Wednesday, May 22, 2013

Shirdi Sai Baba Blessed Us With Babies-Anonymous Devotee

சீரடி சாயி பாபா எங்களுக்கு 
 
பெயர் கூற விரும்பாத பக்தரின் அனுபவம்

( Translation  into Tamil by  Santhipriya 
Narrations  in article slightly condensed


அனைவருக்கும் சாயிராம்,
பாபா தின வாழ்த்துக்கள் .
பாபாவின் சாயி சரித்திரத்தில் கூறப்பட்டு உள்ளது இது - ''எவர் ஒருவர் ஆன்மீக மற்றும் உலக இன்பங்கள் கிடைக்க வேண்டும் என விரும்புவாரோ அவர்கள் தொடர்ந்து சாயிபாபாவின் லீலைகளையும் கதைகளையும் படித்து வந்தால் அவர்கள் வேண்டியது அனைத்துமே கிடைக்கும்''- Chapter 24
அதை வெளிப்படுத்துவது போல உள்ளது கீழே தரப்பட்டு உள்ள பக்தரின் அனுபவம். அதைப் படித்தப் பின் நேயர்கள் அவரவர் கருத்துக்களை கீழேயே பதிவும் செய்யலாம். என் முகவரிக்கு கடிதமும் எழுதலாம்.
மனிஷா.

------------------------------

அன்புள்ள சகோதரி மனிஷா,

இன்று நான் பெற்ற பாபாவின் அதிசயமான அனுபவத்தை எழுத உள்ளேன். அவருக்கு எப்படி நன்றி கூறுவது என்றே எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள்..............எனும் இடத்தில் உள்ளோம்.

எங்களுக்கு 2002 ஆம் ஆண்டு திருமணம் ஆகியது. ஆனால்  குழந்தைப் பிறக்கவில்லை. மருத்துவர்களைக் கேட்டபோது எங்களுக்கு இருந்த சில உடல் பிரச்சனையினால் அது நடக்காது எனக் கூறி விட்டதினால் மனம் உடைந்து போனோம். ஆகவே நாங்கள் ............எனும் இடத்துக்கு சென்றோம். அங்கும் மருத்துவர்களை அணுகியபோது அவர்களும் அது நடக்க இயலாத காரியம் என்றே கூறினார்கள்.

2011 ஆம் ஆண்டு ஒருநாள் விடியற்காலை மூன்று மணிக்கு பாபா என் கனவில் தோன்றினார். நான் கண் விழித்து எழுந்தேன். மறுநாள் முதல் பாபாவின் சேவையை செய்ய முடிவு செய்தோம். என் மனைவியும் அதற்கு உடன்பட்டாள். அனால் அது என்ன சேவை என்பதை நான் கூற விரும்பவில்லை.

என்னுடைய நண்பர்கள் அந்த சேவையை  செய்வதை விட வேறு எதாவது சேவையை  செய்யலாமே எனக் கூறி என்னை தடுத்து நிறுத்த முயன்றாலும் அது நாங்கள் இந்தியாவுக்கு சென்றபோது பாபா எங்களுக்கு இட்டக் கட்டளை என்று கூறி அவர்கள் கூறிய அறிவுரையை ஏற்க நான் மறுத்துவிட்டேன். அதன் பிறகு நாங்கள்...........என்ற இடத்துக்கு வந்துவிட்டோம்.

ஒரு மாதம் கழித்து மீண்டும் ஒரு மருத்துவரை நாங்கள் சந்தித்தபோது அவர் எங்களை சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். ஆனால் அதற்கு $25000 டாலர் செலவு ஆகும் என்றார். எங்களிடம் அத்தனைப் பணம் இல்லை என்றாலும் நண்பர்களிடம் கடன் உதவி பெற்றுக் கொண்டு எங்களிடம் இருந்த தொகையையும் வைத்துக் கொண்டு அதை செய்ய முடிவு செய்தோம். அப்போதும் நண்பர்கள் என்னை தடுத்து அதைரியப்படுதினார்கள். நான் அதைக் கேட்கவில்லை. சாயிபாபாவின் முன்னால் சீட்டுக் குலுக்கிப் போட்டு அவர் அனுமதி கிடைத்ததினால் அதை செய்து கொள்ள முடிவு அந்த சோதனையை செய்து கொண்டோம். அதை செய்து கொள்ளும் முன்னால் பாபாவின் ஆலயத்துக்கு சென்று அவரை வேண்டிக் கொண்டப் பின்னரே மருத்துவ மனைக்கு சென்றோம்.

இரண்டு மாதம் கழிந்தது. மிக வலி மற்றும் வேதனை தரும் அந்த மருத்துவ சிகிச்சையை என் மனைவி மேற்கொள்ள அவளது கருவில் செயற்கை கருவை வைத்தார்கள். இரண்டு வாரம் கழிந்தது.  மீண்டும் மருத்துவ மனைக்கு சென்று சோதனையை மேற்கொண்டபோது  அவள் கருப்பை அதை ஏற்றுக் கொண்டுள்ளது தெரிந்தது. மீண்டும் இரு மாதத்துக்குப் பிறகு செய்து கொண்ட சோதனையில் அவள் கருவில் வளர்வது இரேட்டைப் குழந்தை என்பது தெரிந்தது.  அதைக் கேட்ட நாங்கள் அதிசயப்பட்டோம்.

அடுத்த மூன்று மாதங்கள் என் மனைவியை மிகவும் ஜாக்கிரதையாக இருக்குமாறு மருத்துவர்கள் கூறினார்கள். இடையில் ஒருநாள் அவளுக்கு சிறிது ரத்தபோக்கு ஏற்பட மருத்துவரை அணுகியபோது அவர் அது குறித்து கவலைக் கொள்ள வேண்டாம் எனவும், சில நேரங்களில் அப்படி நடைபெறுவது  உண்டு  என்று   கூறிவிட்டார்.  எங்களை ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும்மருத்துவ  சோதனையை  மேற்கொள்ளுமாறு அறிவுரை கூறினார்.

அடுத்து எங்களை அதிர வைக்கும் இன்னொரு  செய்தியை பாபா எங்களுக்குக் காட்டினார். நாங்கள் ஐந்து மாதத்துக்குப் பிறகு மீண்டும் சோதனைக்குச் சென்றபோது என் மனைவியின் வயிற்றில் வளர்ந்த கரூ இரெட்டை குழந்தை என்றும் அதில் ஒன்று ஆண்,  இரண்டாவது பெண் எனத் தெரியவர நாங்களும் எங்கள் நண்பர்களும் இன்ப அதிர்ச்சி அடைத்து பாபாவின் கருணையை எண்ணிப் பார்த்தோம். அப்படி ஆண் மற்றும் பெண் என இரு குழந்தைகள் வளர்வது மிகவும் அதிசயம் என்றார்கள்.

ஒன்பது மாதத்துக்குப் பிறகு என் மனைவிக்கு இரண்டு குழந்தைகளும் பிறந்தன. நாங்கள் இப்போது மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். பாபாவிற்கு நாங்கள் என்றென்றும் கடமைப்பட்டவர்கள். அவர் கருணையை எண்ணி மகிழ்கிறோம்.  இப்போது எங்களிடம்  நான்கு உயிர் அணுக்கள் எங்களிடம் உள்ளன.  அதை யாருக்குத் தேவையோ அதை தர காத்திருக்கிறோம்.

பாபா கூறுவார் ''என்னை நம்பு. நான் துவாரகாமாயியில் இருந்து கூறுவது பொய்யாவதில்லை".  அதுதான் உண்மையும்.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.