Wednesday, May 15, 2013

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees -Part 53.




( Translated into Tamil by Santhipriya )

அனைவருக்கும் சாயி ராம்
இன்று பாபாவுடன் அவர் பக்தர்கள் சிலர்  பெற்ற அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்
மனிஷா

---------------------------

சகோதரி மனிஷா
நான் என் பெயரை வெளியிட விரும்பவில்லை. நான் பார்க்கும் அனைத்துக் கடவுளுமே தானேதான் என்பதை பாபா பலமுறை எனக்கு வெளிக்காட்டி  உள்ளார். அதை நான் முழுமையாக நம்புகிறேன். பாபாவே சிவபெருமானும் ஆவார்.
நான் என்னுடைய சொந்த ஊரில் இருக்கும்போது ஒவ்வொரு பிரதோஷ தினத்தன்றும் நான் சிவபெருமானின் ஆலயத்துக்கு செல்வது உண்டு. நான் சென்னையில் வேலையில் சேர்ந்த பிறகு அடிக்கடி மயிலையில் உள்ள சாயிபாபாவின் ஆலயத்துக்கு செல்வது உண்டு.
நான் உள்ள இடம் அங்கிருந்து வெகு தொலைவில் இருந்ததினால் காலை அல்லது மாலையில்தான் அங்கு செல்வேன். அது போல சிவன் ஆலயங்கள் உள்ள இடம் எனக்குத் தெரியாது என்பதினால்  பிரதோஷத்துக்கு நான் சிவன் ஆலயத்துக்கு செல்வதை நிறுத்தி இருந்தேன்.
ஒருநாள் ஞாயிற்றுக் கிழமை அன்று பொழுது போகாமல் இருந்தேன். ஆகவே பாபாவின் ஆலயத்துக்கு செல்ல நினைத்தும் நேரமாகி விட்டதினால் அங்கு செல்ல மனமும் இல்லாமல் இரு மனதுடன் இருந்தேன்.
ஆனாலும் யாரோ ஒருவர் கண்டிப்பாக நான் பாபாவின் ஆலயத்துக்கு அன்று செல்ல வேண்டும் என்று கூறியதினால் பாபாவின் ஆலயத்துக்கு சென்று விட்டு திரும்பினேன். ஆலயத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது.  ஆனாலும் பாபாவின் தரிசனத்தை முடித்துக் கொண்டு வந்தேன். நானும் வீடு திரும்பியவுடன் எப்போதும் கேட்பது போல என்னுடைய தாயார் அன்று பிரதோஷம் என்பதினால் ஏதாவது  சிவன் கோவிலுக்குப் போனாயா என்று கேட்டார்கள். அதைக் கேட்ட நான் அதிர்ந்து போய் இன்று உண்மையாகவே பிரதோஷ தினமா என்று கேட்டேன்.  நாள்காட்டியை பார்த்து அன்று பிரதோஷ தினம் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டேன். ஆகவே பாபா என்னை அறியாமலேயே பிரதோஷ தினத்தன்று என்னை ஆலயத்துக்கு வரவழைத்துக் கொண்டு தான் யார் என்பதைக் காட்டி விட்டார்.

---------------------

பாபாவும் நரசிம்மரும் ஒருவரேதான் 

பாபாவும்  நரசிம்மரும் ஒருவர்தான் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. நாங்கள் நரசிம்ம அவதார தினத்தன்று பாபாவின் ஆலயத்துக்கு சென்று விட்டு வந்தோம். நான் இணையதளங்களில் பாபாவின் மகிமைகளைப் பற்றி நிறையவே படித்துள்ளேன். ஆலயத்துக்கு சென்றுவிட்டு வந்தப் பின் நான் இணையதளத்தில் பாபாவின் மகிமையைக் குறித்துப் படித்துக் கொண்டு இருந்தபோது மகாலஸ்பதியின்  ஒரு அனுபவத்தைக் குறித்து படிக்க நேரிட்டது.
அதைப் படித்த எனக்கு அதில் இருந்த ஒரே ஒரு சிறு வரி எனக்குள் ஒரு பொறி தட்டியது போல இருந்தது. பாபா மகாலஸ்பதியுடன் அமர்ந்து கொண்டு சிலுமை புகைத்துக் கொண்டு இருந்தார். அப்போது அவர்கள் பக்கத்தில் வைத்து இருந்த கல் ஒன்று மாயமாய் மறைந்தது.   திடீர் என பாபா நரசிம்ம அவதாரத்தில் தோன்றியபடி எதோ கத்தியபடி இருந்தார். அதைப் படித்தப் பிறகு எனக்குள் நடந்த சில உணர்வுகளைக் குறித்து நான் எழுத விரும்பவில்லை. ஆனால் பாபாவோ தானே அனைத்தும் என்பதை எனக்கு எடுத்துக் காட்டிக் கொண்டு இருந்ததை உணர்ந்தேன். அதன் பிறகு நான் ஒரு  உறுதியான தீர்மானத்துக்கு வந்தேன்.  பாபாவே அனைத்து கடவுளும்.  நாம் பார்க்கும் அனைத்துக் கடவுட்களும் பாபாவேதான்.
அனந்தகோடி பிரும்மாண்ட நாயக யோகிராம் சாயிநாத் மஹராஜுக்கு ஜெய்
ஓம் ஸ்ரீ சாயிராம்

----------------------------

என்னுடைய பிறந்த நாளில் பாபா என் வீட்டிற்கு வந்தார்

பாபா என்னை மிகப் பெரிய அளவு நேசிக்கிறார்.  என் பெயர் சிநேகா. எனக்கு வயது பதினொன்று ஆகும். என்னுடைய பிறந்த நாள் பிப்ருவரி 14 தேதியன்று வருகிறது. நான் சீரடிக்கு செல்ல நினைத்தான். முடியவில்லை. அதற்குப் பதில் ஹாங்காங்கில் உள்ள பிராண்டோ என்ற ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்றேன்.
நாங்கள் 7.30 மணிக்கு ஹோட்டலுக்கு செல்லக் கிளம்பினோம். நேரமோ 6.45 ஆகி விட்டது. ஹோட்டலில் டிவி பார்த்துக் கொண்டு இருந்தேன். அதில் ஆரஞ்சு நிற தலைப்பாகை கட்டிய ஒருவர் காட்சி தந்தார். அவர் இந்தி பாஷையில் எதோ கூறிக்கொண்டு இருந்தார். ஆனால் அது என்ன என்பது எனக்குப் புரியவில்லை.
நான் எழுந்து பாத்ரூமுக்குப் போய்விட்டு வந்தேன். வந்தால் டிவியில் சாயிபாபாவையும் சீரடி ஆலயத்தையும் காட்டிக் கொண்டு இருந்ததைக் கண்டேன். ஹாங்காங்கில் சீரடி பாபாவின் ஆலயம் எதுவும் கிடையாது.
இரண்டாவது அதிர்ச்சி என்ன என்றால் பிராண்டோ ஹோட்டலில் நான் எப்போது சாப்பிடப் போனாலும் ஹிந்தி பாட்டு மட்டுமே போடுவார்கள். ஆனால் இன்றோ அவர்கள் சீரடி ஆலயத்தைப் பற்றிய செய்தியைப் போட்டு உள்ளார்கள். ஆகவே நீங்கள் வெளிநாட்டில் இருந்தாலும் உங்களுக்கு தேவையான நல்ல  தினத்தில் பாபா உங்களுக்கு காட்சி தருவார் என்பதே நான் கூறுவது.
ஸ்நேகா

---------------------------

எனக்கு பாபா மூலம் வேலைக் கிடைத்தது

என் பெயர் குமார் என்பது. நான் தமிழ்நாட்டை சேர்ந்தவர். திருச்சியில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தேன். எனக்கு கிடைத்த சிறு சம்பளத்தில் 2008 ஆம் ஆண்டு திருமணம் ஆன நான்  என் குடும்பத்துடன் எதோ சமாளித்தபடி வாழ்ந்து வந்தேன். 2011 ஆம் ஆண்டு நிறுவனத்தில் ஏற்பட்ட நஷ்டத்தினால் தொழிலாளிகள் குறைக்கப்பட்டார்கள்.  சம்பளமும் குறைந்தது. ஆனாலும் நான் கஷ்டப்பட்டு என்  குடும்பத்தைக் காப்பாற்றி வந்தேன். ஒன்பது வார சாயி விரதத்தையும் துவக்கினேன். திடீர் என எனக்கு துபாய் நாட்டில் இருந்து நான் முன்னர் எப்போதோ போட்டிருந்த ஒரு விண்ணப்பத்திற்கு இண்டர்வியூ வந்தது. அதில் தேர்வு பெற்று தற்போது துபாயில் வேலைக் கிடைத்து பாபாவின் அருளினால் நிம்மதியாக இருக்கிறன். அவருக்கு நான் நன்றி கூறுகிறேன். 
ஓம் சாயி ராம்.

-----------------------------

சாயிபாபா என் வேண்டுகோளை ஏற்றுக் கொள்வார் 

நான் 2009 ஆம் ஆண்டு முதல் தீவீரமான சாயி பக்தராக உள்ளேன். எனக்கு வாழ்க்கையில் பல பிரச்சனைகள் உள்ளன. ஆகவே நான் பிப்ருவரி ஏழாம் தேதி முதல் சாயி விரதம் இருக்கத் துவங்கி மயிலாப்பூர் ஆலயத்துக்கு சென்றேன். விரதத்தையும்  அன்று முதல் துவக்கினேன். அதனால் நான் சந்தோஷமாக உள்ளேன் என்பதின் அர்த்தம் அல்ல. நான் அழைக்காமல் யாரும் என்னிடம் வர முடியாது என்று பாபா கூறுவார். எனக்காக நீங்களும் பாபாவிடம் வேண்டுங்கள். என்னுடைய கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என்றுதான்  ஒன்பது வார விரதத்தை துவக்கினேன். பாபா என் வேண்டுகோளை நிறைவேற்று என்று உன்னையே வேண்டுகிறேன்.  நான் மிகவும் சங்கடத்தில் இருக்கிறேன். பாபா என்னை நீதான் காப்பாற்ற வேண்டும். பாபா என்மேல் கருணைக் காட்டுங்கள். நான் ஒன்பது வார விரதத்தை நல்லபடி முடிக்க நீங்கள்தான் துணை இருக்க வேண்டும். என்னுடைய பூர்வஜென்ம  கர்மாக்களை ஒழித்து என்னை பாபாதான் நீதான் காத்தருள வேண்டும்.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.