Thursday, November 12, 2009

Fakir has not premitted me to give you .

உனக்குத்தர கடவுள் எனக்கு அனுமதி தரவில்லை

நாக்கேயின் அம்மாவிற்கு ஒரே கவலை. இங்கிலாந்தில் புவியியல் (ஜுவாலஜி ) படித்துவிட்டு இன்ஜினியராக பணி புரிந்தவர் எந்த வேலையிலும் நிலைக்காமல் இடமிடமாக மாறிக்கொண்டே இருக்கின்றானே எனக் கவலை. அவர் முதலில் சீரடிக்கு வந்து நான்கு நாட்கள் தங்கிய பின் பர்மா, பாலகாத் முதலிய இடங்களுக்குச் சென்றபின் மூன்று மாதங்கள் வேலையில் இருந்துவிட்டு, மீண்டும் வேலையை விட்டுவிட்டு நாக்பூருக்கு சென்றார். அதன் பின் மீண்டும் சீரடிக்கு வந்து விட்டார். சீரடிக்கு மனைவியுடன் வந்து நான்கு மாதங்கள் தங்கியப் பின் மீண்டும் நாக்பூருக்கு சென்று விட்டார். இப்படி அவருடைய வாழ்க்கை தொடர்கதையாக இருந்தது.
ஒருமுறை அவரை சீரடிக்கு வருமாறு பாபா அழைத்தார் என சாமா அவர்கள் கடிதம் எழுத அவர் சீரடிக்குச் சென்று சுமார் பத்திமூன்று மாதம் இருந்தார். தனக்கு ஒரு வேலை இல்லையே என்ற கவலை சிறிது கூட இல்லை. பரதேசி போன்ற வாழ்வு அவருக்குப் பிடித்து இருந்தது.
ஒருநாள் பாபா பலருக்கும் தன்னுடைய அங்கியை கொடுப்பதை தூரத்தில் இருந்து பார்த்தவண்ணம் இருந்தார். மனதில் தோன்றியது. 'எனக்கும் ஒன்று கொடுத்தால் நான் அதை பஜனைகள், பிரார்த்தனைகளின் பொழுது போட்டுக் கொள்ளலாமே'.
பாபா அனைவருக்கும் குர்பானியை ( அங்கி) தந்தபின்னும் அவரிடம் இன்னமும் சிறிது குர்பானி இருந்தது. அனைவரும் சென்றபின் நார்கேயை அழைத்த பாபா அவர் தலையை தட்டிக் கூறினார் ' இந்த பரதேசியை தவறாக நினைக்காதே. அந்த பரதேசி ( கடவுள்) உனக்கும் ஒரு குர்பானியைத் தர எனக்கு உத்தரவு தரவில்லையே. என்ன செய்வது?'
நார்கே அதிசயித்து நின்றார். பாபா தன் மனத்தை அத்தனை தூரத்தில் இருந்தும் அறிந்துகொண்டு விட்டாரே!

Courtesy:Translation into Tamil by Santhipriya.

Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.