Monday, May 14, 2018

'ஒரு யோகியின் சுயசரிதை' -- ஆஷலதாவின் அனுபவம்

'ஒரு யோகியின் சுயசரிதை'
என்னும் நூலுக்கு ஸாயி
அளித்த தெய்வீக வழிகாட்டி
ஆஷலதாவின் அனுபவம்
(ஆங்கிலத்தில்: http://www.shirdisaibabakripa.org/)
(தமிழில் மொழிபெயர்ப்பு: Dr . சங்கர்குமார், USA )


அன்பார்ந்த ஸாயி அடியார்களே,

இனிய பாபா நாள் வாழ்த்து.
பாபாவின் அருளாலும், ஆசியாலும் நமது ஸாயி மாதாவின் அதிசயமான ஆனந்த அனுபவங்களை உங்களுடன் பகிர நான் மீண்டும் வந்துள்ளேன். ஸாயிபாபா நமக்கெல்லாம் குருவாகவும், தந்தையாகவும் இருந்தாலும், அவ்வப்போது பிற குருமார்களின் தெய்வீகத்தன்மையை நாம் அறியவும், ஆனந்திக்கவும் நம்மை ஆசீர்வதிக்கிறார். அனைத்து அருளாளர்களும் ஒருமித்த கருத்துடனே செயலாற்றுகின்றனர் என்பதையும்,ஒரு பரமானந்தத் தெய்வீக சக்தியின் ஒரு அங்கமாகவே செயல்படுகின்றனர் எனவும் நமக்கு நம்பிக்கை அளிக்கிறார்.
பாபாவால் ஆசீர்வதிக்கப்பட்ட சகோதரி ஆஷா அவர்கள் அவரது இனிய அனுபவங்களைப் பலமுறை நம்முடன் பகிர்ந்திருக்கிறார்.
எவ்வாறு இன்னொரு அருட்குருவின் தெய்வீகத்தைத் தாம் உணர பாபா அருளினார் என்பதை இங்கே அவர் சொல்லியவாறே உங்களுடன் பகிர்கிறேன்.
ஜெய் ஸாயிராம்.
மனிஷா பீஷ்த்

கருணையின் வடிவமான நமது பரமபிதாவான ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத் மஹராஜ் எனக்கு மற்ற குருமார்களையும், மஹான்களையும் காட்டிக்கொண்டே இருக்கிறார். எவ்வாறு நான் ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்த ஸ்வாமியின் ஈர்க்கப்பட்டேன் என்பதை இந்தப் பதிவில் எழுதுகிறேன்.

தெய்வீக அனுபவங்களால் என்னை பக்குவமாக்கிக்கொள்ள அருளும் நமது ஸத்குரு ஸாயியின் பொற்றாமரைப் பாதங்களில் என் பணிவன்பான வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன். இந்த அனுபவங்களை உங்களெல்லாருடனும் பகிர்ந்துகொள்ளும் நல்வாய்ப்பினைத் தருவதற்காக சகோதரி மனிஷாவுக்கு எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பல ஆண்டுகளாக, இங்குமங்குமாய் ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரைப் பற்றிய செய்திகளைப் படித்து வந்தபோதிலும், 'ஒரு யோகியின் சுய சரிதை' என்னும் தெய்வீக நூலைப் படிக்கும் பேறு எனக்குக் கிட்டவில்லை. கடந்த 24/9/2016 அன்று எனது மகனின் பிறந்த நாள‌ன்று இந்த நூலை எனது அன்பு சகோதரி ஹரிணிஜி பரிசாக அளித்தார். இந்த நூல் கிடைத்ததை ஒரு பாக்கியமாகக் கருதி, அதைப் பாராயணம் செய்ய விரும்பினேன். ஆனால், பல்வேறு காரணங்களால் என்னால் அதைப் படிக்கும் சந்தர்ப்பம் நேரவில்லை.
ஒரு வியாழக்கிழமை காலையில் ஸ்ரீ ஸாயி தரிசனத்திற்குச் சென்று 'காகாட்' ஆரத்தியைக் கண்டு களித்து, பிறகு ஒரு சில சேவா காரியங்களில் நானும், என் கண‌வரும் ஈடுபட்டோம். அப்போது அர்ஜுனனுக்கு கண்ணன் கீதோபதேசம் வழங்கும் காட்சியடங்கிய ஒரு படத்தைக் கண்டேன். கண்ணனின் படத்தைக் கண்டு மயங்கிய நான் அந்தப் படத்தை வைத்துக்கொள்ள விரும்பினேன். ஆலய மேலாளரின் ஒப்புதலோடு அதை எடுத்துக் கொள்ள முதலில் விரும்பினாலும், ஸாயி தனது அருட்செயல் மூலம் எனக்கு ஒரு குறிப்பு காட்டட்டும் என மனதுக்குள் முடிவு செய்தேன்.

அந்த நேரம், நான் பல நாட்களாகச் சந்தித்திராத எனது தோழி ஸ்னிக்தாஜி அங்கே வரவும், நான் மனமகிழ்ந்தேன். வழக்கமாக இந்த நேரத்தில் தான் வருவதில்லை எனவும், இப்படி ஒரு சந்திப்பு நிகழ ஸாயியின் லீலையே காரண‌ம் எனவும் நாங்கள் பேசிக் கொண்டோம். சற்று நேரம் பேசிய பின், கொஞ்சம் வெளி வேலை இருப்பதாகவும், இன்னுமொரு 10 நிமிடங்களில் திரும்பி வரும்வரை நாங்கள் இருக்கவேண்டும் எனவும் வேண்டினார். மதிய ஆரத்தி நேரம் நெருங்கி வருவதால், நாங்கள் இருப்போம்  என அவரிடம் கூறினேன்.

திரும்ப வந்த அவரது கையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் யோக நிலையில் அமர்ந்திருக்கும் ஒரு வண்ண‌ப்படம் இருந்தது. எனக்கு அதை அளித்த அவர் கூடவே, ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் பொன்மொழிகள் பதித்த பெரிய தாமரை வடிவில் இருந்த இன்னொரு படத்தையும் அளித்தார். [அதை இங்கே தந்திருக்கிறேன்].
ஆச்சரியத்தால் திகைத்துப்போன நான், விரும்பிய கண்ணன் படத்தையும், கூடவே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரைக் குறித்த ஆசியையும் அளித்ததற்காக பாபாவுக்கு நன்றி கூறினேன். எவ்வாறு ஸாயி என் மனத்திலிருந்த ஆசையை இவர் மூலம் நிறைவேற்றினார் என்பதை விளக்கி அந்த சகோதரிக்கும் நன்றி தெரிவித்தேன்.
அதைக் கேட்டு அவரும் ஆச்சரியமடைந்து, இந்த இரு படங்களையும் எனக்குத் தருவதற்காக அவர் சேமித்து வைத்திருந்தார் எனவும் இன்று என்னைக் கண்டதும் அதைத் தர ஒரு எண்ணம் வந்ததாகவும் கூறினார். கண்களில் நீர் மல்க, அவ்விரு படங்களையும் கொண்டு வந்து பூஜையறையில் வைத்தேன். டிசம்பர் 2017ல் விடுமுறையாக ஃப்ளோரிடா செல்ல முடிவெடுத்தோம்.  கிளம்பும் முன், அந்தப் புத்தகத்தை எடுத்து வந்து 'நீ வழியில் படி' என‌ என் மகனிடம் கூறினேன். வழக்கமாக என்னை மறுத்துப்பேசாத அவன், இந்த முறை 'வேண்டாம், பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனச் சொன்னான்!' நான் மீண்டும் வற்புறுத்தியதும், அப்படியானால் 'நீ ஏன் படிக்கக் கூடாது' என்றான். அவனை வற்புறுத்துவதற்குப் பதில் நானே என்ன் படிக்கக்கூடாது என உடனே எண்ணி, அந்தப் புத்தகத்தை என் கைப் பையில்  வைத்துக் கொண்டேன்.

பயணத்தின்போது அதைப் படிக்கலானேன். அதில் பொதிந்திருந்த அற்புதக் கருத்துக்களில்  மனம் ஆழ்ந்து போனது. அதன் காந்த சக்தி என்னை மிகவும் கவர்ந்தது. ஃப்ளோரிடாவில் புஜகேஷ்வர் ஆலயத்தில்  திங்கட்கிழமை பூஜை, அபிஷேகம் முதலியன கண்டு கழித்தப் பின் ஸ்வாமி விஜயானந்த ஸரஸ்வதி, மற்றும் திவ்யானந்தாஜி அவர்களுடன் பரமஹம்ஸர் உள்ளிட்ட பல்வேறு மஹான்களைக் குறித்து ஸத்சங்கம் நிகழ்ந்தது.

[மேலும் இரு ஸாயி ஆலயத்தையும்  தரிசித்தோம். அதைப் பற்றி பிறகு எழுதுகிறேன்.]

விடுமுறையிலிருந்து திரும்பிய உடனேயே  ஸ்னிக்தாஜியை அழைத்து, அவர் தந்து பரிசுகளுக்காகவும், அதன் மூலம் யோகியின் சுயசரிதையைப் படிக்கும் வாய்ப்பினைத் தந்ததற்காகவும் என் நன்றியையும் தெரிவித்தேன். அதற்கு அவர் கூறிய பதில் என்னை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவரும், அவரது குருமார்களும் கடந்த சில மாதங்களாக இந்த நூலைப் பாராயனம் செய்து வருவதாகவும், ஜனவரி 5-ம் தேதி வரும் யோகியாரின் பிற‌ந்த நாளுக்கு முன்பாக அதை முடிக்கும் எண்ணத்தில்  இருப்பதாகவும் கூறினார். இது பற்றி ஏதும் அறியாமலேயே நானும் 10 நாட்களுக்கு முன்னர் பாராயண‌த்தை ஆரம்பித்திருந்தேன். இதுவரை 30 அத்தியாயங்களை முடித்து, ஜனவரி 5-க்குள் இன்னும் 20 அத்தியாயங்களை முடிக்க வேண்டியிருந்தது. நமது சத்குரு ஸாயியிடம் இதை முடிக்கின்ற மனோதிடத்தை அருளுமாறு வேண்டினேன். அவ்வாறே, ஜன. 5 இரவு 11 மணியளவில் பாராயணத்தை முடித்தேன். அந்த நேரத்தில் என்ன பிராசாதம் அளிப்பது என நினைத்தபோது, குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்த ஸ்ட்ராபெரி பழங்கள் நினைவுக்கு வந்தது. அவற்றை அலம்பி, ஒருவேளை புளிப்பாக இருக்குமோ என எண்ணி, அதன் மீது சிறிது சர்க்கரை தூவினேன். [யோகி முதன்முறை அமெரிக்கா வந்தபோது முதல் உணவுக்குப் பின் இதைத்தான் தந்திருந்தார்களாம்!] ஆரத்தியின் பின் அவற்றை  உண்டபோது, தேன் போல இனிப்பாக இருந்தன! சர்க்கரை தூவாத ஒரு சில பழங்களையும் சாப்பிட்டுப் பார்த்தேன். அவையும் இனிப்பாகவே இருந்தன. ஸாயி எங்களுக்கு அளித்த இந்த நல்லாசிக்கு அவருக்கு நன்றி கூறினேன்.

யோகியைப் பற்றி மேலும் படிக்க என்னுள் ஆசை மிகுந்தது. ஜன். 27 அன்று கூகுலில்  தேடியபோது, ஸ்வாமி கிரியானந்தா அவர்கள் பரமஹம்சரைப் பற்றிப் பேசிய 2 மணி நேர யூட்யூப் விடியோ கிடைத்தது. யோகியுடனான தனது அனுபவங்களை அவர் விவரித்ததைக் கேட்டு நான் மெய் சிலிர்த்தேன். உடனே அந்த இணைப்பை எனது பிற தோழிகளுக்கும் அனுப்பி வைத்தேன். அப்போது ஸ்னிக்தாஜி தான் அமேஸான் மூலம் அனுப்பியிருக்கும் ஒரு பொருளை என் வீட்டு வாசலில் பார்க்கச் சொன்னார். அதை எடுத்து சாயியின் பாதங்களில் வைத்து, ஸ்னிக்தாஜிக்கும் எனது நன்றியைத் தெரிவித்தேன்.
அதைத் திறந்து பார்த்தபோது, பரமஹம்ஸர் அருளிய நல்லுரைகளின் தொகுப்பு அடங்கிய ஸி.டி. ஒன்று இருந்தது. எனது விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் ஸாயீயை நினைத்து, அந்த ஒலித் தகடை அணைத்துக் கொண்டேன். அதை ஸாயியின் பாதங்களில் வைத்து விட்டு, அடுத்த அறைக்குச் செல்லும்போது, எனது வலது கரமும், தலையும் பாரமாவதையும், ஏதோ ஒரு சக்தி என்னை முன்னே தள்ளுவது போலவும் உணர்ந்தேன். எனது வலது கை மிக வேகமாக முன்னும் பின்னுமாய் ஆடியது. நான் அணிந்திருந்த முழுக்கைச் சட்டை நீளமானது. எனது தலைமுடி மேலும் அடர்த்தியானது. உடனே நான் பரமஹம்ஸ‌ரின் பெயரைக் கூறி அழைத்தேன். அவர் அங்கே இருக்கிறாரோ எனவும் பார்த்தேன். ஆனால் அவர் தென்படவில்லை. ஆனால், அவர் என் மீது வந்திருக்கிறார் எனப் புரிந்தது. கண்ணாடி முன் நின்று என்னைப் பார்த்தேன். என் முகம், என் தலைமுடி, என் கை எல்லாம் அப்படியேதான் இருந்தன. அப்படியானால், அவர் எங்கே போனார்? எப்படி என்னுள் அவர் வந்தார்? ஓ ஸாயி, பரமஹம்ஸர் ஒரு கணம் என்னுள் பரவியதை என்னால் உணரமுடிந்தது. ஆனால் அவரைக் காணவில்லை. ஆச்சரியத்தில் என் மெய் சிலிர்த்தது.

பரமஹம்ஸரின் ஆலயத்துக்குச் செல்லும் ஆசை என்னுள் வளர்ந்தது. அடுத்த ஞாயிறன்று செல்ல முடிவு செய்தோம். எனது பூஜையறையில் 6 குருமார்களும் இருக்கும் படத்தை வைக்க எண்ணினேன். அந்த வியாழனன்று,  தொண்டைவலி, மற்றும் காய்ச்சல் காரணமாக எனது இளைய மகன் பள்ளியிலிருந்து திரும்பினான். வரும் ஞாயிறுக்குள் அவன் சுகமாக வேண்டுமென சாயியிடம் பிரார்த்தித்தேன். ஆனால் சனிக்கிழமை இரவு வரையிலும் காய்ச்சல் குறையவில்லை. பிப்ரவரி 4-ம் தேதி ஞாயிறு காலை, அன்று, எனது தோழி புஷ்பாவிடமிருந்து ஸ்ரீ யுக்தேஷ்வர் கிரி அவர்களின் படமும், அவரது செய்தியும் எனக்கு வந்தது. நாங்கள் அன்று ஆலயம் செல்லப் போவதின் அறிகுறி என மகிழ்ந்தேன். எனது மகனை நான் எழுப்பாமல், அவனே எழுந்து வரவேண்டுமென ஸாயியிடம் வேண்டினேன். அப்படியே அவனும் எழுந்து, பல் துலக்கிக் குளித்து வருவதாகச் சொன்னான். நானும் மகிழ்ச்சியடைந்து காலை உணவு தயார் செய்யத் துவங்கினேன். ஆனால், அப்போது எனது மகன் வந்து தன்னால் பல் துலக்க முடியவில்லையென்றும்,  தலை சுற்றுவதாகவும் சொல்லிப்  படுத்து விட்டான்.

ஸாயியிடமும், யோகியிடமும் மானசீகமாக, சென்ற சனியன்று யோகி என்னை ஆட்கொண்டது உண்மையெனில், இன்று அவருடைய தரிசனத்துக்கு என்னை கொண்டு செல்ல வேண்டுமெனவும், இல்லாவிடில், நான் கண்ட அனுபவங்கள் யாவும் என் கற்பனையே என என் தோழிகளிடம் சொல்லப்போவதாகவும் வேண்டிக்கொண்டேன். எனது இந்த இரு குருமார்களும் என் மகனுக்குத் தேவையான சக்தியை அளிக்கும்வரை நானாக அவனை எழுப்பப்போவதில்லை எனவும் முடிவெடுத்தேன். பகல் 12 மணிக்கெல்லாம் அந்த ஆலயத்தில் வழிபாடுகள் முடிந்துவிடும். என் மகன் அடுத்த 5 நிமிடங்களில் தானே எழுந்து, குளிக்கச் சென்றான். என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இருவருக்கும் மீண்டும் என் நன்றிகளைச் சொன்னேன். அந்த ஆலயத்தின் வழிபாடு முறைகள் எனக்குத் தெரியாததால், பழங்கள் கொண்டு செல்லமுடியுமோ என நினைத்தேன். குளிர் பதனப் பெட்டியில் இன்னும் ஒரு ஸ்ட்ராபெரி பழக் கூடை இருந்தது.

அங்கே செல்லும் வழியெல்லாம் யோகியாரின் தெய்வீக லீலைகளைப் பற்றியே சிந்தித்திருந்தேன். அங்கே தியான நேரம் முடிந்ததும், என் கண்கள் புகைப்படங்கள் இருக்கும் இடத்தைத் தேடின. புத்தகக் கடையில் படங்கள் வாங்க இயலுமா என ஸ்னிக்தாஜியிடம் கேட்டு அறிந்து கொண்டு, குருமார்கள் படங்கள் அடங்கிய இரு வாழ்த்தட்டையைப் பார்த்து, அதை எடுக்கச் செல்லும்போது, 'அனைத்து குருமார்களும் ஒரே படத்தில் இருப்பதுபோல வேண்டுமா அல்லது தனித்தனியாக வேண்டுமா' என ஸ்னிக்தாஜி கேட்டார். எப்படி இருந்தாலும் பரவாயில்லை என நான் சொல்லவும், அவர் என்னை உடனே கார் நிறுத்துமிடத்துக்கு வரச் சொன்னார். தனது கார் கதவைத் திறந்த அவர், 'இதோ ஆறு குருமார்களும் உனக்காக இங்கே காத்திருக்கின்றனர், பார்' எனச் சொன்னார். ஆச்சரியத்துடான் அங்கிருந்த ஒரு படத்தை எடுத்தேன். அது ஸ்ரீ யுக்தேஷ்வர் கிரியின் படம்! அப்படியே அனைத்து குருமார்களின் படங்கள் அடங்கிய ஒரு அட்டைப் பெட்டியை அவர் என்னிடம் தர, நான் ஏதோ ஆறு குழந்தைகளைப் பெற்றவள்போல் மகிழ்ந்தேன். இந்தப் படங்கள் பற்றிய கதையை நாளை சொல்வதாக அவர் சொன்னார்.
அங்கிருந்து அருகிலிருந்த மஹாலக்ஷ்மி ஆலயத்துக்கு  சென்றோம். அந்த ஆலய தேவியின் படம், இந்தியாவில் என் வீட்டருகே இருக்கும் மஹாலக்ஷ்மி தேவியின் உருவை ஒத்திருந்தது கண்டு மகிழ்ந்தேன். அந்தப் படத்தையும் வாங்கினேன். 

வழக்கமாக அங்கிருந்து ஸாயி ஆலயம் செல்வோம். ஆனால் அன்றென்னவோ திருமதி ஹரிணிஜியின் வீட்டிற்குச் சென்றோம். ஸ்ரீ பூண்டி மஹான் ஆலயத்திலிருந்து வந்த பிரசாதமும், பித்தளை ப்ரேஸ்லெட்டும் திருவண்ணாமலையில் இருக்கும் ஸ்கந்தாசிரமத்துக்கும் விரூபாக்ஷர் குகைக்கும் செல்லும் பாதையிலிருந்து ஒரு சிறு கல்லையும் எனக்கு அளித்தார்.

ஓம் எனும் மந்திரம் பொறித்த ஒரு வெள்ளி மோதிரத்தை வாங்கி எனக்களித்தார். இதன் தனித்துவம் கண்டு நான் வியந்துபோனேன். [ஓம் எனும் மந்திரத்தை ஸத்குரு ஸாயி எனக்கு உபதேசம் செய்த நிகழ்வை அவர் அருளிருப்பின், பிறகு சொல்கிறேன்.]
அத்துடன் நில்லாது, நமது ஸாயி அன்னை எனக்கு முன்னதாகவே என் பிறந்தநாள் பரிசாக அனுப்பியிருக்கிறார் என ஒரு சேலையைப் பரிசளித்தார். ஸத்குரு ஸாயியை அலங்கரித்த சேலை அது! ஆக மொத்தம் அன்று எனக்கு 10 குருமார்கள் பரிசாகக் கிடைத்தனர். ஸர்வாந்தர்யாமியான ஸ்ரீ ஸத்குரு ஸாயியை வணங்கிப் போற்றியபடி நான் மகிழ்வுடன் வீடு திரும்பினேன்.

மறுநாள் காலை ஸ்னிக்தாஜியை அழைத்து, படங்கள் பற்றிய லீலையைக் கேட்டேன். இந்தப் படங்கள் சுமார் 40 ஆண்டுகள் பழைமையானவை எனவும், பல துறவிகள் இவற்றின் முன் அமர்ந்து தியானம் செய்திருக்கின்றனர் எனவும், 2 ஆண்டுகளுக்கு முன்பு, புதிய படங்கள் வாங்க ஆலயத்தில் முடிவு செய்தபோது, தானும் அதற்கு உதவி செய்ததால், பழைய படங்களைத் தன்னிடம் தந்ததாகவும், ஆனால் அவற்றை எடுத்துச் செல்லாமல், அந்த சர்ச்சில் இருக்கும், 'ஸண்டே ஸ்கூலில்' அவற்றைப் பிரிக்காமலேயே வைத்திருந்ததாகவும், இவற்றை யாரோ ஒரு அடியவருக்குத் தரவேண்டுமென ஒரு உள்ளுணர்வு கூறியதாகவும், அதன்படியே மற்றொரு குரு ஒருவர் கூறியதற்கேற்ப அவற்றைத் தன் வீட்டிற்கு கடந்த நவம்பர் 2017-ல் கொண்டு சென்றதாகவும், பிப்ரவரி 2018-ல் பரமஹம்ஸர் என் மீது வந்த அனுபவத்தை நான் சொன்னபோது, ஆறு குருமார்களும் அவரது கண் முன்னே வந்ததாகவும், அதுவே இவற்றை எனக்கு அளிக்க அவர்கள் காட்டிய அறிகுறி என நினைத்ததாகவும், இருந்தாலும் மேலுமொரு அடையாளம் காட்ட வேண்டுமென அவர் வேண்டியதாகவும், மறுநாள் தியானத்தின்போது, இதுபோன்ற படங்களை பிறருக்கு அளிப்பதால், அவர்களுக்கும் இதன் மூலம் நல்லதிர்வுகள் போய்ச் சேருமென ஒரு எண்ணம் தோன்றியதாகவும், அதுவே இன்னுமொரு நல்ல அறிகுறி என நினைத்ததாகவும், தனது குரு ஒரு சில படங்களைத் தானும் வைத்துக்கொண்டு, மற்றவற்றைக் கொடுத்தால் போதும் எனச் சொன்னபோதிலும், குரு பரம்பரையைப் பிரிக்க வேண்டாமெனக் கருதி, அவற்றை எடுத்தபோது, ஒரு சில‌ படங்களின் சட்டங்கள் விரிசல் விட்டிருந்ததால், புதிதாக மாற்றலாமென நினைத்து அதைப் பிரித்தபோது, ஒவ்வொரு சட்டத்துக்குள்ளும் ஒரு கருப்பு-வெள்ளை, மற்றும் வண்ணப்படங்கள் இருந்ததாகவும், யுக்தேஷ்வர் கிரியின் சட்டத்துக்குள் வண்ணப்படம் படம் மட்டுமே இருந்ததாகவும்,  இந்த தெய்வீக லீலையைக் கண்டு தான் வியந்துபோனதாகவும் கூறினார்.
'சர்ச்சுக்குள்' சென்று, ஸ்ரீ யுக்தேஷ்வர் கிரியின் கருப்பு-வெள்ளைப் ப‌டம் கிடைக்குமா என விசாரித்தபோது, பல ஆண்டுகளாக அவை பதிப்பிடப்படவில்லை எனவும், ஆனால், உள்ளே ஏதோ ஒரு இடத்தில் தான் ஒரு படத்தைப் பார்த்த ஞாபகம் இருப்பதாகவும், அது இவருடைய படம்தானா எனத் தெரியவில்லை எனவும் ஒரு அன்பர் கூறினாராம். அப்படியே ஸ்னிக்தாஜி தேடியபோது, அந்தப் படம் கிடைத்து, அதுவும் ஸ்ரீ யுக்தேஷ்வர் கிரியின் படமே எனவும், அதனால் தற்போது அனைத்து குருமார்களின் கருப்பு-வெள்ளை, மற்றும் வண்ணப்படங்கள் இருப்பதாவும், யோகி தனது கருணையினால் அவரது வீட்டுப் பூஜையறையில் ஒன்றும், எனக்கென ஒன்றும் தர அருளியிருப்பதாகச் சொன்னார். அவற்றுக்கான சட்டங்கள் வாங்கச் சென்றபோது, நான்கு சட்டங்கள் மட்டுமே கிடைத்ததாகவும், மற்ற இரு சட்டங்களையும் தானே வாங்கித் தருவதாகவும் கூறினார். அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாமென நான் எவ்வலவோ தேடியும், அவை எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், ஒரு மாதம் கழித்து, அதே கடையில் மேலும் இரு சட்டங்கள் கிடைத்ததெனக் கூறவும் அதே கடையில் இவற்றை வைப்பதற்கான மரப்பலகையும் அளவெடுத்ததுபோல் கிடைத்தது மிக மிக ஆச்சரியமே!
இவ்வாறு இந்த அருள் கிட்டியது எங்கும் நிறை அருளாளர் ஸ்ரீ ஸாயியின் கருணையினாலேயே! அவரது பொற்பாதங்களை என் கண்ணீரால் கழுவி, என்னை ஆசீர்வதித்து, என்றும் என் கூடவே இருக்க வேண்டுமென வேண்டுகிறேன்.

ஓம் ஸ்ரீ ஸாயிராம் ஜெய் குரு தேவா

ஆஷா ராஜு.

Loading

Monday, October 2, 2017

Sai Miracle, October, 2017

Dear Sai devotees and Manisha,
This letter has been received by Dr Sankar Kumar of USA (Sankar DDS Raleigh).  At his request the same is published in bilingual for the benefit of Sai devotees. 
Hope Manisha.Rautela.Bisht, the patron and owner of this site will not mind this upload.
N.R. Jayaraman

SAI MIRACLE
 
{Article sent and also Translated into Tamil by : Dr. Sankar Kumar, USA}
(E mail:- <Sankar.Kumar@ssa.gov) 
Dear sir,

I'm Divya preetha. I'm also a big devotee of Saibaba.I want to share our saibaba's miracle in my life.I've affair with radhakrishnan. Ususual problem between me and his family so our relationship has broken that time I was too depressed and I ve a habit of writing letter to saibaba.I've written that Saibaba I'm not eligible to live in this world baba.I want to die pls do something baba.if i commit suicide my sibilings life will suffer so pls take with u baba i want to die.i dont want to live in this world.I can't accept this bitter moment pls do accident while I'm going somewhere like that I wrote and prayed.i used fb daily that day Saibaba has replied for my prayer in fb.really that post only for me..I've attached that screenshots below.Sai is everything to me.Sai is my soul.Saibaba ki jai.....sir pls pray for me I want to get succeed in my love.now we are not speaking but i wish to marry radhakrishnan. His mom is seriously searching alliance..jai sairam....(E mail id of preetha witheld from publishing for privacy)

அன்புள்ள ஐயா,
என் பெயர் திவ்யா ப்ரீதா  ஸாயிபாபாவின் பெரும் பக்தை. என் வாழ்வில் ஸாயிபாபா நிகழ்த்திய அற்புதம் ஒன்றைப் பகிர விரும்புகிறேன்.
ராதாகிருஷ்னன் என்பவருடன் நான் உறவு கொண்டிருக்கிறேன். ஏதோ காரணங்களால் என் குடும்பத்துக்கும், அவரது குடும்பத்துக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டு, இப்போது எங்கள் இரு குடும்பங்களுக்குள்ளும் பேச்சுவார்த்தை கிடையாது. இதனால் மனமுடைந்த நான், இனி இவ்வுலகில் வாழவே தகுதியற்றவள் என எண்ணி ஸாயிபாபாவுக்கு ஒரு கடிதம் எழுதினேன். இவ்வாறு அவருக்கு கடிதம் எழுதும் வழக்கம் எனக்கு உண்டு. நான் இறக்க விரும்புவதாகவும், ஆனால் அவ்வாறு செய்தால் என் கூடப்பிறந்தவர்களுக்கு வீணான அவப்பெயர் வருமே எனவும் அஞ்சினேன். இருப்பினும் நான் இனியும் இவ்வுலகில் வாழாமல் சாவதற்கு ஏதேனும் விபத்து உண்டாக்கி, என்னை உங்களுடன் சேர்த்துக்கொள்ள வழி செய்யுங்கள் என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். அடிக்கடி முகநூலில் அவரது பொன்மொழிகளை நான் படித்து வருவேன். அன்று எனக்கு வந்த வாசகத்தினை அப்படியே படம் பிடித்து இத்துடன் அனுப்பியிருக்கிறேன். எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஸாயியே எனக்கு எல்லாமும். அவரே எனது ஆன்மாவில் கலந்தவர். ஸாயிபாபாவுக்கு வெற்றி உண்டாகட்டும்.
எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள். எனது காதலில் நான் வெற்றியடைய வாழ்த்துங்கள். இப்போது நாங்கள் பேசிக்கொள்வதில்லை. ஆனாலும் அவரையே நான் மணக்க விரும்புகிறேன். ஆனால் அவரது தாயோ அவருக்கு வேறிடத்தில் மணம் முடிக்க தேடிக்கொண்டிருக்கிறார். ஜெய் ஸாயிராம்.


Loading

Wednesday, March 15, 2017

Poonthamandalam Ananda Sai temple

ஆனந்த ஸாயி 
- பூந்தண்டலம் - சென்னை

{Translated into Tamil by : Dr. Sankar Kumar, USA}
(E mail:- <Sankar.Kumar@ssa.gov)  
 
அன்பார்ந்த வாசகர்களே, அனைவருக்கும் இனிய பாபா நாளான புனித குருவார வாழ்த்துகள்!

கெர்மெனி ஸாயி கோவிலைப் பற்றிய பதிவுக்குப் பிறகு நீண்ட நாட்களாக நான் கோவில் பதிவுகள் எதுவும் போடவில்லை என அறிவேன். அதற்கென விசேஷ காரணங்கள் எதுவுமில்லை. சொல்லப்போனால், கைவசம் ஒரு சில பதிவுகள் தயாராகவே இருக்கின்றன; ஆனால், அவற்றைப் பதிவிடும் வேளை இன்னும் வரவில்லை. அனைத்தும் பாபாவின் ஆணைப்படியே நடக்கும் என்பதே முடிவான முடிவு.

இதுவரை எழுதியவை எதுவும் பதிவிட வேண்டுமெனத் திட்டமிட்டு எழுதப்பட்டவை அல்ல. ஒரு சில தேடல்களுக்குப் பின்னரோ, அல்லது, பாபாவால் அவரது பக்தர்களால் அனுப்பப்பட்டோதான் அவை வெளியாயின. இங்கு நடப்பவை அனைத்துமே வினோதமான முறையில் பாபாவால் தீர்மானிக்கப்பட்டு, அவரால் நிகழ்த்தப்படும் பதிவுகளே இங்கு வெளியாவதால், நானும் அவற்ரையெல்லாம் அவர் விருப்பப்படியே விட்டு விடுகிறேன்.

ஸாயி பக்தை ஆஷாலதா அவர்கள் பாபாவின் ஆணையால் உந்தப்பட்டு, சென்னையில் இருக்கும் ஒரு பாபா கோவிலைப் பற்றிய விவரங்களை அனுப்பியிருக்கிறார். மேலும் சில கோவில்களைப் பற்றியும் விவரங்கள் சேகரித்து வருகிறார். பாபாவின் விருப்பப்படியே அவை நிகழும். சென்னை, பூந்தண்டலத்தில் இருக்கும் ஆனந்த ஸாயி ஆலயம் பற்றிய விவரணையை இங்கே படியுங்கள்.

  ஆலய வரலாறு

ஸ்ரீ ரமணன் என்னும் ஸாயி அடியவருடன் இதன் வரலாறு துவங்குகிறது.

அவரும், அவரது குடும்பத்தாரும் தீவிர ஸாயி பக்தர்கள். சென்னை, போர்ட் ட்ரஸ்டில் அவர் வேலை செய்து வந்தார். ஸ்ஹீர்டி ஸாயி படம் ஒன்றை அவரது தாயார் அவருக்கு அளித்து, தினமும் வணங்கி வருமாறு கூறினார். 1997-ல் அவரும், அவரது நண்பர்கள் சிலரும் தங்களது எதிர்காலம் பற்றி அறிந்துகொள்ள ஒரு ஜோதிடரிடம் சென்றனர். ரமணரின் ஜாதகப்படி அவர் எதிர்காலத்தில் ஆலயம் ஒன்றைக் கட்டுவார் என இருந்தது. அப்படி எதுவும் எண்ணமில்லாத அவருக்கு இது மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்தது. எந்த தெய்வத்தின் கோவிலைக் கட்டப்போகிறோம் என்னும் குழப்பமும் எழுந்தது.
1998-ம் ஆண்டில் சென்னை கடற்கரை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் ஸாயி கோவிலுக்கு செல்ல நேர்ந்தது. அங்கே அவருக்கு ஸாயியின் அருட்பார்வையும், 'நான் ஒரு புது ரூபத்தில் உன்னிடம் வருவேன்; நீ எனக்கு ஒரு ஆலயம் கட்டு' என்னும் கனவும் கிடைத்தது. அதன் பிறகு, அவர் இல்லறத்திலிருந்து விடுபட்டார். காலணி அணிவதையும் விடுத்தார். ஸாயிநாதனை தன் மனக்கோவிலில் காணத் தொடங்கினார். அவருக்கு ஆலயம் அமைக்க தகுந்த ஒரு இடத்தைத் தேடலானார். மிகுந்த சிரமத்துக்குப் பின்னர், ஒரு சிறிய இடம் விலைக்கு வருவதை அறிந்தார். ஆனால், அதுவும் ஏதோ சட்டப் பிரச்சினையில் சிக்கியிருந்தது.

இந்த சமயத்தில் அவரது நண்பர் ஒருவர் கட்டிய வினாயகர் ஆலய கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ரமணர் கலந்துகொண்டார். அங்கே அந்த நண்பர் மூலம், திரு. லியோ முத்து என்னும் பெரிய மனிதரின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் தான் ஸாயி ஆலயம் கட்டுவதற்காக வாங்க நினைத்திருக்கும் நிலப் பிரச்சினையைத் தெரிவித்து உதவி கோரினார். அதைக் கேட்ட திரு முத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஏனெனில், தான் கட்ட நினைத்திருக்கும் ஸாயிராம் கல்லுர்ரிக்குள் ஒரு ஆலயம் கட்ட நினைத்திருந்த அவர், சுமார் 33 ஏக்கர் நிலத்தை திரு. ரமணரிடம் அளித்து, ஆலயம் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆதரவளித்தார்.

இங்கேதான் ஸாயி லீலை நிகழ்கிறது!

கடந்த 27 ஆண்டுகளாக துபாயில் வசித்துவந்த ஸூர்யா தம்பதியினரை பாபா இந்தக் கூட்டுறவில் இணைத்தார். அந்த அம்மையாரின் கனவில் ஸாயி வந்து, இதுவரை எங்கும் வழக்கமாகக் காணப்படும் ஸாயி உருவங்களைப் போலல்லல்லாமல், வித்தியாசமான வகையில் ஒரு சிலை செய்து பிரதிஷ்டை செய் என உத்தரவிட்டிருந்தார். பூந்தண்டலம் என்னும் கிராமத்தில் அது நிறுவப்பட வேண்டுமெனவும், இதே எண்ணம் கொண்ட ஒருவரை அங்கே சந்திக்க வேண்டுமெனவும் அதில் அவர் சொல்லியிருக்கிறார்! இந்த கிராமம் எங்கே இருக்கிறது எனக்கூட அந்த அம்மையாருக்குத் தெரியாது. யாரைத் தொடர்பு கொள்வதெனவும் தெரியாமல் தவித்திருக்கிறார். ஸாயி உருவச்சிலையை யார் வடிப்பது எனவும் தெரியாது. அது எந்த வகையில் இருக்க வேண்டுமெனவும் தெரியாது.
சென்னைக்கு வந்து, இந்த கிராமம் எங்கே எனக் கண்டுபிடித்து, அங்கே வந்தபோது, இந்த நிலத்தில் ஒரு ஆலயம் கட்டவேண்டுமென்னும் எண்ணத்துடன் அங்கேயே குடியிருக்கும் ரமனணரை அவர் சந்தித்தார். சரியான ஒரு ஸாயி சிலை கிடைக்க வேண்டுமென ரமணர் காத்திருந்தார்.

மீண்டும் சென்னை திரும்பும்வழியில், காஞ்சீபுரம் சென்று, அங்கிருக்கும் கங்கர மடத்தில் காஞ்சிப் பெரியவரை தரிசனம் செய்து செல்லலாம் எனச் சென்றபோது, ஸ்ரீ பரமாச்சார்யாளின் இரண்டரை அடி உருவச்சிலை ஒன்றை அங்கே கண்டனர். அதன் அமைப்பு சற்று வித்தியாசமாக இருக்க, அதனால் கவரப்பட்டு, அதே போன்ற உருவச்சிலையை ஸாயிக்கு வடிக்க முடிவெடுத்தனர்.சென்னையில் இருக்கும் டி.பி.ஆர். கணேஷ் என்பவரின் விலாசம் கிடைக்க, அவரது கைவண்ணத்தில், ஸாயி அருளால் ஆறரை அடி உயர் ஃபைபர் க்ளாஸ் ஸாயி உருவச்சிலை வடிவமைக்கப்பட்டது. இந்த விவரங்களை ரமணருக்கு திருமதி. சூர்யா தெரிவிக்க, 2006-ல் கோகுலாஷ்டமி நன்னாளில்சிலை அவரிடம் அளிக்கப்பட்டது. ஸாயியின் கருணா லீலையை இருவரும் எண்ணி வியந்தனர்.

திரு. கணேஷ் அவர்களைப் பற்றிய மேல்விவரம் வேண்டுவோர் ஹிந்து நாளிதழில் வெளியான இந்த சுட்டியில் அறியலாம். 

பாபா சிலையின் விசேஷம்

இதுதான் திரு கணேஷ் வடித்த சிலை.
ஸ்ரீ ஆனந்த ஸாயி தியான மண்டபத்தில் வைக்கப்படப்போகும் இந்த சிலை மிகவும் அபூர்வமானது.
ஆசியாவிலோ, அல்லது உலகில் வேறெங்குமோ காணப்படாத 'ஃபைபர் க்ளாஸ்' என்னும் வடிவமைப்பில் இது செய்யப்பட்டுள்ளது. மனித உடலில் ஓடும் நரம்புகளைப் போலவே இதிலும் காணலாம். தனது வீட்டு வாசலில் [போர்ட்டிகோவில்] இந்தச் சிலையை தற்போது வைத்து, ஆலய கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருக்கிறார். ஸ்ரீ ஆனந்த ஸாயி தியான மண்டபம் என இதற்குப் பெயரிட்டு, திரு லியோ முத்து அவர்கள் அளித்த நிலத்தில் மிகப் பெரிய ஆலயம் நிறுவ முனைந்திருக்கிறார்.


ரமணரின் வாழ்வில் ஸாயி நிகழ்த்திய அற்புதம்:

பல அதிசயங்கள் அவரது வாழ்க்கையில் ஸ்ரீ ஸாயி நிகழ்த்தியிருந்தாலும், ஒரு சிலவற்றை இங்கே அவர் சொல்கிறார்.

தியான மண்டபம் கட்டும்போது, ஒரு சிறு பிரச்சினை எழுந்தது. வடதிசை பகுதியை நோக்கிய மேற்கூரையில் [படம் காண்க] ஒரு சிறிய ஸாயி சிலையைக் காணலாம். கொடி அங்கே நாட்டப்படவிருந்தது. அதனருகில் 'ஓம்' என்னும் வடிவில் ஒரு பீடம் அமைக்க ரமனர் எண்ணியிருந்தார். அதற்காக ஒரு சிறு பகுதியை அங்கே மூடாமல் விட்டிருந்தனர். இந்தப் பணியைச் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டவர், அதைச் செய்யாமல் காலம் தாழ்த்தவே, திடீரென மழை பெய்தால், உள்ளிருக்கும் சிலை ஈரமாகுமே என சற்று பதட்டம் ஏற்பட்டது.. எனவே வேலையைச் சீக்கிரமாக முடிக்கும்படி பொறியாளரை இவர் அவசரப்படுத்தினார். ஏன் இப்படி தாமதமாகிறது எனவும் தெரியாமல், இதை எவ்வாறு கையாள்வது எனவும் தெரியாமல் ரமணர் ஸாயியை வேண்டினார்.

பாபா செயல்பாட்டினை பாபாவே அறிவார். பாபா தனக்கென வேறொரு திட்டம் வைத்திருந்தார். ரமணரின் கனவில் அவர் வந்து, 'தாமரை வடிவிலான அன்னையின் பீடம் இங்கே அமைக்கப்படவேண்டும்' என அவர் சொல்ல, அதன்படியே வேலைகள் துரிதமாக நடந்தேறின. தாமரை வடிவ பீடமும் அழகாக அங்கே வந்தமைந்தது. கூரையும் சரியாக மூடப்பட்டது.


மற்றொரு ஸாயி லீலை

ஒதுக்குப்புறமான இடத்தில் இந்த ஆலயம் அமைந்திருந்ததால், கட்டுமானச் செலவுக்கான பணப்புழக்கம் சரிவர அமையாமல், ஸாயியின் உதவியை ரமணர் நாடினார். அவரது கனவில் ஸாயி வந்து, இது வளமற்ற பூமி என்பதால், இங்கு பயிர் விளையும் சாதியக்கூறு கிடையாது எனவும், அதற்காக ஸ்வர்ணாகர்ஷன பைரவர் சிலையை நிறுவினால், அதன் மூலம் இந்த நிலம் வளம் பெறும் என ஆசியளித்தார். தானே 'ஸ்வர்ண' வடிவில் இந்த ஆளயத்தில் வருவதாகவும் வாக்களித்தார். [படம் காண்க]

சில நாட்களுக்கு முன் ஒரு ஆமை ஆலயத்தின் முன்னே வந்து தன்னைக் காட்ட, த்வாரகாமாயியில் இருப்பது போலவே, இங்கும் கூரம் அவதாரமாகிய ஆமை சிலையை நிறுவவும் எண்ணம் கொண்டார்.

வடக்கு, தெற்கு திசைகளைப் பார்த்த்படி ஸாயி நின்றுகொண்டு, தன்னைக் காண வருமாறு தன் அடியார்களை அழைப்பதுபோன்ற நிலையில் இந்த ஆலயம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

மனிஷாஜி, இங்கே சொல்லப்பட்டிருப்பவை யாவும் திரு. ரமணர் நேரடியாக என்னிடம் சென்ற ஆண்டு கூறியவை. என் நினைவிலிருந்து எழுதுவதால், ஒரு சில விஷயங்களை என் தாய் மூலம் 2 நாட்களுக்கு முன், அவரை சந்தித்து உறுதிப்படுத்திக்கொண்ட பின்னரே இங்கே அளிக்கிறேன். என் ஸாயி மூலம் இவற்றை இங்கே த‌ருகிறேன்.

இவ்வளவு சிரத்தையுடன் இந்த விவரங்களை இங்கே அளித்த ஆஷலதாவிற்கும், அவரது தாயாருக்கும் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெய் ஸாயி ராம்.

1. பூந்தண்டலம் ஸாயி மந்திர் 
கால நேரம்
காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை. 
கட்டுமான வேலைகள் இன்னமும் நடந்துகொண்டிருப்பதால், யாராவது ஒரு அடியார் அங்கே எப்போதும் இருப்பார். இல்லாவிட்டாலும், திரு. ரமணரின் இல்லம் 5 தப்படிகள் அருகிலேயே இருப்பதால், உடனே வந்து ஆலயத்தைத் திறந்து விடுவர்.

2. ஆரத்தி நேரம் 

ஷீர்டி மந்திர் நேரப்படியே.
காகட் - காலை 5 மணி
மத்யான - நண்பகல் 12 மணி
தூப் - அந்திப் பொழுது
ஷேஜ் - இரவு 10 மணி

3. பண்டிகை தினம்

ஸாயி புண்யதிதி
குரு பூர்ணிமா
ஸ்ரீ ராம நவமி
ஆலய ஆண்டுவிழா ஏப்ரல் 20

[சித்ரா பவுர்ணமி தினத்தை ஏப்ரல் 20க்குப் பதிலாகக் கொண்டாட திட்டம். ஏனெனில், இது ஸாயிக்கும், ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கும் உகந்த நாள். ஸாயி உருவச்சிலை ஆலயம் வந்த நாள் ஜனவரி 26 பிரதிஷ்டை தினம்]

4. நிர்வாகக் குழு:

ஷீர்டி ஸ்ரீ ஸாயி சிரஞ்சீவி நிறுவனம்.
இது ஒரு குழுவாகச் செயல்பட்டு வருகிறது. மேலும் சிலரை இதில் இணைக்க திட்டம் உண்டு.

5. அன்னதானம் 

எல்லா பண்டிகை தினங்களிலும் அன்னதானம் உண்டு. ஏனைய நாட்களில் இருக்கும் பிரசாதம் அனைவருக்குமாகப் பங்கலிக்கபடும். ஆலயத் தேவைக்கேற்ப இதை விரிவுபடுத்தும் எண்ணம் இருக்கிறது.

6. எதிர்கால 'சமூக நலத்' திட்டங்கள்:

35 ஸெண்ட் நிலத்தில் கட்டவே சட்ட அனுமதி இருக்கிறது. ஆனால், 70 ஸெண்ட் நிலம் கைவசம் இருப்பதால், 'துவாரகாமாயி முதியோர் இல்லம்' மற்றும் வேறு சில திட்டங்கள் துவங்க எண்ணம்.

நிறுவன இயக்குநர்

என்.வி. ரமணன்
தொடர்பு கொள்ள வேண்டிய ஆலய முகவரி :
எண் 4
11, ஸாயிபாபா நகர்,
பூந்தண்டலம்,
நந்தம்பாக்கம் போஸ்ட்,
குன்றத்தூர் [வழி],
சென்னை 600069
தமிழ்நாடு
இந்தியா
தொலைபேசி:
044-27178156 - 65468816
அலைபேசி
9840219388


வரைபடம்

தாம்பரத்திலிருந்து கிஷ்கிந்தா வழியாக 12 கி.மீ
பாண்ட்ஸ், பல்லாவரத்திலிருந்து திருநீர்மலை & பழந்தண்டலம் வழியே 12 கி.மீ.
குன்றத்தூரிலிருந்து நந்தம்பாக்கம் வழியே 10 கி.மீ.
ஸ்ரீபெரும்புதூரிலிருந்து, 12 கி.மீ. ஸ்ரீ ஸாயிராம் பொறியியல் கல்லூரி பின்பக்கம்.

மாற்றுவழி

குன்றத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோ மூலம் - பயண நேரம் 30-45 நிமிடங்கள். [மாதா பொறியியல் கல்லூரி வழியே]. nஆலயத்தின் அருகிலேயே பேருந்து நிறுத்தம் அமைய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. செயலாக்க காத்திருக்கிறோம்!


ஆலய இணையதளம்
 

Loading
Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.