Friday, November 20, 2009

Blessing Of Sai Vrat .

அன்பானவர்களே,
பாபா எப்படி எல்லாம் தன்னிடம் முழுமையாக பக்தி கொண்டவர்களின் துயரை நீக்குகின்றார் என்பதற்கு உதாரணம் என். ப்ரியாவின் இந்த கதை.
மனிஷா
சாயிராம் சகோதரி மனிஷா
அனைவருக்கும் இந்த சாயி தினத்தன்று வணக்கம். முதலில் நீங்கள் சாயினாதருக்கு செய்து வரும் சேவைக்கு நன்றி கூறுகின்றேன். உங்களுடைய இணைய தள செய்திகளினால் சாயிநாதர் மீதான பக்தி அனைவருக்கும் அதிகரித்து வருகின்றது. என்னுடைய கதையை படிப்பதின் மூலம் சாயிநாதர் மீதான பக்தி அனைவருக்கும் இன்னமும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

எனக்கு சாயி விரதத்தினால் ஏற்ப்பட்ட அனுபவத்தை அனைவரிடமும் பகிர்ந்து கொள்கின்றேன்.
நான் சாயி விரதத்தை துவக்கி ஒரு வாரம் இருக்கும். என்னுடைய தோழி ஒருவளை பார்க்கச் சென்று இருந்தேன். அவள் மிகவும் சோகமாக இருந்தாள். காரணம் அவளுக்கு திருமணம் ஆகவில்லை, எந்த வரனும் அமையவில்லையே என அவளுடைய பெற்றோர் மிக்க வருத்தத்தில் இருந்தனர். அவளுடைய பெற்றோர்கள் துக்கமாக இருந்ததினால் அவளும் துக்கமாக இருந்தாள்.
நான் அவளை அடுத்த வார வியாழக் கிழமையில் இருந்து என்னுடன் சேர்ந்தது சாயி விரதம் ஆரம்பிக்குமாறு கூறினேன். அதை அவளும் உடனே ஏற்றுக்கொண்டு சாயி விரதத்தை என்னுடன் துவக்கினாள். இருவரும் சேர்ந்தே விரத பூஜையை செய்தோம் .
வியாழக் கிழமையில் மயிலாப்பூரில் இருந்த சாயி பாபா கோவிலுக்கும் சென்று வந்ததோம் . அடுத்த சில வாரங்கள் விரதம் தொடர்ந்தது.
சாயி விரதம் முடிந்த ஒன்பதாவது நாள் அன்னதானமும் மயிலாப்பூரில் இருந்த சாயி பாபா கோவிலில் செய்தோம். அதற்கு அடுத்த வாரம் அவள் வீட்டுக்குப் போய் இருந்தபொழுது அவளுடைய திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது என்ற மகிழ்ச்சியான செய்தியை அவள் கூறினாள்.
அதைக் கேட்ட நான் என்னுடைய சாயிநாதர் என்னுடைய தோழிக்கு காட்டி உள்ள கருணையை எண்ணி மகிழ்ச்சியால் குதித்தேன். அவளுக்கு திருமணம் ஆகி தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள். எனக்கு பூரண நம்பிக்கை உள்ளது, பாபா தன்னுடைய பக்தர்களை என்றும் கைவிட மாட்டார் என.
என். பிரியா
(Translated into Tamil by Santhipriya)

Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.