Wednesday, February 16, 2011

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees- Part -7.




அன்பானவர்களே
இன்று நான் சீரடி பாபாவின் பக்தர்கள் சிலரின் அனுபவத்தை வெளியிடுவதில் பெருமைபடுகிறேன்.
மனிஷா

சாயி பாபாவுடன் அனுபவம்  -1
நான் சீரடிக்கு சமீபத்தில் சென்று இருந்த போது எனக்குக் கிடைத்த அனுபவம் இது. நான் சாயியின் தரிசனத்தை முடித்துக் கொண்டப் பின் துவாரகா மாயி வழியே நடந்தவாறு நினைத்தேன் " சாயி மற்றும் மகாவதார் பாபா போன்ற இருவருமே தம்மிடம் நம்பிக்கை கொண்டுள்ள பக்தர்களுக்கு உதவுவதற்கு ஓடோடி வருகிறார்களே. அவர்களின் கருணையை என்னவென்று சொல்வது ?". அடுத்த நிமிடம்  மலாசியா நாட்டை சேர்ந்தப் பெண்மணி ஒருவர் என்னிடம் வந்தார். என்   கையில் ஒரு புத்தகத்தை தந்து  விட்டு இது உனக்கு சாயியின் பரிசு என்று கூறிவிட்டுச் சென்று விட்டார். அதைக்  கண்ட நான் அதிர்ந்து போனேன். அந்த புத்தகத்தின் மேல் அட்டையில் போட்டு இருந்தது "மகாவதார் பாபா யார்?" அந்த புத்தகம் மலாசியாவில் நடக்க இருந்த விஜயதசமி பண்டிகைக்கான அழைப்பு இதழ். அந்த புத்தகத்தில் எழுதப்பட்டு இருந்தவை அற்புதமானவை. அந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் எனக்கே ஆச்சர்யமாக உள்ளது.  அந்த மகான்கள் மாபெரும் மனிதர்களே.  
சாயிபாபா தான் நம்முடன் இருப்பதை நமக்குக் காட்டுகிறார்.                                   
ஓம் சாயிராம்
----------
நான் ஒரு முறை விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்குச் சென்று கொண்டு இருந்தேன். அந்த ரயில் விஜயவாடா வழியே செல்லும் ஆகவே அந்த ரயிலில் இருந்து விஜயவாடாவில் இறங்கி அடுத்த ரயிலை அதே இடத்தில் பிடிக்க வேண்டும். அடுத்த ரயில் வர நான்கு மணி நேரம் ஆகும். ஆகவே நான் அங்கு நான்கு மணி நேரம் அமர்ந்து இருப்பதற்குப் பதில் விஜயவாடாவில் லப்பிபெட் என்ற இடத்தில் இருந்த பாலாஜி ஆலயத்தை பார்த்து விட்டு வரலாம் எனக் கிளம்பிச் சென்றேன். வழியில் ஒருவரை பாலாஜி ஆலயம் எங்கு உள்ளது என்று  கேட்டபோது அவர் தனக்கு அது தெரியாது எனவும் ஒரு சாயி பாபா ஆலயம்தான் அங்குள்ளது எனக் கூறி அங்கு செல்லும் வழியையும் கூறினார். எனக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. அங்கிருந்த சாயி பாபாவின் ஆலயம் சென்று அவரையும் தரிசித்தப் பின் பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டு அங்கேயே பாலாஜி ஆலயம் குறித்த விவரத்தையும் கேட்டு அறிந்து கொண்டும் அங்கும் சென்றுவிட்டு ரயில் நிலையத்துக்கு திரும்பினேன்.
ஓம் சாயிராம்
 (T . K . மதுமூர்த்தி)

சாயி பாபாவுடன் அனுபவம்  -2 
வாழ்கையை  மாற்றி  அமைத்த சம்பவம் 

2005 ஆம் ஆண்டு அது. எனக்கு நல்ல நல்ல மாப்பிள்ளை கிடைக்காததினால் திருமணம் ஆகவில்லை. அதனால் மனம் உடைந்து இருந்தேன். அப்போது ஒரு நாள் சாயிபாபாவின் ஆலயத்துக்குச் சென்று எனக்கு இனி கிடைக்க உள்ள மாப்பிள்ளை உன்னை சேர்ந்தவராக இல்லை என்றால் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என அழுதேன். 
ஆலயத்தை விட்டு வந்தேன். ஒரு மாதம் ஆகியது.  ஒரு நாள் இரவு படுக்கப் போகும் முன்  'எனக்கு   வர உள்ள   மாப்பிள்ளையை  நீ  என் கனவில் காட்டுவாயா' என நான் பாபாவிடம் வேண்டிக் கொண்டேன். அன்று இரவு என் கனவில் பாபா  ஒருவரை பாபா எனக்குக் காட்டினார். 
நான் காலை விழித்து எழுந்தேன். அந்த கனவைப் பற்றி என் சகோதரியிடம் கூற  அவள் என்னிடம் அந்த கனவை நிஜமாக நடக்கும் என நம்பிக் கொண்டு இருக்குமாறு அறிவுறுத்தினாள்.
ஒரு நாள் நான் என்னுடைய சகோதரியுடன் டெல்லியில் இருந்த ஓபராய் ஹோட்டலுக்குச் சென்று இருந்தேன். அங்கு என்னுடைய சகோதரியின் கணவருடைய ஒரு நண்பரையும் அவர்கள் விருந்துக்கு அழைத்து இருந்தார்கள். அவர் தன்னுடைய காதலியுடன் அங்கு வந்து இருந்தார். நாங்கள் ஒருவரை ஒருவர் பரிச்சயம் செய்து கொண்டு இருந்தபோது அந்த நண்பரைப் பார்த்து வியந்தேன். அவரைதான் பாபா எனக்கு கனவில் காட்டி இருந்தார். ஆனால் அவரோ தான் திருமணம் செய்து கொள்ள இருந்த காதலியுடன் அங்கு  வந்து இருக்கின்றாரே? அப்படியானால் என்னுடைய வாழ்கை???
சில நாட்கள் கழிந்தன. அவரை நான் ஒரு ஜிம்மில் சந்தித்தேன். அவருடைய காதலி வேறு இடத்துக்கு மாற்றலாகி சென்று விட்டாளாம். ஆனாலும் அவள் நினைவை தன்னால் மறக்க முடியவில்லை என்றும்  அவருடைய திருமணத்துக்கு அவருடைய தந்தை சம்மதிக்கவில்லை  என்றும் கூறினார் . நாங்கள் நண்பர்களாக ஆனோம். நானோ என் திருமண விஷயத்தை அவரிடம் கூறவில்லை.
நான் ஒருமுறை சாயி சரித்திரத்தை படித்துக் கொண்டு  இருந்தேன் . அதன்பின் சாகேத்தில் இருந்த சாயி ஆலயத்துக்கு சென்று அங்கு நடந்து கொண்டு இருந்த பஜனையில் கலந்து கொண்டு நானும் பாடத் துவங்கினேன். அந்த பஜனையின் இடையில் அந்த நண்பரின் பெயரையும் கூறி பஜனை செய்வதாக இருந்தேன். ஆனால் அதிசயமாக அவர் பெயர் தானாகவே இரண்டு முறை அங்கு பாடிய  அந்த பஜனை பாடலில் வந்தது.
அதன் பின் இன்னும்  சில காலம் கழிந்தது. நான் என்னுடைய ஜாதகத்தையும் அவருடைய ஜாதகத்தையும் ஜோதிடரிடம் சென்று காட்ட அவர் 36 குணங்களில் 34 குணங்கள் நன்றாகவே பொருந்தி உள்ளதாகக் கூறினார். இன்னும் சில காலம் கழிந்தது. அவர் மெல்ல மெல்ல அவருடைய காதலியை மறக்கத் துவங்கியபோது நான் என்னுடைய கதையை அவரிடம் எடுத்துக் கூற அடுத்த ஒன்பது மாதங்களுக்குள் அவரே எனக்கு மாப்பிள்ளையாக கிடைத்தார்.
நான் உள்ளம் உருகி பாபாவை நினைத்தேன். அவர் கருணையினால்தானே எனக்கு கனவில் வந்தவரே கணவனாகக் கிடைத்தார்!
நன்றி
சாரு
  
சாயி பாபாவுடன் அனுபவம்  -3
சீரடி விஜயத்தின் மகிமை 


நான் அமெரிக்காவில் மூன்று வருடங்களாக இருந்தேன். என்னுடன் என் சித்தி நீரா என்பவளும் அவளுடைய கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளும் இருந்தனர். அவளுக்கு விசா முடிவடைய இருந்தது. உரிய நேரத்தில் விசா நீடிப்பும் வரவில்லை. அதுவோ டிசம்பர் மாதம், கிருஸ்துமஸ் பண்டிகை துவங்க இருந்த நேரம் . விசா நீடிக்கவில்லை என்றால் இந்தியாவுக்கு திரும்ப வேண்டும். இனி ஜனவரியில்தான் அங்குள்ள அலுவலகங்கள் திறக்கும். ஆகவே குழந்தைகளுடைய படிப்பும் பாழாகிவிடும் . என்ன செய்வது எனப் புரியவில்லை. நாங்கள் அப்போது இந்தியாவுக்கு வந்து இருந்தோம். அப்போது அமெரிக்காவில் இருந்த அவள் எங்களை தொடர்ப்பு கொண்டு ஒரு சாயி பாபாவின் சிலையை (பிரதிமா) வாங்கிக் கொண்டு வருமாறு கூறி இருந்தாள். அவள் கேட்டபடி ஒரு சிலையை வாங்கினோம். அதை என்னுடைய சகோதரன் எடுத்துக் கொண்டு அமெரிக்கா செல்ல இருந்தான்.
கிருஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு நாள் முன்பு என்னுடைய தாயாருக்கு என் சித்தியிடம் இருந்து தொலைபேசி வந்தது. அதில் அன்றுதான் அவளுக்கு அவளுடைய விசா நீடிப்பு கிடைத்ததாக மகிழ்ச்சியான செய்தியை எனக்குக் கூறுமாறு  கூறினாள். ஆக பொம்மை உருவில் இருந்த பாபா தான் அவளிடம் போய் சேரும் முன்னரே  அவளுக்கு அங்கு தங்க ஏற்பாடு செய்து விட்டார் என்பது அவருடைய மகிமை அல்லவா?
ஓம் சாயிராம்

இரண்டாவது சம்பவம்
என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரி இஷானா என்பவள் பொறியியல் கல்வி படித்துவிட்டு வேலை இன்றி இருந்தாள். என்னுடைய தாயார் அவளுடைய தாயாரிடம் எனக்கு அவளுடைய விண்ணப்பத்தை அனுப்பி என் மூலம் ஏதாவது வேலை கிடைக்குமா என தேடித் பார்க்கலாம் என்று கூறி விட்டார். ஆகவே அவளுடைய விண்ணப்பத்தை பாபாவை வேண்டிக் கொண்டு நான் டெல்லியில் இருந்த என் நண்பரான சிரிஷுக்கு செப்டம்பர் மாதம் அனுப்பினேன். ஆனால் அவளுக்கு அங்கு வேலை தரத் தகுதியானவளாக இல்லை என்று அவர்  கூறி விட்டார் . நான் மீண்டும் டெல் என்ற கம்பனிக்கு அவள் விண்ணப்பத்தை அனுப்பினேன். அப்போது அங்கு வேலை இல்லை என்பதினால் மீண்டும் அடுத்த டிசம்பரில் பார்க்கலாம் என்று கூறி விட்டார். அன்றே இஷானாவின் தாயார் சீரடிக்கு கிளம்பிச் சென்றார். என்ன அதிசயம் அவள் மகளுக்கு பெங்களூரில் இருந்து தேர்வுக்கு வருமாறு அவர் தாயார் சீரடிக்கு கிளம்பிய அன்றே கடிதம் வந்தது. பின்னர் அதில் அவள் தேர்வும் அடைந்து டிசம்பர் மாதம் 27 ஆம் தேதியன்று வேலையிலும் சேர்ந்தாள். அவள் உடனே எனக்கு போன் செய்து அந்த சேதியைக் கூறினாள். அனைத்தும் பாபாவின் மகிமைதானே.
பிரத்யாஷா
(Translated into tamil by santhipiriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.