Tuesday, September 21, 2010

I have been tied to the door of Butcher


சீரடியில் சிவனுக்கு  என்று  அர்பணித்த மாடு ஒன்றின் தலை மீது ஈட்டி உருவம் போடப்பட்டு இருந்தது. அது லேந்தி கார்டனுக்கு அடிக்கடி வந்து அங்கு இருந்த செடி கொடிகளை துவம்சம் செய்து கொண்டு இருந்தது. ஆகவே அதை பிடித்து 'யோலா' என்ற இடத்தில் இருந்த பிஞ்சரபோலே என்ற மாட்டுத் தொழுவத்துக்கு அனுப்பிவிட பாயாஜியும் மற்றவர்களும் ஏற்பாடு செய்தனர்.
அந்த மாட்டைப் பிடித்து பிக்கு மார்வாடி என்பவரிடம் தந்து அதை பிஞ்சரபோலேயில் விட்டு விட்டு வருமாறு அனுப்பினர். அன்று இரவு பாயாஜியின் கனவில் பாபா வந்தார் ' நீ என்ன உறங்குகின்றாயா?, என்னை வெட்டுவதற்காக இறைச்சி விற்பவனிடம் என்னை கட்டி வைத்து உள்ளனர்' என்று கூறினார்.
அதைக் கேட்டு விழித்து எழுந்தவர் ,தத்தியா படேல் மற்றும் மற்றவர்களுடன் கலந்து ஆலோசனை செய்ய அவர்கள் அனைவரும் மாட்டைத் தேடிக்கொண்டு 'யோலா'வுக்குச் சென்றனர். அந்த இடத்தில் இருந்த எந்த மாட்டுக் கொட்டகையிலும் மாடு இல்லை. ஆகவே இறைச்சி விற்பனை செய்பவர்களின் இடங்களை தேடிக்கொண்டு சென்றபோது அங்கு ஒருவனிடம் அந்த மாடு வெட்டப் படும் நிலையில் கட்டப்பட்டு இருந்தது. அதை பிக்கு மார்வாடியிடம் இருந்து பதினாலு ரூபாய்க்கு தான் வாங்கியதாக அவன் கூறினான். அவனிடம் இருந்து அந்த மாட்டை மீட்டு வந்து மார்வாடி மீது புகார் தர அவனுக்கு இரண்டு மாத கடுங்காவல் தண்டனை கிடைத்தது. இப்படியாக கொல்லப்பட இருந்த சிவன் கோவில் மாட்டை பாயாஜி மூலம் பாபா காத்தார்.
(Translation into Tamil : Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.