Sunday, March 7, 2010

Live Experiences of the Tarkhad Family With Sai Baba-Sai's Golden Test.

இதுவரை என்னுடைய தந்தைக்கு ஏற்பட்ட அனுபவங்களை விரும்பிப் படித்து இருப்பீர்கள் என நினைகின்றேன் . சாதாரணமாக எவருக்கும் சம்சார வாழ்க்கைக்குப் பின் ஆன்மீக வாழ்வில் ஈடுபாடு இருந்திருக்கும். என் தந்தைக்கோ அதற்கு நேர்மாறாக இருந்தது. ஒன்று மட்டும் நிச்சயம். சாயிபாபாவுடன் ஏற்பட்ட அனுபவத்தின் காரணமாக என் தந்தைக்கு எந்த நிலையையும் சமாளிக்கும் ஆற்றல் கிடைத்தது.

ஒவ்வொரு முறையும் என்னுடைய தந்தை சீரடிக்கு சென்ற போது அவருக்கு வினோதமான அனுபவங்கள் கிடைத்தன. ஒரு முறை அப்படி அவர் அங்கு சென்றிருந்த சமயம் இரவு பெரியதாகவும், காலை வேளை குறைவாகவும் இருந்தது. ஒருநாள் பாபா என்னுடைய தந்தையை தன்னுடன் வெளியில் வருமாறு அழைத்தார். அது பின் மாலை நேரம் .

இருட்டத் துவங்கிற்று. சாதாரணமாக அவர் துவாரகாமாயியை விட்டு அந்த நேரத்தில் வெளியே செல்ல மாட்டார். பாபா அழைத்ததினால் அவருடன் என்னுடைய தந்தையும் வெளியில் கிளம்ப, லெண்டி பாக் என்ற இடத்தைத் தாண்டி அருகில் இருந்த நதிக்கரைக்கு சென்றனர். நல்ல இரவு நேரம் அது. அங்கு சென்றதும் பாபா என்னுடைய தந்தையிடம் தான் அவருக்கு ஒரு விநோதத்தைக் காட்டப் போவதாகக் கூறினார். என் தந்தைக்கு மிகவும் மகிழ்ச்சி ஆகி விட்டது. நதிக்கரையில் இருவரும் அமர்ந்து இருந்தனர். ஒரு இடத்தில் அமர்ந்ததும் பாபா சிறிது மண்ணைத் தோண்டிவிட்டு, 'இந்த இடத்தைப் பார் எதாவது தெரிகின்றதா' என கேட்க, என் தந்தை 'ஒன்றும் தெரியவில்லை' என்றார் . மீண்டும் இன்னும் சிறிது மண்ணைத் தோண்டிய பின் , 'இப்போது பார்' எனக் கூற அப்போதும் ஒன்றும் தெரியவில்லை என என் தந்தை கூற, மீண்டும் சிறிது தோண்டிய பின் என் தந்தையின் தலையில் ஒரு அடி கொடுத்து 'இப்போது நன்றாகப் பார்' என பாபா கூற, அங்கு பார்த்த என் தந்தை வாயடைத்து நின்றார். பாபா தோண்டிய இடத்தில் தங்கக் கட்டிகள் மின்னின. 'பாபு இவை சாதாரண பொருள் அல்ல. அனைத்தும் தங்கக் கட்டிகள். உனக்கு எத்தனை வேண்டுமோ எடுத்துக் கொள்.' என பாபா கூற என் தந்தைக் கூறினார், 'பாபா எனக்கு உங்கள் அனுக்ராகத்தினால் வேண்டியது உள்ளது. வேறு எதுவும் வேண்டாம். உங்கள் ஆசி மட்டும் போதும்' .

பாபா மீண்டும் கூறினார், 'இதோ பார், இவை லட்சுமி தேவி தந்தது. வாழ்வில் ஒருமுறைதான் வரும். மீண்டும் மீண்டும் கிடைக்காது. நன்கு யோசனை செய்.' என்று கூறியும் என்னுடைய தந்தை தனக்கு அவை வேண்டாம் என திட்டவட்டமாகக் கூறிவிட்டார். பாபா தான் தோண்டிய இடத்தை மூடிய பின் இருவரும் திரும்பிவிட்டனர்.

நதிக்கு அந்த பக்கத்தில் இருந்த சீரடியை சேர்ந்த ஒருவன் அந்த காட்சியை தூரத்தில் இருந்து பார்த்தான். பாபா என்னுடைய தந்தைக்கு எதையோ காட்டிக்கொண்டு இருந்தது பொக்கிஷமாக இருக்கும் என சந்தேகித்து அவர்கள் அங்கிருந்து போனதும், அந்த இடத்திற்கு நாடு ராத்தரி சென்று பாபா தோண்டிய இடத்தை மீண்டும் தோண்டி அதற்குள் கைவிட்டுப் பார்க்க அவனை அங்கிருந்த கரும் தேள் பயங்கரமாகக் கொட்டி விட்டது. வலி தங்க முடியாமல் போனவன் துவாரகாமாயிக்கு ஓடிச் சென்று பாபாவின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். அவன் வழியை குணமாக்கிய பாபா அவனிடம் கூறினார், எவனுக்கு அந்த தங்கத்தைப் பெற அதிஷ்டம் இருந்ததோ அவன் அதை உதறி தள்ளிய பின் அதை மற்றவன் எடுத்துக் கொள்ள முடியாது. அவனவன் செய்த கர்மாக்களின் பலனுக்கு ஏற்பவே அவனவனுக்கு எதுவும் கிடைக்கும். அதை கேட்டுக்கொண்டு இருந்த என் தந்தை பாபாவின் உதியை எடுத்து அவனை தேள் கொட்டிய இடத்தில் தடவினார். அவன் குணம் அடைந்தான்.

என் தந்தை மாயாவுக்கு மயங்கவில்லை என்றாலும் அதற்குப் பின்னர் அவரால் அதிக செல்வத்தைப் பெற முடியவில்லை. லஷ்மி தேவி அவரிடம் இருந்து விலகியேஇருந்தாள் என்பது ஒரு தனிக் கதை.

These experiences are already posted in Shirdisaibabakipa website and are in random order .Devotees who wish to read them in English can click Here.Posted .


Click On Link Below To Read.

1. Live Experiences Of The Tarkhad Family-Chapter 1.

2. Live Experiences Of Tarkhad Family Chapter 2.

3.Live Experiences Of Tarkhad Family Chapter 3.

4.Live Experience Of Tarkhad Family Chapter 4.

5. Live Experience Of Tarkhad Family Chapter 5.

6. Live Experience Of Tarkhad Family Chapter 6

7.Live Experience Of Tarkhad Family Chapter 7

8.Live Experience Of Tarkhad Family Chapter 8.

9.Live Experience Of Tarkhad Family Chapter 9.


( Translated into Tamil by Santhipriya )
Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.