Wednesday, July 21, 2010

Devotee In Contact With Baba - Rege- Part- 2

She will take you on her back.
அவள் உன்னை தன் முதுகில் ஏற்றிக் கொள்வாள்

நாம் சாயி சரித்திரம் மற்றும் பல புத்தகங்கள், கட்டுரைகள் மூலம் சாயி பாபா தன்னுடைய நெருங்கிய பக்தர்களுக்கு அருளிய அற்புதங்களைப் படித்துள்ளோம். அவற்றைப் படிக்கப் படிக்க கடலில் கிடைக்கும் முத்து போல இன்பம் கிடைக்கும். அவர்களில் ஒருவரான ரிகே, ராதாகிருஷ்ண ஆயி மற்றும் பாபாவுக்கு இடையே நிலவிய உறவு அற்புதமானது. அவர்கள் பாபாவுடன் இருந்தபோது நடந்த இன்னொரு சம்பவம்இது.
ராதாகிருஷ்ண ஆயி ஐந்து அடி உயரமானவர். அசாத்திய பலம் மிக்கவர். தான் ஒருவராகவே பல குடங்கள் தண்ணீரை பல தூரத்தில் இருந்த இடத்தில் இருந்து தன் கைகளில் தூக்கிக் கொண்டு வருவார்.
ஒருமுறை அவள் ரிகே மார்பில் ஒரு அடி அடித்துவிட்டு, நீ ஒரு சம்சாரி, இந்த இடம் காலியாக உள்ளதே என்றாள். மேலும் அவரை விட தான் பலசாலி என்றும் கூறுவாள். ஆகவே இருவருக்கும் இடையே ஒரு போட்டியை வைத்துக் கொண்டு சோதனை செய்யாலாம் என முடிவு ஆயிற்று. அவள் வீட்டுக்கு அருகில் இருந்த சாலை நீளமானது. அதிகம் வண்டிகள் போகாத இடம் அது. அந்த இடத்தில் ஒருவர் தோளின் மீது மற்றவர் அமர்ந்து கொண்டு ஓடவேண்டும், அப்போதுதான் யாருக்கு அதிக சக்தி உள்ளது எனப் பார்க்க முடியும் எனக் கூறி போட்டியை வைத்தாள்.
முதலில் ரிகே முதுகின் மீது அவள் அமர்ந்து கொள்ள அவர் இரண்டு பர்லாங் ஓடியதும் அவரை நிறுத்தினாள். அதன் பின் அவரை தன் முதுகின் மீது வைத்துக் கொண்டு அவள் ஓடினாள். இப்போது என் சக்தி எப்படி எனக் கேட்க அவர் அதில் சந்தேகமே இல்லை என்றார். இரண்டு பர்லாங்கிற்கு மேல் ஓடியதும் அவரை முதுகில் இருந்து இறங்கச் சொன்னாள். அவரோ அதற்கு அவள் முதுகில் அமர்ந்து இருப்பது சுகமாக உள்ளது எனக் கூறி இறங்க மறுத்துவிட அவரைத் தூக்கி கீழே போட்டுவிடுவேன் என அவள் பயமுறுத்தினாள். விவாத முடிவில் கடைசியாக ரிகே தன்னை ஆன்மீக பயணத்தில் அழைத்துச் செல்வதாக அவள் உறுதி மொழி தந்தால் முதுகை விட்டு இறங்குவதாக கூறினார். அப்படி நடக்க வேண்டும் என முதலிலேயே பாபாவினால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்திருக்க வேண்டும். அதன் பின் வீடு திரும்பியவர்களிடம் நடந்த அனைத்தையும் கேட்டு அறிந்து கொண்ட பாபா கேட்டார்,' ஆகா உன்னை அவள் தன் முதுகில் ஏற்றிச் செல்லப் போகிறாளா?' உடனே ரிகேயை அன்றில் இருந்து யோகா செய்வதை விட்டு விடுமாறு ஆணையிட்டார். ' பக்தி செய் அது போதும். மனம், இதயம் மற்றும் கைகள் செய்வது தூய்மையாக இருக்க வேண்டும் , அவ்வளவே' என்றார்.
ராதாகிருஷ்ண ஆயிக்கு விளம்பரம் பிடிக்காது. ஒருமுறை மும்பாயியை சேர்ந்த ஒருவர் அவளுக்குத் தெரியாமல் புகைப்படம் எடுத்து விட்டு டோங்காவில் ஏறி செல்ல முயன்ற பொது ஒரு மைல் தூரம்வரை அவரை துரத்திச் சென்று அவருடைய காமெராவை பிடுங்கி கீழே போட்டு உடைத்து விட்டாளாம். அப்போது அவருடன் இருந்த தத்ய கோட்டி படேல் என்பவர் நடந்த விவரத்தை ரிகேயிடம் வந்து கூறினார்.
(Translated into Tamil by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.