Shirdi Sai Baba's Magical Chillum.
மகிமை பெற்ற பாபாவின் புகை குழாய் ( சில்லும்)
பாபா இங்கு சென்றாலும் அவருடன் சிலும்மும் பயணித்தது. அது அவருடைய ஒரு அங்கம். அதனால் குயவனும் பிழைத்து வந்தான், பாபாவின் கரங்கள் பட்ட மண்ணும்,புகை குழாயும் மகிமை பெற்றன.
பாபாவால் அனுக்ராகிக்கப்பட்ட பெண்மணி சாந்தி பாய் படேல் என்பவர். அவருக்கு பாபா தான் புகையை இழுத்த சிலுமை முதலில் தருவார். அவ்வளவு அன்பு. அவளுடன் பாபா சென்று தங்கி உள்ளார். பாபாவை சீரடிக்கு அழைத்து வந்த பெருமை அவரையே சாரும்.
அதற்குப் பின்னர் அவருக்கு ஆஸ்துமா நோயும் , இருமாலும் மறைந்தே போயிற்று. அந்த சிலும்முக்கு அத்தனை சக்தி இருந்துள்ளது. ஆனால் பாபா மகா சமாதி அடைந்த நாளன்று மட்டும் அவருக்கு அந்த ஆஸ்துமாவும், கடுமையான இருமலும் இருந்தது. மறு நாளைக்குப் பிறகு அதன் சுவடே தெரியவில்லை.
அமராவதியில் கணேஷ் கார்பாண்டே என்பவர் பெயர் பெற்ற வக்கீல். அவர் பர்மாவில் சிறை தண்டனை பெற்று இருந்த லோகமான்ய திலகரின் வக்கீல். பாபாவின் தீவீர பக்தர். அவர் மீது தேச துரோக குற்றச்சாட்டை போட்டு கைது செய்ய முனைந்து இருந்த பிரிட்டிஷ் அரசின் பார்வையில் இருந்து மறைத்து வைக்க அவரை பாபா சீரடியிலேயே வைத்து இருந்தார்.
அதனால் கணேஷ் கார்பாண்டேயின் அரசியல் மற்றும் வக்கீல் தொழில் நலிவடைந்தது. ஆனால் அவர் ஆன்மீகத்தில் சிறந்து விளங்கியவர். ஆரத்தி நேரத்தில் பாபா அவரை செய்கையால் தம் அருகில் அழைத்து சில்லுமை புகைக்கக் கொடுப்பார். மற்ற நேரத்தில் அது அவரது மனதை கட்டுப் படுத்தும். 22 .01 .1912 அன்று கணேஷ் கார்பாண்டே கூறினார் ' வழிபாடு செய்து கொண்டு இருந்த போது பாபா இரண்டு மலர்களை தன்னுடைய மூக்கு துவாரத்தில் வைத்துக் கொண்டு, இரண்டை தனது காதில் சொருகிக் கொண்டார். அதை பார்த்த எனக்கும் அதே போல் செய்யுமாறு கூறிய செய்கை எனப் புரிந்து கொண்டேன். அதன் பின் அவர் என்னை அழைத்து எனக்கு சில்லுமை புகைக்கக் கொடுத்தத்தின் மூலம் அதை உறுதி செய்தார். '
சாயி சகுநோபாசன் என்ற ஆரத்தி புத்தகத்தை எழுதிய கிருஷ்ணாஜி பீஷ்மா என்பவருக்கு பிராமண பக்தர்களும் பாபா புகை பிடித்த சிலுமை எடுத்து புகை பிடித்தது அருவருப்பாக இருந்தது. ஆனால் தான் அதை செய்ய மாட்டேன் என்ற தீர்மானத்துடன் இருந்தார். ஒரு நாள் பாபா அவருக்கு ஒரு கதையைக் கூறினார். அது கிருஷ்ணாஜி பீஷ்மாவுக்கு முதல் நாள் கனவில் வந்த கதை. அப்போது பாபா பேசிக்கொண்டே அவரிடம் தன்னுடைய சில்லுமைத் தர அதை வாங்கி புகையை இழுத்தவர் பேரானந்த ஆன்மீக நிலைக்கு சென்று விட்டார். அதன் ஒய்ன் அவரும் தீவீரமானபக்தராகிவிட்டார்.
போகாஜி ஷிண்டே ஏன்பவரே துவாரகாமைய்க்கு சேவை செய்ய முதலில் வருபவர். அவர் பாபாவுக்கு தீப் புண் காயம் ஏற்பட்டபோது பாண்டேஜ் போட்டு மருந்தும் போடுவார். அப்போது பாபா அவரிடம் தான் புகைத்த சில்லுமைத் தருவார். அவரும் அதை வாங்கிக் கொள்வார்.
எப்போதும் சாவடியில் வியாழர் கிழமைகளிலும் பண்டிகை தினத்திலும் சில்லுமை தருகிறார்கள். அத்கர்ஸ் ஆரத்தி மற்றும் சௌக்யாதார ஜீவா போன்ற பூஜைகளில் சில்லுமும் பாபாவுக்கு தரப்பட்டு ஆராதிக்கப் படுகின்றார். அதை தரும் பாக்கியம் பெற்றவர்கள் தத்யா வம்சாவளியினர் ஆவர்கள்.

Loading
0 comments:
Post a Comment