Wednesday, December 22, 2010

Sai in Dream Experience-1




சாயிபாபாவின் பக்தர் ராமாராவின் அனுபவம்

நான் என்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் பெங்களூருக்கு கோடை விடுமுறையைக் கழிக்க வந்தோம் . எனக்கு எப்போதுமே பாபா என்னுடன்தான் இருக்கின்றார் என்ற உணர்வு உண்டு. ஒருநாள் விடியற்காலை என்னுடைய கனவில் பாதி கண்களை மூடிக்கொண்டு இருந்த பாபாவின் சிலையை நெற்றியில் பெரிய குங்கும பொட்டு வைத்துக் கொண்டு உள்ள காட்சியில் பார்த்தேன். அந்த மாதிரியான குங்குமப் பொட்டு உள்ள பாபாவின் சிலையை அதிகம் காண முடியாது. அதைக் கண்ட நான் காலையில் எழுந்து விட்டு இன்று நான் எங்கேயாவது பாபாவை அந்த காட்சியில் நிச்சயம் பார்ப்பேன் எனமனதில் நினைத்தேன்.
அன்று மாலை நாங்கள் இன்டீரியர் டிசைனரிடம் சென்றோம். அவர் எங்களை தான் டிசைன் செய்து கொடுத்து இருந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று காட்டினார். அந்த வீட்டில் பெரிய பூஜை அறை இருந்தது. அதில் நான் காலையில் கனவில் கண்ட அதே காட்சியில் பெரிய குங்குமப் பொட்டுடன் அதே உருவில் பாபாவின் சிலை இருக்க நான் அளவில்லா ஆனந்தம் அடைந்தேன். பாபா என்னுடன் என்றும் இருக்கின்றார் என நான் நினைப்பது உண்மை அல்லவா !
(Translated into Tamil by Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.