Wednesday, June 23, 2010

I will give you darshan the way YOU want it-Experience By Meena.

நீ விரும்பியபடி உனக்கு தரிசனம் தருவேன்.

அன்பானவர்களே
சீரடிக்குப் போகின்றவர்கள் பாபாவை அருகில் சென்று தரிசனம் செய்ய வேண்டும் என்றே நினைப்பார்கள். ஆனால் அனைவருக்கும் அந்த பாக்கியம் கிடைப்பது இல்லை. ஆலயத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதினால் அங்கு நின்று இருந்தபடி நமக்கு தேவையான அளவு தரிசிக்க முடிவது இல்லை. நாம் எங்கு நின்று கொண்டு இருந்தாலும் பாபா நம்மை கவனித்துக் கொண்டேதான் இருப்பார். அவரிடம் மிகவும் அதிகமான பக்தி கொண்டவர்களுக்கு மட்டுமே அவரை அருகில் இருந்து தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்கும். இதோ மீனாவின் ஒரு அனுபவத்தைப் படியுங்கள்.
மனிஷா
மீனாவின் அனுபவம்
நான் சீரடிக்கு 2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்றேன். அதற்கு முன் என்னுடைய மாமியாரும் கணவரும்தான் சீரடிக்கு செல்ல இருந்தார்கள். எனக்கு ஜலதோஷம், இருமல் என உடன் நலமில்லை என்பதினால் நான் செல்ல விரும்பவில்லை. மேலும் எனக்கு எட்டு மாத கை குழந்தை வேறு இருந்தது. ஆனால் கணவரும் மாமியாரும் என்னை வற்புறுத்தி அழைத்துச் சென்றனர். வேறு வழி இன்றி நானும் சென்றேன். நாங்கள் வியாழன் கிழமை சீரடிக்குச் சென்றோம். காக்கட ஆரத்திக்குச் செல்ல வரிசையில் போய் நின்றோம். பலர் ஏற்கனவே அங்கு இருந்தார்கள். நீண்ட வரிசை அது. சுமார் ஒன்றரை மணி நேரம் நின்றப் பின் உள்ளே செல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் எங்களுடன் நின்று இருந்தவர்கள் உள்ளே விட்ட உடன் ஓடிச் சென்று முதல் இடங்களை பிடித்துக் கொண்டு விட்டனர். என்னிடம் குழந்தை இருந்தது என்பதினால் என்னால் அவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு ஓட முடியவில்லை. வெகு தூரத்தில் நின்றுதான் தரிசிக்க முடிந்தது. நான் பாபாவை அருகில் இருந்து பார்க்க ஆசைப்பட்டும், உடல் நலமின்மையுடன் வந்தும் அவரை அருகில் சென்று தரிசிக்க முடியவில்லையே என்ற வருத்தம் ஏற்பட்டது.

மறுநாள் விடியற்காலை என் மாமியார் என்னை எழுப்பினாள். ஆனால் என் மனதில் இருந்த கோவத்தினால் நான் செல்ல மறுத்தேன் . ஆனால் என் மாமியாரோ தனக்கு தனியாகச் செல்ல பயமாக உள்ளது என்று கூறி என்னை வற்புறுத்தி காகாட ஆரத்திக்கு அழைத்துச் சென்றாள். அன்று விடியற் காலைதான் பாபா என் கனவில் வந்து ''என் மீது நீ கோபமாக இருக்கின்றாய். இன்று நீ வந்தால் என்னை நிம்மதியாக அருகில் இருந்து தரிசிக்கலாம்'' என்றார்.
நாங்கள் ஆரத்திக்குச் சென்றோம். நல்ல தரிசனம். பாபாவை பக்கத்தில் இருந்து நீண்ட நேரம் தரிசிக்க முடிந்தது. என் கனவில் வந்து கூறியபடி அவர் எனக்கு அருள் புரிந்து விட்டார் .
(Translated into Tamil by Santhipriya )

Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.