IMPORTANT NOTICE FOR ALL READERS>>

Dear readers,
I have received few mails from readers indicating that they cannot view blog with Tamil Script .I would like to suggest those readers who are not able to see Tamil Script to first download the Tamil font which I am giving here the link to download.Once they have downloaded the font they should save it in Control Panel in Font folder and restart their computer .After the font installation I hope readers can read the article in Tamil script.Those readers who still do not see the script after downloading the font than please contact me at this ID.
Download TAMIL FONT BY CLICKING HERE
Interact with other Sai devotees across the globe in our SaiKripa Family of Yahoo Group Shirdisaibabakripa by clicking HERE.

Saturday, November 7, 2009

Do not eat and excrete this.


சாப்பிட்டுவிட்டு வெளியேற்றி விடாதே

அன்பானவர்களே
பாபாவுடன் மிக நெருங்கிய பக்தர்களாக இருந்த சிலருடைய வாழ்கை பற்றியும் , அவர்களுடைய வாழ்வில் பாபா செய்த விளையாட்டுக்களையும் இப்போது படிக்கலாம் .
பாபாவின் மிக நெருங்கிய பக்தர்களாக இருந்தவர்களில் பையாஜி அப்பாஜி படேல் என்பவர் முக்கியமானவர் । பிர்கொன் என்ற இடத்தில் வருமானத்துறை மற்றும் போலீசில் இருந்தவர், ஒரு நிலத்தின் சொந்தக்காரர் அவரும் சீரடியில்தான் தங்கி இருந்தார் அவர் குறித்து சாயீ சரித்திரத்திலும் குறிப்பிடப்பட்டு உள்ளதால் அவர் பாபாவின் பரிபூரண ஆசி பெற்றவர் எனத் தெரிகின்றது . அவர் வீட்டிற்கு பாபா தினமும் வந்து பிட்சை பெற்றுக்கொண்டு சென்றதினால் அவருக்கு பாபா பற்றி எல்லா வயது முதலிலேயே தெரியும் . அவர் வீட்டிற்க்கு பாபா தினமும் எட்டு முறை பிட்சை கேட்டு செல்வதுண்டு . அது சுமார் எட்டு வருடம் நடந்தது.அடுத்த மூன்று வருடங்கள் தினமும் பாபா பிட்சைக்கு நான்கு முறையும் , அதற்கு அடுத்த பன்னிரண்டு வருடம் தினமும் இரண்டு முறையும் , அடுத்த பன்னிரண்டு வருடம் தினமும் ஒரே ஒரு முறையும் சென்று பிட்சை பெற்று வந்தார் .

பையாஜிக்கு எழு வயதான பொழுது அவர் பாபாவிற்கு வேலை செய்யத் துவங்கினார். அது 1896 ஆறாம் ஆண்டு .ராமநவமியில் இந்துக்களை தனக்கு சந்தனம் எட்டு வணங்குமாறும் , முஸ்லிம்களை உர்ஸ் தினத்தன்று தன எதிரில் அமர்ந்து குரான் ஒதுமாரும் கூறுவார் . ராமநவமி துவங்கியது . இந்துக்களை தனக்கு சந்தனம் இட்டும் , முஸ்லிம்களை குரான் படிக்குமாறும் பாபா கூறினார் . அந்த நிகழ்ச்சி அப்பா குல்கர்னி என்பவர் நடத்தினார் . அவர் ஒரு கையாடல் வழக்கில் மாட்டிக்கொண்டு பாபாவின் அருளினால் தப்பித்தவர் . பாபாவின் உடலில் இந்துக்கள் சந்தனம் தடவ அதை அவர் எடுத்து மசூதியின் சுவற்றில் தடவ மற்ற முஸ்லிம்களும் அதுபோலவே செய்தனர் . அதன் பின் பாபா அந்த சந்தனத்தை எடுத்து மகால்ச்பதி என்பவர் நெற்றியிலும் மற்ற முஸ்லிம்களின் நெற்றியிலும் இட்டார் . மகாலச்பதியும் பாபாவின் நெற்றியில் சந்தனப்பொட்டு வைத்தார் .
பாபா அதன் பின் நமாஸை படிக்க சொல்லிவிட்டு தானும் நமாஸ் படித்தார் . எது சனிக்கிழமைகளில் நடந்தது . அதன் பின் அனைவருக்கும் வழங்க பேடா என்ற இனிப்பு வந்ததும் அதை அனைவருக்கும் பாபா வழங்கினார் . பாபா உர்ஸ் கொண்டாடுவதில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கருத்துவேறுபாடு வரும் எனத் தெரிந்து இருந்ததினால்தான் இந்துக்கள் மற்றும் முஸ்லிம் என அனைவருக்கும் சந்தனம் இட்டார் .பையாஜியின் தந்தையான நானா சாஹிப் சங்டோர்கரே அந்த செலவுகளை ஏற்றுக்கொண்டார் .

பையாஜிக்கு வயது பதினொன்று ஆனபொழுது ஒருநாள் பாபா அவரை மாடு மேய்க்கப் போகவேண்டாம் எனத் தடுத்துவிட்டார் . திடீரென அனைவர் மீதும் கோபம் கொண்டு அங்கு இருந்த நான்கு பாத்திரங்களை கிழே போட்டு உடைத்தார் அது வர உள்ள எதோ கேட்ட காரியத்தை உணர்த்துவது போல இருந்தது . தன்னுடைய பின் கையில் பூம் பூம் என ஊதிக்கொண்டார் . அப்போது மணி ஒன்பது அல்லது ஒன்பதரை இருக்கும் . பையாஜியின் தந்தையின் சகோதரியின் முப்பது வயதான மகன் ஜுரத்தினால் இறந்துவிட்ட செய்தி வந்தது .

அடுத்த பதினான்கு வருடங்கள் பாபா பையாஜிக்கு தினமும் நான்கு ரூபாய் தந்து வந்தார் । அவரிடம் பாபா தான் தந்த பணத்தை எவருக்கும் கடன் தரவேண்டாம் எனவும் , அதை எவருக்கும் இனாமாகக் கூட தரவேண்டாம் எனக் கூறி இருந்தார் . அதை சாப்பிட்டுவிட்டு வெளியேற்றி விடாதே என்றாராம் . அதைக் கொண்டு பையாஜி 84 ஏக்கர் நிலம் வாங்கினார் . அதன் பின் என்ன நடந்தது ? அடுத்த கட்டுரையில் அது வரும் .

(Translated into Tamil: Santhipriya)

Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

0 comments:

LIVE TELECAST FROM SAMADHI MANDIR

 


back

 

Message Here.