Tuesday, June 28, 2011

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 13.

அன்பானவர்களே
 அனைவருக்கும் பாபாவின் தின வாழ்த்துக்கள். பாபாவின் லீலைகளையும், அவர் பக்தர்கள் மீது காட்டும் அன்பையும், கருணையும்  படிக்கப் படிக்க நமக்கு  ஆத்ம  ஞானம் மட்டும் அதிகரிக்கவில்லை, அவர் மீதான நம்பிக்கையே அதிகரிக்கின்றது. நமக்கு உள்ளேயே மெல்ல மெல்ல மனிதாபிமானம் அதிகரிக்கின்றது, பாபாவுடன் நெருக்கமும் அதிகரிக்கின்றது.   நமக்கு நல்ல குணங்கள் தானாக வளர்கின்றதைப் பார்கின்றோம். நாம் பாபாவின் பாதையில் சென்று நம்மை மேலும் வளப்படுத்திக் கொள்வோம்.

சில மாதங்களாக என்னுடைய இணையதளத்தில் சில கோளாறுகள் ஏற்பட்டு இருந்தன. தற்போது அது களையப்பட்டு விட்டதினால் இனி சாயியின் பக்தர்கள் தமது அனுபவங்களையும், எண்ணங்களையும் தடை இன்றி பகிர்ந்து கொள்ளலாம்.
இனி சில பக்தர்களின் அனுபவங்களைப் படிக்கலாம்
மனிஷா

பாபாவின் அருளினால் குணமானேன்


என்னுடைய பெயர் கிரண் ஜ்யோத் என்பது. எனக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. நான் 2009 ஆம்  ஆண்டு தொண்டை வியாதியினால் அவதிப்பட்டு படுத்தப் படுக்கையில் விழுந்தேன். எந்த மருத்துவமும் என்னை குணப்படுத்தவில்லை. தொண்டையில் எரிச்சல் அதிகமாகி சாப்பிட முடியாமல் அவதிப் பட்டேன். பலவிதமான சோதனைகளை மேற்கொண்டும் சரியான காரணத்தை அறிந்து கொள்ள முடியவில்லை.
ஒரு நாள் இரவு என்னுடைய கணவர் சாயி பாபாவின் ஒரு  பழைய படத்தைக் கொண்டு வந்து எனக்குத் தந்தார். அதை நான் என்னுடைய தலையாணி அடியில் வைத்துக் கொண்டு சாயி ராம் என்ற மந்திரத்தை ஜெபித்துக் கொண்டு இருந்தேன். ஓம் சாயி நமோ நமஹா, ஸ்ரீ சாயி நமோ நமஹா,  ஜெய     ஸ்ரீ சாயி நமோ நமஹா, சத்குரு   சாயி நமோ நமஹா என்பதே அந்த தாரக மந்திரம்.

அன்று இரவு முழுவதும் நான் அழுது கொண்டே இருந்தேன்.   அடுத்த நாள் என்னுடைய கணவர் வந்து எனக்காக ஒருவர் பிராத்தனை செய்ய உள்ளார் என்று கூறினார்.  அது நடக்க நான் மருத்துவரை மாற்றினேன்.

மருத்துவரிடம் சென்றபோது அவர் அறையில்  சாயி பாபாவின் பெரிய படம் இருந்தது. அதைக் காண எனக்கு ஆறுதலாக இருந்தது . மருத்துவர் நீங்கள் கவலைப் படாதீர்கள் என எனக்கு ஆறுதல் கூறிய பின் மீண்டும் அனைத்து சோதனைகளையும் செய்தார். நானோ பாபா அங்கு இருக்கின்றார் என்ற நம்பிக்கையில் நான் கவலைப் படவில்லை என்றேன்.

அனைத்து சோதனை முடிவுகளும் வந்தது எனக்கு கலீரலில் சிறிய கோளாறு உள்ளது என்று கூறி அதற்க்கு மருத்துவம் செய்தார்கள். நான் மெல்ல மெல்ல நலம் அடைந்தேன். பாபாதான் என்னைக் காப்பாற்றி உள்ளார். இரண்டு மாத விடுமுறை எடுத்துக் கொண்டு அலுவலகம் சென்றேன். வெளியில் வரும்போது மயக்கமாக இருந்தது. ஒரு ஆட்டோவில் செல்லலாம் என நினைத்துக் காத்து இருந்தேன். அப்போது ஒரு சாயிபாபா படம் ஒட்டப்பட்ட ஆட்டோ வந்தது. பாபாவே எனக்கு துணையாக வந்து உள்ளார் என எண்ணிக் கொண்டு  அதில் ஏறிக் கொண்டு  வீடு சென்றேன்.

ஒரு நாள் இரவு எனக்கு பாபாவின் கனவு வந்தது.  உடல் நலமின்றி நான் படுத்து இருந்த சமயத்தில் முதல் முறை என் கணவர் சாயியின் படத்தை எடுத்து வந்து எனக்கு தந்தபோது நான் குணம் அடைந்து விட்டால் உன்னை சீரடியில் வந்து தரிசிக்கிறேன் என வேண்டிக் கொண்டது நினைவுக்கு வந்தது. ஆகவே 2010 ஆம் ஆண்டு சீரடிக்குச் சென்றேன். பாபாவின் நல்ல தரிசனம் கிடைத்தது. 
இப்போதெல்லாம் சாயி என்னுடைய இதயத்தில் வாழ்கிறார். என் மேஜையில் என்னை பார்த்தபடி அமர்ந்து உள்ளார். என் வீட்டில் என்னைப் பார்த்தபடி சுவற்றில் நின்று கொண்டு உள்ளார். வீட்டில் உள்ள நாங்கள் அனைவரும் இப்படி நினைக்கின்றோம், 'சாயி எதை செய்தாலும் அதற்க்கு ஒரு காரணம் இருக்கும்'.   சாயி சரித்திரத்தை  ஒரு முறை படித்தேன். மீண்டும் படிக்க நினைத்து உள்ளேன். 
ஜெய் சாயி ராம்
------------------------------------
பாபா ஒரு தாயைப் போல எனக்கு உதவுகிறார்


பெயர் கூற விரும்பாத ஒரு பக்தர் எழுதியது இது.

1)  சாயி பாபா என்னுடைய வாழ்கையில் பல விதங்களில் வந்து காப்பாற்றி  வருகிறார் .  என்னுடைய நண்பர் ஒருவர் சாயி பாபாவின் தீவீரமான பக்தர். என்னுடைய பல நண்பர்களும் பாபாவின் பக்தர்கள். ஆனால் அப்போதெல்லாம் எனக்கு பாபாவிடம் ஈடுபாடு ஏற்படவில்லை.  சுமார் 10 வருடத்திற்கு முன்னால்  நான் என்னுடைய நண்பரின் வீட்டுக்கு  போய் இருந்தபோது அங்கு வைக்கப்பட்டு இருந்த பாபாவின் சிலை மீது  தவறுதலாக மோதி அதை உடைத்து விட்டேன். ஆனால் என் நண்பர் என்னிடம் கோபப்படவில்லை.  
2) 2006 ஆம் ஆண்டு நான் உடல் நலமின்றி இருந்தேன். அப்போது என் நண்பர் ஒருவர் வந்து பாபாவின் ஒரு படத்தை என் அருகில் இருந்த மேஜை மீது வைத்து விட்டு, 'நீ சரி ஆகி விடுவாய். பாபா உன்னைக் காப்பாற்றுவார்' என்று கூறி விட்டு சென்றார். ஆனாலும் என் மனதில் பாபாவிடம் ஈடுபாடு வரவில்லை. 
3) அடுத்த ஆண்டு என்னுடைய   திருமணம்  நிச்சயம் ஆயிற்று. மாப்பிள்ளை வீட்டினர் ஒரு மாதிரியானவர்களாக இருந்தார்கள் . என் வீட்டிலும் அவர்கள் வீட்டிலும் என்ன ஆயிற்று என எனக்குத் தெரியவில்லை. முடிவாக திருமணம் நல்ல முறையில் நடந்து நாங்கள் அமெரிக்காவுக்கு சென்றோம். எங்கள் திருமணத்தின் போது சீரடியில் இருந்து மஞ்சள் நிற சால்வையை கொண்டு வந்தார்கள். திருமணம் முடியும் வரை அது எங்களுடனேயே இருந்தது. ஆனாலும் நான் அதனால் கவரப்படவில்லை. என்னுடைய கணவரும் அவர் வீட்டினரும்  மோசமாக நடந்து கொள்பவர் என்பது பின்னர் தெரித்தது. என் கணவர் என்னை  சாயி சரித்திரத்தை  படிக்குமாறு கூறினார். விரைவாக என் மாமியாரும் அங்கு வந்தாள். அவள் என் கணவர் இல்லாத நேரத்தில் என்னைக் கொடுமைபடுத்துவார். அந்த அவஸ்தையை என்னால் தாங்க முடியவில்லை. நான் மனம் வெறுத்துப் போய் சாயி சரித்திரத்தை படிக்கத் துவங்கினேன். அதுவே என் வாழ்கையில் திருப்பு முனையாக அமைந்தது. பாபாவும் என் வாழ்க்கையில் வந்தார்.
4) இரண்டு வருடங்கள் கழிந்தது. எங்களுக்கு குழந்தைகள் இல்லை. அவருக்கு இருந்த உடல்  கோளாரினால் நான் கரு தரிக்க முடியாமல்  இருந்தது.  அவர் வீட்டில் அவர்கள் அந்த விஷயத்தை குறித்து  மறைத்து வைத்து இருந்தார்கள். அந்த விஷயத்தை  யாரிடமும் கூறக் கூடாது என என் கணவர் என்னை மிரட்டி வைத்து இருந்தார். ஒரு நாள் அவருடன் ஏற்பட்ட தகராறில் அவர் என்னை அடிக்க சுவரில் சென்று மோதிக் கொண்டு விழுந்த எனக்கு தலையில்  காயம் ஏற்பட்டு மருத்துவ மனையில் சேர்ந்தேன். என் தோழி ஒருவள் தினமும் வந்து எனக்கு பாபாவின் உடியை  தந்தாள். பாபாவிடம் நான் என்னும் நெருக்கம் ஆனேன்.
5) நான் இந்தியாவுக்கு சென்றேன்.  சீரடிக்கும் விஜயம் செய்தேன். தரிசனம் முடிந்து கூடத்தில் அமர்ந்து இருந்தோம். அப்போது  பாபா என்னையே பார்த்துக் கொண்டு இருப்பது போல உணர்ந்தேன்.  நான் பாபாவிடம் மனம் உருகிக் கேட்டேன் ''பாபா எனக்கு நீ எப்போது உதவுவாய். என் தலையில் பட்டுள்ள  காயத்தை எப்போது குணப்படுத்துவாய் ? எனக்கு ஏன் திருமணம் செய்து வைத்தாய்? எனக்கும் குழந்தைகள் வேண்டும் என்றாலும் என்னுடைய கணவரின் உடல்  கோளாறினால் அது கிடைக்கவில்லையே''. அப்போதுதான் எனக்கு திடீரென   நினைவுக்கு வந்தது. சுமார் ஒன்பது வருடங்களுக்கு முன்பு பாபாவின் சிலையை உடைத்த விஷயம் பற்றி.   என் தலையில் அடிபட்டு மிகவும் மோசமாக இருந்து இருக்க வேண்டிய என்னை காப்பாற்ற  தன் தலையில் அடிபட்டுக் கொண்டு அன்றே அதன் வேகத்தை  குறைத்து  உள்ளார் என்பதை கூறுவது போல அவர் முகம் இருந்தது.
6)  இரண்டு மாதங்களுக்குப் பிறகு நான் மீண்டும் அமெரிக்காவிற்குச்  சென்றேன். என் கணவரை காணவில்லை. நான் எங்கு செல்வது. கையிலோ பணமும் இல்லை. துணிமணிகளும்  இல்லை.  நல்ல வேளையாக என்னுடைய நண்பர் என்னை அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்று 15 நாட்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார். அவருடைய தாயார் வீட்டில் இருந்தாள். அவர்கள் வீட்டில் பாபாவின் பெரிய படமும் இருந்தது. நான் வேலை தேடினேன்.  நல்ல வேலையாக நான் முன்னர் வேலை பார்த்து வந்த இடத்தில் ஒரு வருடத்திற்கு மீண்டும் வேலை தந்தார்கள். நான் வேறு வீடு பார்த்துக் கொண்டு அங்கு சென்றேன். 
7) அதற்கு இடையில் என் கணவர் எனக்கு விவாகரத்து கடிதம் அனுப்பினார். எனக்கு அந்த விஷயங்களில் உள்ள  சட்டங்கள் அதிகம் தெரியாது. எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. இதற்கு இடையில் எனக்கு ஆன மருத்துவ செலவிற்கான கட்டணம் $32k  இன்சுரன்ஸ் நிறுவகத்தில் இருந்து தள்ளுபடி ஆகிவிட்டதினால் நான் செலுத்த வேண்டும் என்று  கடிதம் வந்தது. நான் பாபாவிடம் அழுதேன். என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய் என்.  நான் என்னுடைய இன்சுரன்ஸ்  அலுவலகத்துக்கு சென்று மீண்டும் அது குறித்துக் கேட்டேன். அவர்கள்  என்னிடம் பேசிய பின் அதை சரி செய்து  அவர்களே அதைக் கட்டினார்கள். அது பாபாவின் அற்புதமே.
8) அடுத்து என்னுடைய விவாகரத்துக்கு எந்த வக்கீலைப் பார்ப்பது. என்னுடைய பட்டதாரி கல்லூரி  நண்பர் தான் ஒரு வக்கீல் மூலம் எனக்கு உதவினார். நல்ல வேளையாக அவர் கேட்ட பணத்தை தந்துவிட்டு வந்தேன். என்னுடைய வழக்கு விஜாரணையில் உள்ளது.
9) என் வேலையும் முடிவுக்கு வந்தது. என்ன செய்வது என யோசனை செய்தேன். அந்த கம்பனி என் சகோதரி இருந்த ஊருக்கு மாற்றல்  ஆகியது. நான் நிம்மதி அடைந்தேன்.  அவர்கள் எனக்கு மீண்டும் வேலை தருவார்களா எனக் கேட்டு  தருவார்கள் என விண்ணப்பம் செய்து உள்ளேன்.  என் உடல் நிலையம் நன்றாக இல்லை. மனக் கவலையினால் உடல் நிலை மோசம் ஆகியது. ஆனாலும் தற்காலிகமாக எதோ வேலையில் சேர்ந்து காலத்தை ஓட்டுகிறேன். பாபாவின் ஆலயம் நாங்கள் இருந்த இடத்தின் அருகிலேயே இருந்ததினால் எனக்கு மன நிம்மதி கிடைத்தது.
10)  நான் மேல் கொண்டு என்ன செய்வது எனப் புரியாமல் இருந்தபோது என்னுடைய தாயார் எனக்கு மூன்று கிரெடிட் கார்டுகளையும்  $3000 பணமும் அனுப்பி வைத்தார். என் கணவர் ஒரு நாள் வந்து அனைத்து சாமான்களையும் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார். ஆனால் சாயி சரித்திரத்தை மட்டும் விட்டுவிட்டுச் சென்றார்.  அதைப் படித்தே மன அமைதியுடன் இருக்கின்றேன்.
11)  முடிவாக பாபாவின் அருளினால்தான் என்னால்   மருத்துவ செலவுக்கான பணம் கட்ட முடிந்தது, என்னுடைய தாயாரிடம் இருந்து பணமும் கிரெடிட் கார்டும் வந்தது, என் தலைக்  காயமும் மெல்ல மெல்ல ஆறி வருகின்றது. எனக்கு புது வேலை கிடைக்க சாயியின் அருளை எதிர்பார்த்து நிற்கின்றேன். 
ஜெய்  சாயி ராம்
----------------------------------------------------

அன்பான இனிய  பாபா


சாயி ராம்
நான் முன்னர் கூட என்னுடைய அனுபவங்களை எழுதி உள்ளேன்.
நான் பல பிரச்சனைகளில் அகப்பட்டுக் கொண்டு இருந்தேன். நான் சரியான திசையில்தான் செல்கின்றேனா  என எனக்கே புரியாமல்  இருந்தது. ஆகவே பாபாவை எனக்கு வழி காட்டு என வேண்டிக் கொண்டே இருந்தேன்.  
ஒரு முறை சீரடிக்கு சென்றேன். ஆலயத்தில் நீண்ட வரிசை. பாபாவின் தரிசனம் கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்தது.  எனக்கு பாபாவின் தரிசனம் கிடைக்காவிடில் மீண்டும் எப்போது  வருவேன்  என்று தெரியாத  நிலை எனக்கு.  வரிசையில் நின்று கொண்டு இருந்த நான் பாபாவிடம் கண்ணீர்விட்டு வேண்டினேன்.  நான் நல்ல குணங்கள் உள்ளவன் அல்ல, உன்னிடம் உள்ள பல நல்ல பக்தர்களைப் போன்றவன் அல்ல நான். அது எனக்குத் தெரிகின்றது.  ஆனால் எனக்குள்ள பிரச்சனைகளை பார்க்கின்றாய் அல்லவா?. ஆகவே  எனக்கு நீ அருள் புரிய வேண்டும்.  உன் அருளுக்கு சான்றாக   எனக்கு ஒரு சிறிய இனிப்பு கிடைத்தால் உன் ஆலயத்தில் இருந்து மன நிறைவோடு செல்வேன் என வேண்டிக் கொண்டேன். 
நன் ஆலயத்தை விட்டு வெளியில் வந்தேன். ஒரு முன்பின் தெரியாதவர் என் அருகில் வந்தார். தன கையை திறந்து அதில் இருந்த இனிப்பில் சிறிது எனக்குத் தந்து விட்டு என்னை ஒரு கணம் முறைத்துப் பார்த்து விட்டுச் சென்றார். 
என்ன ஆயிற்று என்று எனக்குப் புரியவில்லை. சில நிமிடங்கள்தான். என் நிலைக்கு வந்தவன் அவரை தேடினேன். ஆனால் அவரைக் காணவில்லை.  எனக்கு  திடீரென நினைவுக்கு வந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னாள் என் கனவில் வந்தவர் அது போலவே இருந்தார். ஆமாம் பாபாதான் அவர் உருவில் வந்துள்ளார்.  நான் மகிழ்ச்சியால் கண்ணீர் விட்டேன். 
பாபா நீ தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும். அவர் திருநாமத்தை நாம் என்றும் கூறிக்கொண்டே இருப்போம்
ராதா

----------------------------------
சாயிபாபா எனக்கு பிடித்தவளை மணந்து கொள்ள வழி செய்தார்.


நான் என்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
Dear Manishaji,
பாபாதான் எனக்குப் பிடித்தப் பெண்ணுடன் எனக்கு  எனக்கு திருமணம் ஆக உதவி செய்தார்.  நான் சிறு  வயது  முதலேயே சாயிபாபாவின் பக்தன். நான் ஆப்ரிக்காவில் கடந்த 11 வருடமாக பணி புரிகின்றேன். நான் ஒரு முறை விடுமுறைக்காக இந்தியாவுக்கு சென்றேன். அங்கு ஒரு பெண்ணை சந்தித்தேன். நட்பாக இருந்தது காதலாகியது. அவளை மணக்க விரும்பினேன். ஆனால் இருவருக்கு பத்து வயது வித்யாசம். என் வயது 31, ஆனால் அவளுக்கோ 21 வயதே ஆகியது.  
ஆப்ரிக்காவிற்கு  திரும்பி வந்த நான் அதை ஏப்படி என் வீட்டில் கூறலாம் என யோசனை செய்தேன்.  ஆனால் என்னுடைய பெற்றோர்களை சம்மதிக்க வைத்து விட்டேன். அடுத்து பெண் வீட்டில் எப்படி கூறுவது. அவர்களோ முதலில் பையனை பார்க்க வேண்டும் என்றார்கள். எனக்கு தலை முடி இல்லை. அவர்கள் தலை முடியுடன் உள்ள பையனே வேண்டும் என்றார்கள். பேச்சு வார்த்தை தொடர்ந்து கொண்டே இருந்தது.  நான் சாயி விரதம்  இருந்தேன். அந்தப் பெண்ணின் வீட்டிலும் பிரச்சனை ஏற்பட்டது. அந்தப் பெண் என்னைத் தவிர வேறு யாரையும் மணக்க மாட்டேன் எனக் கூறி விட்டாள். முடிவாக எங்களுக்கு 18-11-2010 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அது வியாழன் கிழமை. நாங்கள் ஆப்ரிக்காவுக்கு திரும்பி வந்தோம். எப்போது என் மனைவி கர்பமாக உள்ளால். சாயிபாபாதான் எனக்கு என் திருமணத்தை நடத்தித் தந்து உள்ளார்.
வினாயக் 

என்னுடைய மனைவி எழுதியது கீழே உள்ளது.
சாயி ராம்
நான் முதலில் சாயியின் பக்தை அல்ல. என்னுடைய கணவர் சாயிபாபாவின் மகிமையை எனக்கு நிறையக் கூறுவார்.  அவருக்கு பல அனுபவங்கள் ஏற்பட்டு உள்ளன. சாயிபாபாவின் அருளினால் நாங்கள் மகிழ்ச்சியுடன் எங்கு இருக்கின்றோம்.  எனக்கு சாயி மீது அபார நம்பிக்கை வந்துள்ளது.
ஓம் சாயிராம்.

----------------
சாயிபாபா  வேலையில்  எனக்கு உதவினார்

முன்னர் ஒரு முறை என்னுடைய சகோதரியின்  உடல் நலமின்றி இருந்தபோது அவளுக்கு ஏற்பட்ட அனுபவத்தை   எழுதி இருந்தேன்.  இப்போது எனக்கு ஏற்பட்ட இரண்டு அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நான் ஒரு கணிப்பொறி அலுவலகத்தில் வேலை செய்கிறேன்.  அன்றைக்கு கொடுக்கும் வேலைகளை நாங்கள் அன்றைக்கே செய்து முடிக்க வேண்டும் என்பது அலுவலகத்தில் கொடுக்கப்பட்டு உள்ள கட்டளை . ஒரு நாள் எனக்கு கொடுக்கப்பட்ட வேலை முடியவே இல்லை. காரணம் அதை எப்படி செய்ய வேண்டுமோ அப்படி செய்ய முடியவில்லை. நான் பாபாவை வேண்டிக் கொண்டேன்  ''பாபா எனக்கு நீதான் உதவ வேண்டும்.என் வேலை சரியாக முடிந்துவிட்டால் அது பற்றி நான் இணையதளத்தில் எழுதுகிறேன்''. நம்புங்கள் , அடுத்த சில மணி நேரத்தில் வேலை முடிந்தது. இது மிகவும் சிறிய விஷயமாக தோன்றலாம். ஆனால் பாபாவின் கருணையை காட்டும் சம்பவம்  இது.
நான் B.டேக் படித்து முடித்தேன். இறுதி ஆண்டில் என்னுடன் படித்த பலருக்கும் வேலை கிடைத்து விட்டது. எனக்கு வேலை கிடைக்கவில்லை.  வீட்டில் தந்தையிடம் திட்டு வாங்கினேன். எப்படி மற்றவர்கள் முகத்தில் முழிப்பது ? மனதுக்குள் அழுதேன். பாபாவை வேண்டினேன். 
முடிவாக ஹைதிராபாத்தில் ஒரு தேர்வுக்கு சென்றேன். அங்கு 1000 பேர் தேர்வுக்கு வந்தார்கள். அதில் 30 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டார்கள். அதில் நானும் ஒருவன். பாபாதான் அந்த வேலையை எனக்கு வாங்கித் தந்து உள்ளார். முதல் மாத சம்பளம்  முழுவதையும் பாபாவின் ஒரு ஆலயத்துக்கு கொடுத்துவிட்டேன். அடுத்த நான்கே ஆண்டில் என்னுடைய சம்பளம் முதல் சம்பளத்தை விட ஐந்து மடங்கு உயர்ந்தது. பாபா மீண்டும் எனக்கு அவர் மகிமையக் காட்டினார். எனக்கு ஒரு பங்கு தந்தாள் உனக்கு அதைவிட பத்து பங்கு அதிகம் தருவேன் என பாபா கூறி உள்ளார் அல்லவா? அதனால்தான் முதல் மாத சம்பளத்தை பாபாவின் ஆலயத்துக்கு கொடுத்துவிட்ட எனக்கு என் முதல் சம்பளத்தை விட ஐந்து மடங்கு சம்பளம் அதிகமாக தந்து உள்ளார்.   பாபாவை நம்புவோம். அவர் நம்மை காப்பாற்றுவார்.
ஓம் சாயி, ஸ்ரீ சாயி, ஜெய் ஜெய் சாயி.
என் வீட்டு பூஜை அறையில் மாட்டி உள்ள புதிய  குருவார்  விரத படத்தை இணைத்து உள்ளேன்.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.