Tuesday, July 23, 2013

Sai Protected Me in False Case -Sai Devotee

-->

 
(Article slightly condensed and Translated into Tamil by Santhipriya)
                                                   
ஜெய் சாயி ராம்
அனைவருக்கும் குருபூர்ணிமா வாழ்த்துக்கள். பல இடங்களில் இருந்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் பக்தர்களின் அனுபவங்கள் சாயி மீதான ஒவ்வொருவரின் நம்பிக்கையையும் மேலும் அதிகரிக்க வைக்கின்றன. நம்முடைய சத்குருவின் அறிவுரை என்ன என்றால் எந்த ஒருவரும் எந்த நேரத்திலும் நம்பிக்கையை இழக்கக் கூடாது என்பதே. குரு பூர்ணிமா அன்று  வந்துள்ள இந்த அனுபவம் சாயி பக்தர்களுக்கு அற்புதமான செய்தியாகும்.
''நான் என்னுடைய பக்தர்களின் பக்கத்திலேயே அவர்களுக்கு சக்தி தருபவராக நிற்கின்றேன். பெரும் வேதனையில் மூழ்கி இருக்கும் அவர்களுடைய அன்பான வேண்டுகோளை ஏற்று அவர்களுக்கு உடனே நிவாரணம் அளிக்கிறேன்'' இந்த வார்த்தைகளை பாபாவின் நெற்றியில் சந்தனப் பொட்டை  பண்டிட் என்பவர்  வைத்தபோது பாபா கூறினாராம்.
மனிஷா
-----------------------------

அன்புள்ள சகோதரி மனிஷா,
என்னுடைய பெயரையும் முகவரியையும் வெளியிட வேண்டாம். நீங்கள் தற்போது செய்து வரும் சாயி பாபாவின் சேவையை தொடர்ந்து செய்து கொண்டு இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.

ஒருமுறை என்மீது பொய் வழக்கு போடப்பட்டது. அதற்கான தண்டனை கிடைத்தால் அதற்கு ஒரு மில்லியன் டாலர் மற்றும் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்பதாகும். நான் உண்மையிலேயே நிரபராதி  என்பதினால் தண்டனைக் கிடைத்தால் என் குழந்தைகளையும் சேர்த்து என் வாழ்வே நாசமாகிவிடும் எனும் கட்டத்தில் இருந்தேன்.

எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. பெரும் குழப்பத்தில்  இருந்தேன். பல வகைகளிலும் என் மீது பொய் குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்கள். என்னை சுற்றி கரிய மேகங்களே சூழ்ந்து இருந்தன என்பதை என்னால் உணர முடிந்தது. வாழ்வே நரகம் என்ற அளவில் வாழ்கை ஆயிற்று. ஆனாலும் நான் என்னுடைய குழந்தைகளுடைய எதிர்காலத்தை நினைத்து என்ன ஆனாலும் சரி, என் மீது வழக்கு போட்டவர்கள் எத்தனை பலம் மிக்கவர்கள் என்றாலும், என் மீது போடப்பட்டு இருந்த குற்றச்சாட்டுக்களை முறியடிக்க முடிவு செய்தேன்.

அப்போது நான் சில நாட்கள் இந்தியாவுக்குச் சென்று என்னுடைய மைத்துனர் வீட்டில் தங்கி இருந்தேன். அவர் தீவிரமான சீரடி பாபாவின் பக்தர். ஆனால் அப்போது நான் சாயி பாபாவின் பக்தர் அல்ல.

என்னுடைய மைத்துனர் பாபாவிடம் இருந்து அதிசயமிக்க அனுபவத்தைப் பெற்று இருந்தார். அவர் ஏழு வயதில் திருமணம் ஆனவர். அவருக்கு குழந்தைகள் எதுவும் கிடையாது. அவர்கள் பல மருத்துவர்களிடமும் சென்று வைத்தியம் செய்து கொண்டாலும் எந்த விதத்திலும் பலன் கிடைக்கவில்லை. பல ஆலயங்களுக்கும் சென்று வேண்டுதல்களை செய்தும் பலன் கிடைக்கவில்லை.

அவர் மிகவும் துயரத்தில் இருந்த போது ஒரு நாள் நண்பரின் வீட்டிற்குச் சென்று இருந்தார். அவருக்கு  சாயி பாபா குறித்து அவர்  கேள்விப்பட்டவுடன் தொடர்ந்து 15 நாட்கள் பாபாவின் ஆலயத்துக்கு சென்று அவரை வேண்டி வந்தபோது அவர் மனைவி கர்பமுற்று இருக்கிறாள் என்ற செய்தி வந்தது. அவருக்கு மிகவும் சூட்டிகையான பெண் பிறந்தாள்.  இப்போது அவர் தீவிரமான சாயி பக்தராக இருக்கிறார்.

இந்த நிலையில் நான் அங்கு சென்று இருந்தபோது என்னையும் அவர் அங்கிருந்த சாயி பாபாவின் ஆலயத்துக்கு அழைத்துச் சென்றார்.  துயறுற்றவர்கள் தன்னை முழுமையாக நம்பி வேண்டினால் பாபா உடனடியாக உதவுவார் என்று கூறினார். நான் அங்கிருந்தவரை என்னை பல முறை சாயிபாபாவின் ஆலயத்துக்கு அழைத்துச் சென்றார். நான் அமெரிக்காவிற்கு திரும்பிச் செல்லக்  கிளம்பியபோது சாயிபாபாவின் ஒரு சிலையை எனக்குக் கொடுத்தார். நானும் என்னுடைய மனைவியும் பாபாவின்  சாயி சரித்திரத்தையும் சாயி ரக்ஷ கவசத்தையும் தொடர்ந்து படித்தோம். பல இணையதளங்களில் வெளியான பக்தர்களின் அனுபவங்களை படித்தோம். அது எங்களுக்கு மன உறுதியை தந்தது. 
பல விதத்திலும் அரசாங்கம் எனக்கு அவர்கள் போட்டு இருந்த பொய் வழக்கில் தண்டனைக் கிடைக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தது. என்னுடைய வழக்கறிஞ்சர்களும் நம்பிக்கையை இழந்து விட்டார்கள். நான் வழக்கு துவங்கும் முன்னால் சாயி பாபுவின் உடியை வரவழைத்தேன். வழக்கு முடிந்தது. நீதிபதி என்னை நிரபராதி என கூறி விட்டதினால் எனக்கு எதிராக வழக்கு போட்டவர்கள் வாயடைத்து நின்றார்கள்.

எங்களுக்குப் புரிந்தது எங்களுடைய பூர்வ ஜென்மக் கர்மாவினால்தான் எனக்கு இந்த நிலைமை ஏற்பட்டது. ஆனாலும் பாபா நான் நிரபராதி என்பதை வெளிப்பட வைத்தார். அந்த சோதனைக் கட்டத்தில்தான் எனக்கு நண்பர்களும் உறவினர்களும் ஒருவருக்கு ஏற்படும் கழட்ட காலத்தில் எப்படி பழகுவார்கள் என்பது புரிந்தது.

பாபா அனைவருக்கும் அருள் புரியட்டும் என்றே நானும் வேண்டுகிறேன். நான் இருக்கும் இடத்தில் சாயியின் ஆலயம் எதுவும் இல்லை. இந்தியாவில் உள்ள என்னுடைய சகோதரர் சாயி   ஆலயத்துக்கு அவ்வபோது சென்று எனக்காக வேண்டி வந்தார். எங்களை மீண்டும் சீரடிக்கு அழைக்க வேண்டும் என நான் பாபாவை வேண்டுகிறேன். பாபாவின் அருளினால் நாங்கள் பல விதத்திலும் மகிழ்ச்சியை பெறுகிறோம். பாபா தொடர்ந்து எண்ணக் காப்பாற்ற வேண்டும்.
சாயிராம்

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.