Saturday, August 14, 2010

Sai Baba's blessing-Experience by Sivasankari.


அன்பானவர்களே,
நான் அடிக்கடி வெளி ஊர்களுக்குச் சென்று கொண்டே இருப்பதினால் பக்தர்கள் அனுப்பி உள்ள பல அனுபவக் கட்டுரைகளை உடனுக்குடனே பிரசூரிக்க முடியவில்லை. ஆனாலும் நான் இதுவரை பிரசூரித்து உள்ளவற்றை படித்து மகிழுங்கள். அவற்றில் ஒன்று இது .
மனிஷா

சிவசங்கரியின் சாயி அனுபவம்
நான் இரண்டு மாதங்கள் முன்னால் என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரரின் வீட்டுக்குச் சென்று கொண்டு இருந்தேன். வழியில் ஒரு வண்டியில் சாயிபாபா படத்தை வைத்துக் கொண்டு பக்தர் ஒருவர் சென்று கொண்டு இருந்தார். நான் வண்டியை நிறுத்தி அவருக்கு எதுவும் காசு தரவில்லை. தூரத்தில் இருந்தபடியே மனதில் சாயியை வணங்கி விட்டு அங்கிருந்து சென்றேன். ஆனால் சற்று தூரம் சென்றதும் மனம் பதைபதைத்தது. அவருக்கு எதுவும் நான் பணம் தந்து இருக்கலாமோ? அப்படி யோசிக்கையிலேயே அது போலவே இன்னொரு வண்டி வருவதைப் பார்த்தேன். வண்டியை நிறுத்தி அவருக்கு ஐந்து ரூபாய் தந்தேன் . அதை முதலில் பெற்றுக் கொண்டவர் என்னிடமே அந்தப் பணத்தை திருப்பித் தந்துவிட்டு பாபாவின் உடியையும் தந்துவிட்டுக் கூறினார் ' இந்த பணத்தைப் பெற்றுக் கொள்ள பாபா என்னை அனுமதிக்கவில்லை. ஆனால் பாபா உங்களுக்கு நிறைய செல்வம் தருவார். அது மட்டும் அல்ல உன் வாழ்கையில் நீ இழந்ததை எல்லாம் அவர் மீட்டுத் தருவார் ' . அதைக் கேட்ட எனக்கு அப்படியே மயிர்க் கூச்சல் எடுத்தது.

இன்னும் ஒரு அனுபவம். எனக்கு பிறந்தநாள் வந்தது. என் நட்ஷத்திரப்படி வந்த பிறந்த நாள் அது. நான் சாயியின் ஆலயத்துக்குச் செல்ல எண்ணினேன். ஆனால் வேலை மிகுதியால் ஆலயம் செல்ல முடியவில்லை. வழியில் என்னுடைய மாமா ஒருவர் வந்தார். வெகு நாட்களாக அவர் வீட்டுக்குப் போகவில்லை என்பதினால் அவர் தன் வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கு அவர் வீட்டில் என் தந்தையும் இருந்தார். என்னுடைய மாமியும் அப்போதுதான் சத்யநாராயணா பூஜை செய்து முடித்து இருந்தார். பூஜை முடிந்து எனக்கு பிரசாதம் தந்தாள். அதைக் கண்ட என் மனம் மகிழ்ந்தது. என்னால் சாயியை பார்க்க அவர் ஆலயம் செல்ல முடியாவிடிலும் அவர் எனக்கு தானே அழைத்து பிரசாதம் தந்துவிட்டாரே.

(Translated into Tamil by Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.