய் என் முதல் குழந்தைக்கு உடற்பயிற்சி மருத்துவ சிகிச்சை கொடுக்க அடிக்கடி மறந்து போவதும் உண்டு.
திடீர் என மே மாதம் சாயிபாபாவிடம் நான் ஏன் என் குழந்தைக்காக வேண்டிக் கொள்ளக் கூடாது என எண்ணினேன். சாயி சரித்திர புத்தகமும், பாபாவின் படமும் எங்கள் வீட்டு அருகில் இருந்த சாயி ஆலயத்தில் கிடைத்தது. ஆகவே நான் சாயி சரித்திர பாராயாணம் படிக்க ஆரம்பித்தேன். அது போலவே எனக்கு சாயியின் உதியின் மகிமையும் தெரிய வந்தது. என் மகளுக்கும் உடியின் மூலமாவது ஏதாவது மகிமையை நடக்கட்டுமே என்று ஆசைப்பட்டேன். பதினைந்து நாட்களுக்குப் பிறகு நான் வைஷ்ணவதேவி ஆலயத்துக்கு சென்று கொண்டு இருந்தபோது என்னுடைய ஒரு உறவினர் தன்னுடைய நண்பர் ஒருவர் சீரடிக்கு போய்விட்டு வந்ததாகக் கூறி எனக்கு பாபாவின் உடியைக் கொடுத்தார்.
இன்னொரு வேடிக்கை என்ன என்றால் நான் பயணம் செய்து கொண்டு இருந்த ரயில் பெட்டியில் இருந்த அனைவருமே பாபாவின் பக்தர்கள். அவர்கள் மூன்று வேளையும் பாபாவின் பஜனைப் பாடல்களை ரயில் பெட்டியிலேயே பாடினார்கள். பாபாவின் பிரசாதங்களையும் எனக்குக் கொடுத்தார்கள். அது முதல் எனக்கு அடிக்கடி எந்த விதத்திலாவது பாபாவின் உடி கிடைத்துக் கொண்டே இருந்தது. நான் ஒன்பது வார குருவார் விரதத்தை துவக்கி  ஆறு வாரம் விரதத்தை செய்து முடித்து இருந்தேன். தினமும் என் மகளுக்கு உடியை தண்ணீரில் கலந்து கொடுத்துக் கொண்டே இருந்தேன். அந்த விரதத்தை செய்து கொண்டு இருந்தபோது என் வீட்டினர் 'நீ பாராயணம் செய்து கொண்டு இருந்தாலும் இரண்டு வேளையும் சாப்பிடாவிடில் விரதம் இருக்க விட மாட்டோம்' என்று கூறி விட்டதினால் வேறு வழி இன்றி அதுவும் பாபாவின் விருப்பமே என்று இரண்டு வேளையும் உணவு அருந்திக் கொண்டே குருவார சாயி விரதத்தை செய்தேன். நான் ஒன்பது வாரங்கள் விரதத்தை செய்து முடிக்கும் முன்னரே திடீர் என என்னுடைய மகள் எழுத ஆரம்பித்தாள். பாடங்கள் படிப்பதிலும் ஆர்வத்தைக் காட்டத் துவங்கினாள். பாபா என் குழந்தை பூரண குணமடைய நீதான் அருள் புரிய வேண்டும். அவள் தனது வாழ்க்கையில் யாருடைய ஆதரவையும் எதிர்பார்தது வாழ்கிற நிலையில் இருக்கக் கூடாது .
2. அதுபோலவே என்னுடைய கணவருக்கும் மூலநோய் வந்து அவதிப்பட்டார். எந்த மருத்துவ சிகிச்சையும் அவருக்கு குணம் தரவில்லை. ஆகவே அவருக்கும் ஏழு நாட்கள் உடியை தண்ணீரில் கலந்து கொடுத்து வந்தேன். அவருக்கும் அந்த நோய் குணமாகிவிட அவருக்கும் பாபாவின் மீது நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.
சாயிராம்

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.