Wednesday, October 27, 2010

Power Of Udi-Experience by N.Priya Part - 4


என். பிரியா என்ற சாயி பக்தையின் உடி அனுபவம்.
என்னுடைய தாயார் ஒரு நாள் கீழே விழுந்து விட்டாள். கால் வீங்கி விட்டது. நடக்க முடியவில்லை. தாங்க முடியாத வலி. நாங்கள் டாக்டரை அழைத்தோம். ஆனால் என்னுடைய தாயார் அவரிடம் காட்ட மறுத்து விட்டாள். அவள் சாயிபாபாவின் உடி தன்னுடைய நோயை தீர்க்கும் என்று கூறி விட்டாள் . ஏன் எனில் அவள் பாபாவின் தீவீரமான பக்தை.

ஆகவே நாங்கள் அவளுக்கு அடி பட்ட இடத்தில் சாயியின் உடியைத் தடவி விட்டோம். உடியை தண்ணீரில் கலந்து கொடுத்தேன். அடுத்த நாள் காலை அவள் எங்களுக்கு முன்னரே எழுந்து அத்தனை வேலைகளையும் செய்யத் துவங்கினாள். அது சாயி சரித்திரத்தில் சாமாவின் சகோதரனின் மனைவிக்கு நடந்த அதிசயம் போல இருந்தது. என்னுடைய தாயார் அவளுக்கு எந்த சிறு வலி கூட இல்லை என்றாள் . பாபாவின் உடியின் மகிமையை என்ன என்று கூறுவது ?
(Translated into Tamil by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.