Friday, March 12, 2010

Live Experiences Of The Tarkhad Family With Sai Baba-Granting Mukti (salvation) to Tiger.

இந்த சம்பவம் 1918 ஆம் ஆண்டு நடந்தது. என்னுடைய தந்தை அப்போது பாபாவுடன் இருந்தார். இந்த சம்பவம் நடந்து முடிந்து அடுத்த வாரமே பாபா சமாதி அடைந்து விட்டார். எப்போதும் போல அன்றும் துவாரகாமாயியில் பாபா அமர்ந்தபடி பேசிக்கொண்டு இருக்கையில் வெளியில் பெரும் கூச்சல் எழுந்தது. என்னவென்று அனைவரும் சென்று பார்த்தபோது, நான்கு பேர் சங்கிலி போட்டு கட்டி வைத்திருந்த ஒரு புலியை ஒரு மாட்டு வண்டியில் ஏற்றி அங்கு அழைத்து வந்து இருந்தனர். அவர்களில் ஒருவர் பாபாவிடம் நெருக்கமாக இருந்த மாதவராவ் தேஷ்பாண்டே என்பவரிடம் சென்று தங்களுக்கு அந்த புலிதான் சொத்து எனவும், இடமிடமாக சென்று அதன் வித்தையைக் காட்டியே தாங்கள் பிழைப்புக்கு வழி செய்து கொள்வதாகவும் , அது தற்போது உடல் நலமின்றி படுத்து விட்டதினால் பாபாவின் மாயசக்தியைப் பற்றிக் கேள்விப்பட்டு , பாபாவின் அருளினால் அதை குணப்படுத்திக் கொள்ளலாம் என சீரடிக்கு வந்துள்ளதாகவும் கூறினார்கள் .

அவரும் பாபாவிடம் சென்று அது குறித்துக் கூற பாபாவும் அந்து புலியை உள்ளே அழைத்து வருமாறு கூறினார். அவர்களும் மிகவும் ஜாகிரதையாக அதை பாபாவிடம் நடத்தி அழைத்து வந்தனர். பாபாவின் எதிரில் வந்த புலி அவர் முன் மண்டி இட்டவாறு அமர்ந்து அவரை நமஸ்கரித்தது. அவ்வளவுதான், அது பெரும் கர்ஜனைப் புரிந்தது, கர்ஜனை புரிந்து விட்டு கீழே விழுந்தது இறந்து விட்டது. அனைவரும் அதற்க்கு வருந்தினர்.ஆனாலும் வந்தவர்கள் அதை இப்போது என்ன செய்வது என பாபாவிடம் கேட்டபோது அவர் அதை அருகில் இருந்த சிவன் ஆலயத்தில் உள்ள நந்திக்கு பக்கத்தில் புதைத்துவிடுமாறு கூறினார். அவர்களும் அதை செய்ய அந்த ஊரில் இருந்த அனைவரும் அங்கு வந்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அவர்கள் அனைவரும் சென்று விட்டபின் அத்தனை நிகழ்ச்சிகளையும் பாபாவின் அருகில் இருந்தவாறு பார்த்துக் கொண்டு இருந்த என்னுடைய தந்தை பாபாவிடம் மரணம் அடையும் முன் புலி அது எதோ சம்பாஷணை செய்ததை உணர்ந்தார். அது குறித்து அவர் பாபாவிடம் கேட்டபோது பாபா ''அந்த புலி மிகவும் அவதிப்பட்டபடி இருந்தாது. ஆகவே தன்னால் இனியும் வாழ முடியாது என எண்ணி தனக்கு முக்தி கிடைக்க வழி செய்யுமாறு கேட்டதினால், தானும் அதற்கு தன்னுடைய கடவுளிடம் பிராத்தனை செய்ய , அதற்கு பிறப்பும் இறப்பும் அற்ற முக்தி கிடைத்து விட்டது'' என கூறினாராம். அதைக் கேட்ட என்னுடைய தந்தை பெரிதும் வியப்பு அடைந்தார். அதுவரை அவர் மனிதப் பிறவிகளுக்கு மட்டுமே பாபா அருளியதைப் பார்த்து இருந்தார். ஆனால்அன்றோ புலி போன்ற ஒரு மிருகத்திற்கு கூட பாபா அருள் புரிந்ததைக் கண்டு வியந்தார்.

These experiences are already posted in Shirdisaibabakipa website and are in random order .Devotees who wish to read them in English can click Here.Posted .


Click On Link Below To Read.

1. Live Experiences Of The Tarkhad Family-Chapter 1.

2. Live Experiences Of Tarkhad Family Chapter 2.

3.Live Experiences Of Tarkhad Family Chapter 3.

4.Live Experience Of Tarkhad Family Chapter 4.

5. Live Experience Of Tarkhad Family Chapter 5.

6. Live Experience Of Tarkhad Family Chapter 6

7.Live Experience Of Tarkhad Family Chapter 7

8.Live Experience Of Tarkhad Family Chapter 8.

9.Live Experience Of Tarkhad Family Chapter 9.

10.Live Experience Of Tarkhad Family Chapter 10.

( Translated into Tamil by Santhipriya )
Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.